CM விஜய்க்கு சவால் விட்டு புலம்பிய சீமான் "திணறிட்டேன், எப்படி கொடுக்குறீங்கனு நானும் பார்க்கிறேன்"

பேசாதவானை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள் என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற, முள்ளிவாய்க்கல் நினைவேந்தலில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, ”பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள். பேசுபவனை தூக்கி எறிகிறீர்கள். அதிகாரம் வலிமையானது ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மக்கள் நம்மை தேடி வருவார்கள். தோல்வி என்பது நமக்கு இல்லை. வெற்றி ஒன்றே நமக்கு எல்லை. நல்ல வேலை என்னை தோற்கடித்து உள்ள வர விடாமல் விட்டு விட்டீர்கள். நான் மட்டும் உள்ளே போயிருந்தேன் அவ்வளவு பேரும் வெளியேதான் இருந்து இருக்கனும். நல்ல வேலையா தப்பித்துவிட்டீர்கள். ”என சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பேசினார்.
சிஎம் விஜய் மீது கடும் விமர்சனம்:
தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜயை, சீமான் கடுமையாக விமர்சித்தார். அப்படி பேசுகையில், “ஆட்சி பொறுப்பை கையிலெடுத்துக்கொண்டு 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது என கூறுகிறார். அது தெரியாமல் தான் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட்டீர்களா? காலக்கொடுமைடா சாமி. நல்ல வேலை என்னை தோற்கடித்து உள்ள வர விடாமல் விட்டு விட்டீர்கள். நான் மட்டும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேருடன் உள்ளே சென்று இருந்தால், அவ்வளவு பேரும் வெளியேதான் இருந்து இருக்கனும். நல்ல வேலையா தப்பித்துவிட்டீர்கள். எதோ, என் மக்கள் என் மீது பாவம் பார்த்தார்களா? அல்லது உங்கள் மீது பாவம் பார்த்து வாக்களித்தார்களா? என்று தெரியவில்லை. கடன் இருப்பதாக நான் தெருத்தெருவாக பாடினேன். ஆனால் இவருக்கு முதலமைச்சர் ஆன பிறகு தான் கடன் இருப்பதே தெரிகிறது.
3 லட்சம் கோடி தான் மாநில அரசின் பட்ஜெட்டே. அதில் ஒரு லட்சம் கோடி வட்டிக்கே போகிறது. நீங்கள் சொல்லும் அறிவிப்புகளை செய்ய இன்னும் 10 லட்சம் கோடி தேவைப்படும் என அப்போதே சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. எனில் கொடுக்க முடியாது என தெரிந்தே வெற்று வாக்குறுதிகளை கொடுத்து தான் மக்கள் துரோகம். ஏமாற்றம். உண்மையை சொன்னோம். தோற்றுப்போனோம். மேன்மையாக கருதுகிறோம். காசு கூட இல்லை என்பது தெரியாமல் எதற்கு வந்தீர்கள். 6 சிலிண்டர் எப்படி கொடுக்கப்போகிறீர்கள் என பார்க்கதான் போகிறேன். ஒருவேளை நீங்கள் போரிட்டு ஈரான் மற்றும் ஈராக்கை கைப்பற்றினால் தான் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.
பிரபாகரன்,நம்மாழ்வர் மகன் இந்த சீமான். என்னிடம் ஆட்சியை கொடுங்கள், நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து எரிவாயு தயாரித்து மக்களுக்கு கொடுக்கிறேன். அடுத்து சில நாட்களில் அரிசி இல்லை என வருவார்கள். எந்த போராட்டத்திற்கும் என்னை அழைக்காதீர்கள். நான் வரமாட்டேன். எதாவது பிரச்னை என்று வீட்டு பக்கம் மனுவுடன் வாருங்கள் அப்போது நான் சிரித்து கொண்டு இருக்கமாட்டேன். படித்த இளைஞர்களுக்கு 4000, இடைநிறுத்தத்திற்கு 15 ஆயிரம், கல்விக் கடன் 20 லட்சம் எங்கிருந்து ராஜா? அவர் என்ன செய்வார் பாவம். கடனாகி போய்விட்டது. நான் நிறைய பாவம் நடத்தினேம். ஆனால், மக்கள் எனக்கு எடுத்த பாடத்தை படிக்க முடியவில்லை.திணறிவிட்டேன்” என சீமான் பேசியுள்ளார்.
https://www.facebook.com/61578598803847/photos/cm-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/122165192234953293/?_rdr
No comments:
Post a Comment