ஹிந்து மத வெறுப்பாளர் கி.வீரமணி அவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வந்ததும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவர்ணா அவர்களை நியமித்தார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரது ஜாதியை கண்டுபிடித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நேற்று ரமேஷ் பதவியேற்றார். அவரது ஜாதியையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த கி.வீரமணி அவர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர் என இரு பதவிக்கும் பிராமணர்களை எப்படி நியமிக்கலாம் என மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டிருந்தார்.இந்நிலையில் இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா அவர்கள் விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்றதும், சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று கி.வீரமணி அவர்களை ஜோசப் விஜய் சந்தித்ததால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது.கி.வீரமணியின் மிரட்டலுக்கு பணிந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடையே ஜாதி பற்றிய தாக்கத்தைதான் ஏற்படுத்தும். இனி ஜாதி, மத அடிப்படையில்தான் நியமனங்கள், இடமாறுதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மத வெறுப்பாளர் கி.வீரமணி அவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"பார்ப்பன அறநிலையத் துறை அமைச்சர்! முதன்மைச் செயலாளர் பார்ப்பனப் பெண்!"- என்றெல்லாம் பதறும் வீரமணி இன்னொரு விஷயத்தை சௌகரியமாக CHOICE ல் விட்டுவிட்டார்!
விசிக - வுக்கு அமைச்சரவையில் ஒரு துறை காலியாக விட்டு வைக்கப்பட்டு உள்ளது.
விசிக - தலித் கட்சி - என்பதால் அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை தானா?
ஒரு பிரபல தலைவர் - தலித்துகள் பொதுத் தொகுதியில் போட்டியிட ஆசைப்படக் கூடாது - என்று பேசியதாக முன்பு சர்ச்சை ஆயிற்றே?
பெரம்பலூர் ரிசர்வ் தொகுதியாக இருந்தது - பொதுத் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவை திமுக அங்கிருந்து நீலகிரி (ரிசர்வ்) பாராளுமன்றத் தொகுதிக்கு விரட்டி விட்டது முன்பு விவாதப் பொருள் ஆயிற்றே?
அதைப் போலத்தானே இதுவும்?
அதாவது நீ தலித்துகளுக்கான - பட்டியலினத்தவருக்கான கட்சி என்றால் உன்னை அமைச்சரவையில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்வோம் - ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைதான் கொடுப்போம் என்ற மனோபாவம் தவறாயிற்றே?
நீ ஏதோ வீட்டில் படியேறி வந்துவிட்டாய் - ஆனால் வீட்டுக் கூடம் வரை விடமாட்டோம் - திண்ணையில் உட்கார வைத்து வேண்டுமானால் சோறு போடுகிறோம் என்பது மாதிரியான மேட்டிமை உணர்வு இதில் வெளிப்படவில்லையா?
"பார்ப்பானுக்கு அறநிலையத் துறையா? அநியாயம்!"- என்று குமுறும் வீரமணி...
"தலித் விடுதலை இயக்கமாக உள்ள கட்சிக்கு ஆதி திராவிடர் நலத்துறை என்று நேர்ந்துவிட்டுள்ளதா?"- என்று கேட்டுப் போராடலாமே வீரமணி.
தலித் கட்சி என்றால் அவர்களுக்கு சட்டத் துறை தரக்கூடாதா? பொதுப்பணித் துறை தரக்கூடாதா?
காமராஜர் முதல்வராக இருந்தபோது தலித் சமூகத்தை சார்ந்த கக்கனை உள்துறை அமைச்சர் - போலீஸ் மந்திரி ஆக்கினாரே?- அது போல கனமான துறை தரக் கூடாதா ஒரு தலித் இயக்கப் பிரதிநிதிக்கு?
அதேபோல் முஸ்லீம் லீக் பங்கு பெறுகிறது என்றாலே - அவர்களுக்கு சிறுபான்மையினர் நல இலாக்காதானா?
ஏன் முஸ்லீம் லீக் பிரதிநிதி வருவாய்த் துறை, போக்கு வரத்து துறை போன்ற கனமான இலாகாக்களை கையாளத் தகுதி அற்றவரா?
ஒரு தலித் இயக்கப் பிரதிநிதி உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை இதை எல்லாம் சிறப்பாக நிர்வகிக்க மாட்டாரா?
அது என்ன தலித் இயக்க கட்சி பிரதிநிதி என்றால் - அவருக்கு ஆதி திராவிடர் நலம்!
முஸ்லீம் லீக் கட்சி பிரதிநிதி என்றால் அவருக்கு சிறுபான்மையினர் நலத் துறை - ஏன் அவர் பட்ஜெட் போடத் தகுதியற்றவரா?
இது என்ன நவீன தீண்டாமை?
இதை எல்லாம் எடுத்துக் காட்டி வீரமணி போராட மாட்டாரா?
பார்ப்பான் அமைச்சராவது கண்ணுக்குத் தெரியும் வீரமணிக்கு - ஒரு தலித் இயக்கப் பிரதிநிதி ஆதி திராவிடர் நலத் துறை என்ற சிறுவட்டத்துக்குள் அடைக்கப்படுவது தெரியவில்லையா?
ஒரு முஸ்லீம் கட்சி சிறுபான்மையினருக்கான துறையோடு வட்டம் கட்டப்படுவது தெரியவில்லையா?
பார்ப்பானைக் காலைக் கையில் பிடித்து இழுத்து கீழே விடத் தெரிந்த வீரமணிக்கு பட்டியல் இனக் கட்சியை தோள் சுமந்து மேலே ஏற்ற ஏன் தெரியவில்லை?
விசிக - வுக்கு அமைச்சரவையில் ஒரு துறை காலியாக விட்டு வைக்கப்பட்டு உள்ளது.
விசிக - தலித் கட்சி - என்பதால் அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை தானா?
ஒரு பிரபல தலைவர் - தலித்துகள் பொதுத் தொகுதியில் போட்டியிட ஆசைப்படக் கூடாது - என்று பேசியதாக முன்பு சர்ச்சை ஆயிற்றே?
பெரம்பலூர் ரிசர்வ் தொகுதியாக இருந்தது - பொதுத் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவை திமுக அங்கிருந்து நீலகிரி (ரிசர்வ்) பாராளுமன்றத் தொகுதிக்கு விரட்டி விட்டது முன்பு விவாதப் பொருள் ஆயிற்றே?
அதைப் போலத்தானே இதுவும்?
அதாவது நீ தலித்துகளுக்கான - பட்டியலினத்தவருக்கான கட்சி என்றால் உன்னை அமைச்சரவையில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்வோம் - ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைதான் கொடுப்போம் என்ற மனோபாவம் தவறாயிற்றே?
நீ ஏதோ வீட்டில் படியேறி வந்துவிட்டாய் - ஆனால் வீட்டுக் கூடம் வரை விடமாட்டோம் - திண்ணையில் உட்கார வைத்து வேண்டுமானால் சோறு போடுகிறோம் என்பது மாதிரியான மேட்டிமை உணர்வு இதில் வெளிப்படவில்லையா?
"பார்ப்பானுக்கு அறநிலையத் துறையா? அநியாயம்!"- என்று குமுறும் வீரமணி...
"தலித் விடுதலை இயக்கமாக உள்ள கட்சிக்கு ஆதி திராவிடர் நலத்துறை என்று நேர்ந்துவிட்டுள்ளதா?"- என்று கேட்டுப் போராடலாமே வீரமணி.
தலித் கட்சி என்றால் அவர்களுக்கு சட்டத் துறை தரக்கூடாதா? பொதுப்பணித் துறை தரக்கூடாதா?
காமராஜர் முதல்வராக இருந்தபோது தலித் சமூகத்தை சார்ந்த கக்கனை உள்துறை அமைச்சர் - போலீஸ் மந்திரி ஆக்கினாரே?- அது போல கனமான துறை தரக் கூடாதா ஒரு தலித் இயக்கப் பிரதிநிதிக்கு?
அதேபோல் முஸ்லீம் லீக் பங்கு பெறுகிறது என்றாலே - அவர்களுக்கு சிறுபான்மையினர் நல இலாக்காதானா?
ஏன் முஸ்லீம் லீக் பிரதிநிதி வருவாய்த் துறை, போக்கு வரத்து துறை போன்ற கனமான இலாகாக்களை கையாளத் தகுதி அற்றவரா?
ஒரு தலித் இயக்கப் பிரதிநிதி உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை இதை எல்லாம் சிறப்பாக நிர்வகிக்க மாட்டாரா?
அது என்ன தலித் இயக்க கட்சி பிரதிநிதி என்றால் - அவருக்கு ஆதி திராவிடர் நலம்!
முஸ்லீம் லீக் கட்சி பிரதிநிதி என்றால் அவருக்கு சிறுபான்மையினர் நலத் துறை - ஏன் அவர் பட்ஜெட் போடத் தகுதியற்றவரா?
இது என்ன நவீன தீண்டாமை?
இதை எல்லாம் எடுத்துக் காட்டி வீரமணி போராட மாட்டாரா?
பார்ப்பான் அமைச்சராவது கண்ணுக்குத் தெரியும் வீரமணிக்கு - ஒரு தலித் இயக்கப் பிரதிநிதி ஆதி திராவிடர் நலத் துறை என்ற சிறுவட்டத்துக்குள் அடைக்கப்படுவது தெரியவில்லையா?
ஒரு முஸ்லீம் கட்சி சிறுபான்மையினருக்கான துறையோடு வட்டம் கட்டப்படுவது தெரியவில்லையா?
பார்ப்பானைக் காலைக் கையில் பிடித்து இழுத்து கீழே விடத் தெரிந்த வீரமணிக்கு பட்டியல் இனக் கட்சியை தோள் சுமந்து மேலே ஏற்ற ஏன் தெரியவில்லை?



No comments:
Post a Comment