Sunday, February 6, 2022

ரூ.100 கோடி மணல் கடத்திய கல்லிடைக்குறிச்சி - கேரளா பிஷப், பாஸ்டர்கள் கைது

நெல்லை மணல் கடத்தல் வழக்கில் கத்தோலிக் கேரள பிஷப் உட்பட 6 பாதிரிகள் கைது 

நேற்று 05-02-2022 கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்துவ டயோசீசன் பிஷப்  சாமுவேல் மாரி ஏரேனியஸ் , பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ் , ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சம காலா, ஜோஸ் கலவியால் உட்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்,பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்

திருநெல்வேலி மாவட்டம் வற்றாத ஜீவ நதி தாம்ரபரணி 130 கிலோமீட்டர் சென்று கடலில் கலக்கிறது. 

இதைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஆற்று மணலை திருடி வந்தனர்,


 
திருநெல்வேலி மாவட்டம் ஆற்றின் கரையோரம் உள்ள பொட்டல் பகுதியில்  புல எண் 843, 300  ஏக்கர் மேற்பட்ட பட்டா நிலத்தில்  எம்சென்ட் குவாரி என்று மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கி (29.11.2019 to 28.11.2024)  சட்டவிரோதமாக  பல்லாயிரம் டன் ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்துள்ளனர், 
இதில் அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட  கேரளா மாநிலம் கோட்டயம் குண்டூர் செட்டி ரோடு பகுதியில் கத்தோலிக்க பாதிரியாராக இருக்கும் மனுவேல் ஜார்ஜ் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. 
மேலும் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி அப்போதைய அம்பாசமுத்திரம் சப் கலெக்டர் பிரதீப் தயாள் அவர்கள் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்
இதில் மணல் கொள்ளையில் உடந்தையாக அப்போது இருந்த கனிமவள உதவி இயக்குனர் சபிதா என்கிறவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார், அவரது கணவர் முகம்மது சமீர்  23 -1-21 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சென்னை ஐகோர்ட் கிளை மதுரையில் விசாரணைக்கு வரும்போது கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடந்து இருக்கிறது என்றால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவு மூலம். 
இந்த மணல் கொள்ளையில் தலைமறைவாக இருந்த பலரை தேடி வந்தனர் சிபிசிஐடி துறையினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று 05-02-2022 கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்துவ டயோசீசன் பிஷப்  சாமுவேல் மாரி ஏரேனியஸ் , பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ் , ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சம காலா, ஜோஸ் கலவியால் உட்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்,பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்


 திருநெல்வேலி தாமிரபரணியில் இருந்து மணல் கடத்தல் இத்தனை வருடங்கள் நடை பெற்றிருந்தாலும் உண்மையான குற்றவாளிகளான இதற்கு மூல காரணமாக இருந்த கத்தோலிக்க பிஷப் &  பாதிரியார்கள் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற கிறிஸ்தவ மிஷினரிகளின்  நிலங்களை அரசு ஆய்வு செய்து சட்ட விரோத செயல்கள் நடைபெற்றால் அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் கால் பதிக்காத குற்றங்களே இல்லை  என்று மக்கள் பேசி வருகின்றனர். 

போலியாக சேவை செய்கிறோம் என்று கட்டாய மதமாற்றம் செய்வது மட்டும் இவர்கள் வேலை இல்லை பல குற்றச் செயல்கள் மூலம் பெறப்படும் வருமானம் அதை வைத்து முழுமையான மதமாற்றத்திற்கு முதலீடாக பயன்படுத்தி வருகின்றனர் என்று தெளிவாகிறது.

https://epaper.dinakaran.com/c/55510552
https://epaper.dinakaran.com/c/66057727
https://epaper.dinakaran.com/c/61959362
2022 http://tm.dinakaran.com/c/66061659
www.dailythanthi.com/amp/News/Districts/2022/02/06012155/6-arrested-including-Kerala-Bishop.vpf
https://www.dinamalar.com/news_detail.asp?id=2696440

No comments:

Post a Comment