அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி அரசையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வந்தது என்று அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு இந்த https://youtu.be/bYJvDmdzYUw?si=4HR2DcF6hk3x42nP காணொளியை பாருங்கள்.

இது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்ததை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலி பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு ஒரு FIR போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய எந்த தனியார் பொறியியல் கல்லூரிகளும் தண்டிக்கப்படவில்லை. கடந்த வருடம் நடந்த ஆய்வின் போது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் கேட்டிருந்தது. ஆனால் இன்று வரை அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை.
இந்த முறை தற்பொழுது ஆய்வு துவங்கி இருக்கிறது. கடந்த முறை உத்தரவில் இருந்த வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது உத்தரவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்பொழுது மீண்டும் அவர்கள் மோசடி செய்யும் விதமாக ஆய்வு குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வுகள் நடக்குமா என்று தற்பொழுது சந்தேகம் எழுகிறது.
புதிதாக பதவி ஏற்ற TVK அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்று உறுதி அளித்துள்ளதால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் ஆய்வுகளில் அவர்களது வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். ஆய்வுகளை வீடியோ ரெக்கார்டிங் செய்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடுவீர்களா முதலமைச்சர் விஜய் அவர்களே!
Chief Minister of Tamil Nadu TVK Vijay
இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள TVK அரசு அவர்களின் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த வேலையை எந்த அரசியல் பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment