Wednesday, May 6, 2026

தவெக ஆட்சி கோரிய கடிதப் பிழைகள், ஆளுநர் மெஜாரிட்டி கோரியதும்

ஆளுநரை சந்திக்க சென்ற அணியினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்..
https://www.facebook.com/photo?fbid=3591975854286105&set=a.270896886394035
தவெக செய்திருக்கும் அடிப்படை பிழைகள்!
ஆளுநரை சந்திக்க தங்கள் கட்சி வாங்கிய நம்பர்ஸை மட்டும் காட்டாமல் (108) காங்கிரஸோடு சேர்த்து நூற்று பன்னிரண்டு நம்பர்சை காட்டிருக்கிறது TVK.
இதனை பார்த்த ஆளுநர் 118 இல்லையா என்று கேட்டிருக்கிறார்.
107 ( 1 சபாநாயகர் ) என்ற தங்கள் நம்பர்ஸ் மட்டும் காட்டி இருந்தால் பதவியேற்ற பிறகு சில நாட்களில் உங்கள் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் கூறியிருப்பார். இவர்கள் போகும்போது தேவையே இல்லாமல் காங்கிரஸையும் சேர்த்து காட்டியது நேரிட்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சட்ட வல்லுநர்களால் கூறப்படுகிறது. ஆளுநரை சந்திக்கும் போது சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக என்ன செய்ய வேண்டும் என்ற தரவுகளோடு செல்லாமல் தவெக சென்றது உருவாகி இருக்கும் வதந்திகளுக்கும், புரளிகளுக்கும் காரணம். தங்களது புரிதல் பிழையை மறைக்கவே நரேட்டிவ்கள் செட் செய்யப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தருணத்தை பாஜக பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், செங்கோட்டையன் போன்ற சீனியர் தலைவர்கள் இருக்கும்போதே இந்த பிழை எப்படி ஏற்பட்டது என்பது புரியவில்லை? இவர்கள் இதை மட்டும் செய்யவில்லை லோக் பவனுக்கு தாங்கள் வாங்கிய பர்சன்டேஜ் இது என்று மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்கள். அது தவறு இல்லை ; ஆனால் அது ஒரு மரபே இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. இவர்களின் சட்ட ரீதியான புரிதலுக்கு இவைகளே மிகச் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன!
ளுநர் செய்வது சரியா என்று பார்ப்போம்.இது போன்ற தொங்கு சட்டசபை அமையும் நேரங்களில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து அனுமதி அளித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதே மரபு.பல சமயங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது.
பெரும்பான்மை நிரூபிக்கப்படவேண்டிய இடம் சட்டமன்றம்தான்.ஆளுநர் மாளிகை அல்ல.அதன்படி பார்த்தால் ஆளுநர்,இங்கே தனிப்பெரும் கட்சியின் தலைவர் விஜய்யை அழைப்பதுதான் முறை. மேலும் வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமையும் கோரவில்லை.காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை எழுத்துப் பூர்வமாகவே அளித்திருப்பதால் இப்போது அந்த அணிக்கு 113 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இன்னும் தேவைப்படுவது 5 தான். விஜய் தனது அணியின் பெரும்பான்மையை நிரூபிக்க 10-15 நாட்கள் அவகாசம் தருவதே முறை.
தார்மீக ரீதியாகப் பார்த்தாலும் இதுவே சரியானது. இது திமுக அதிமுக கூட்டணிகளை நிராகரித்து விஜய் ஆள்வதற்காக தரப்பட்ட மக்கள் தீர்ப்புதான். அதை மதிப்பதே முறை.இதற்கு மாறாக ஆளுநர் நடந்து கொள்வதனால் ஏற்கனவே இங்கு வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கும் பாஜக மீது இன்னும் வெறுப்புதான் வளரும்.இதை பாஜகவின் தில்லி மேலிடம் புரிந்து கொள்ள வேண்டும்.பல இடங்களில் ஆளுநர்களின் இம்மாதிரி செயல்களினால் பாஜகவே பாதிக்கப்பட்டதும் உண்டு. அதை நினைவில் கொள்ள வேண்டும் அவர்கள்.
ஆனால் அதற்கு மாறாக முதலிலேயே பெரும்பான்மை எம்.எல்.எக்களின் ஆதரவு இருக்கும் கடிதங்களை காட்டச் சொல்லி ஆளுநர்கள் நிபந்தனை விதித்ததும் நடந்திருக்கிறது. அவரின் Discretionary power ன் கீழ் இது உண்டு என்றும் வாதத்தை வைப்பவர்கள் உண்டு.இது ஒரு Grey Area வாகத்தான் இருக்கிறது நம் அரசியல் சட்டத்தில்.
அது மாதிரியான சமயங்களில் நீதிமன்றம் சென்றே ஆட்சி அமைக்கும் உரிமையை சிலர் பெற்றிருக்கின்றனர். அது போல விஜய்யும் செய்யலாம்.
இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல்,இன்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும் தம்மிடம் இருக்கும் 6 எம்..எல்.எக்களின் ஆதரவை விஜய்க்கு அளித்தால்,பிரச்னை ஏதுமின்றி விஜய் பதவியேற்கலாம். ஆனால், அவர்களுக்கு திமுகவுடன் கூட்டணியாக நின்று வென்று விட்டு இப்படி விஜயிடம் போவதற்கு ஒரு தர்ம சங்கடம் இருக்கிறது என்று தெரிகிறது. அதுவும் நியாயமானதுதான்.
காங்கிரஸ் அப்படி நினைக்கவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் பொது ஏற்பட்ட கசப்புணர்வும் ஏற்கனவே விஜய் கட்சியுடன் போவதற்கான மனநிலையில் இருந்ததாலும், விஜய்யை ஆதரிக்கும் முடிவை அவர்கள் உடனடியாக எடுத்துவிட்டனர். விஜய்யும் அவர்களின் ஆதரவை கேட்டிருந்தார். இந்தக் கட்சிகளிடம் அவர் ஆதரவைக் கேட்டாரா என்று தெரியவில்லை.
இந்தக் கட்சிகளின் தர்மசங்கடத்தை போக்கவும் ஒரு வழி இருக்கிறது. இப்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியை அமைக்க விட்டு விட்டு, தங்கள் எம்.எல்.ஏ பதவிகளையும் முன்பு வென்ற எம்.பி பதவிகளையும் கூட ராஜினாமா செய்துவிட்டு, தவெகவுடன் நின்று அதே இடங்களில் தேர்தலை சந்திக்கலாம்.அப்படியொரு Moral Stance ஐயும் ரிஸ்க்கையும் இந்தக் காலத்தில் யாராவது எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
இந்தத் தேர்தல், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் மீதான தீர்ப்பு தான். அது திமுகவுக்கு எதிராகத்தான் வந்திருக்கிறது. முதல்வரே தோற்றிருக்கிறார்.10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோற்றிருக்கின்றனர். அதிமுகவும் இதைத்தான் விரும்பியது என்ற நிலையில்,அதிமுக விஜய்யின் கட்சிக்கு இப்போதைக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது தான் சரியான முடிவாக இருக்கும்.
ஆனால், அதை விட்டுவிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட திமுகவுடனேயே கூட குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அதிமுக போனால், அது அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தி அதற்கு முடிவுரையே எழுத வேண்டி வந்து விடும்.இதை எடப்பாடி பழனிச்சாமியும் இதர அதிமுக தலைவர்களும் உணர வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும்,விஜய் தலைமையில் இப்போதைக்கு ஒரு ஆட்சி அமைந்தாலும் கூட 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்துக்கு இன்னொரு தேர்தல் வருமென்றுதான் தோன்றுகிறது. விஜய்யே கூட அதைக் கோர வேண்டி வரலாம்.
பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.


No comments:

Post a Comment

தவெக ஆட்சி கோரிய கடிதப் பிழைகள், ஆளுநர் மெஜாரிட்டி கோரியதும்

ஆளுநரை சந்திக்க சென்ற அணியினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்.. https://www.facebook.com/photo?fbid=3591975854286105&set=a.27089688639...