Friday, February 18, 2022

அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்

9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.
சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

 




திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –

பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா –

காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,

இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-

என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் –

கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.

அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி, அவதூறு வழக்கு தொடுத்த அண்ணா மற்றும் சம்பத், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பெரியார் – மறைக்கப்படும் திராவிடர் கழக வரலாற்று பக்கங்கள்

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் 1949 ஜூலை 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1949 ஜூலை 9-ஆம் தேதியே ஈ.வெ.ராமசாமி – மணியம்மை திருமணம் சென்னையில் ஈ.வெ.ரா-வின் நண்பர் நாயகம் வீட்டில் பதிவாளர் வரவழைக்கப்பட்டு, ரகசியமாக நடந்தேறிவிட்டது.

இந்த செய்தி, திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேறியபின் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதிர்ச்சியும் ஆயாசமும் அடைந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அண்ணா ஆறுதல் கூறி, இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என ஊக்குவித்தார். ஈ.வெ.ரா-வின் முடிவை ஏற்காதவர்கள் எத்தனை பேர் என்று கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தலைவர்(ஈ.வெ.ரா) தமது முடிவை மாற்றிக் கொள்ளாதவரை திராவிடர் கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருந்ததால் கட்சிப்பணிகள் யாவும் நின்றுபோய் கட்சியே ஸ்தம்பித்து விட்டது.

ஈ.வெ.ரா இதனால் சினமடைந்து தமது விடுதலை நாளிதழில் அனுதினமும் அண்ணாவையும் அவரை ஆதரிப்பவர்களையும் பலவாறு தூற்றத் தொடங்கினார். அவர்கள் மீது பலவாறான பழிகளை சுமத்தவும் தொடங்கினார்.

1949 ஜூலை 13-ஆம் தேதி விடுதலை நாளிதழில் ஈ.வெ.ராமசாமி எனக் கையொப்பமிட்டு திருமண எண்ணத் தோற்றத்துக்குக் காரணமும் அவசர முடிவும் என்ற தலைப்பில் திடுக்கிட வைக்கும் அறிக்கையொன்று வெளியாகியது. அதில், தம்மைக் கொல்வதற்கு யாரோ சதி செய்து வருவதாக ஈ.வெ.ரா குறிப்பிட்டிருந்தார். சதி செய்யும் நபர் அண்ணா தான் என்று படிப்பவர்கள் யூகித்துக் கொள்ள இயல்வதுபோல மறைமுகமான அடையாளங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் சம்பத்தை குறித்தும் அவர் கொலை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பது போலத் தகவல்கள் காணப்பட்டன.

தம்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் அண்ணா. அவருக்காக வழக்கறிஞர் ஜகநாதனும் ஈ.வெ.ரா சார்பில் வழக்கறிஞர் கைலாசமும் நீதிமன்றத்தில் வழக்காடினார்கள். நீதிமன்றத்துக்கு ஈ.வெ.ரா., அண்ணா இருவரும் வந்திருந்தனர்.

ஈ.வெ.ரா-வின் வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே தமது கட்சிக்காரர் அண்ணாவை மனதில் கொண்டு அந்தக் கட்டுரையை எழுதவில்லை எனக் கூறினார். எனவே அண்ணா வழக்கைத் தொடர விரும்பவில்லை. அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி உங்கள் கட்சிக்காரர் என்ன கருதுகிறார் என்று கேட்டார். அண்ணாவிடம் கலந்து பேசிய வழக்கறிஞர ஜகநாதன், கட்டுரையில் குறிப்பிட்டது எனது கட்சிக்காரரைப் பற்றி அல்ல என்று பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும் பட்சத்தில் வழக்கைத் தொடர விருப்பமில்லை எனக் கூறினார். அதன் பயனாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஈ.வெ.ரா – மணியம்மை ஆகிய இருவர் மீதுமே சம்பத் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வயதை உத்தேதித்து, ஈ.வெ.ரா-வுக்கு நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மணியம்மை வந்தாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது ஈ.வெ.ரா – மணியம்மை, இருவருமே வருத்தம் தெரிவித்தனர். எணவே அந்த வழக்கு சம்பத் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் ஈ.வெ.ரா-வின் பழிச்செற்களை மறுப்பதற்காகவே “மாலைமணி” என்ற பத்திரிக்கை அண்ணாவல் தொடங்கப்பட்டது எனது வரலாறு.

Inputs from Book – “தி.மு.க உருவானது ஏன்?” – ஆசிரியர் – மலர்மன்னன்

1949 ஜூலை 9 அன்று நடந்த ஈ.வெ.ரா – மணியம்மை திருமணத்துக்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், திராவிடர் கழகத்திலிருந்து பலர் கூண்டோடு விலகி, புதிய கட்சி தொடங்கவிருப்பதை ஒரு முன்னறிவிப்புச் செய்வதுபோல 7-9-1949 அன்று அண்ணா வெளியிட்ட அறிக்கை கீழ் வருமாறு:

“நாம் போற்றி பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்கு தலைவரின்(ஈ.வெ.ரா.வின்) சுயநலம் கொண்டு போய்விட்டது. இனி அவரின் கீழ் இருந்து தொண்டாற்றுவதால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது சொந்த வயலுக்கு நாம் பாய்ச்சும் தண்ணீராகவே ஆகும் என்று கருதி, இவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணியிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழங்களும்(திராவிடர் கழகக் கிளைகள்), தோழர்களும், நிருவாகக் குழு உறுப்பினர்களும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்….

ஆனால் அவரது(ஈ.வெ.ரா) இலட்சியம் இயக்கத்தைப் பற்றி, அதன் வளர்ச்சியைப் பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ பார்ப்போம் என்ற விதண்டாவாத எண்ணமே அவரது போக்கில் தென்படுகிறது. எனவே அவராக விலகுவார் என நாம் எதிர்ப்பார்ப்பதற்கு இல்லை…

ஆகவே மேற்கொண்டு கழக ஆக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் ஆக வேண்டும். இதில் இன்னும் நாள் ஓட்டக் கூடாது. நல்லதொரு முடிவு கண்டு நம் நாட்டுப் பணி மீண்டும் முன்போல் முழங்க வேண்டும்.

– அண்ணா’

பின்னர் 1949 செப்டம்பர் 18 அன்று மாலை அண்ணா தலைமையில் தம்மோடு திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சகாக்களின் துணையோடு திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட செய்தியை அறிவிக்கும் பொதுக் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்ஸ்ன் பூங்காவில் நடை பெற்றது.

ஈ.வெ.ராமசாமி தி.மு.க தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதில் இருந்தே, தி.மு.க வெற்றி பெற்றுவிடக் கூடாது என அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர். எந்த கட்சியை தாம் தமிழ்நாட்டில் இருந்து பூண்டோடு கிள்ளி எறியப் போவதாக சபதம் செய்துவிட்டு வெளியேறினாரோ, அந்தக் கட்சியான காங்கிரஸின் வெற்றிக்காகத் தமது உடல் உபாதைகளையும், வயது முதிர்ச்சியின் ஆயாசத்தையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸூக்கு ஆதரவாகவும் தி.மு.க-வுக்கு எதிராகவும் குறிப்பாக அண்ணா மீது பழிதீர்த்துக் கொள்வது போலவும் வரம்பு மீறிய வசைச் சொற்கள் மிகுந்த கடும் பிராசார பாணியைத் தேர்தல் காலங்களில் துரிதப்படுத்தியவர் ஈ.வெ.ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Permalink   


எழில் கொஞ்சும் இடையங்காடுபக்கத்தை விரும்பு

நொண்ணாதுரை (எ) அண்ணாதுரை பற்றி ............................
- - - - - - - - - - - - - - - -

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கேற்றாற்போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல்வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின் பெருஞ்செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக்கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது, 
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமாவேலை பார்த்ததற்கு சான்று 30-9-1958 நாளில் பாரதிதாசன் குயில் இதழில் (குரல் -1 இசை -18)
'அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?'
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

அதில் அண்ணாதுரையின் துப்பு என்ன என்பதையும்,
பொற்கிழி அளிக்கவிருந்த விழாக்குழுவில் முக்கிய உறுப்பினராய் இருந்த டி.என்.ராமன் என்பவரை அண்ணாதுரை கைக்குள் போட்டுக்கொண்டு 
(இதை 'மேளம் மேளத்தை
ஆதரிக்க என்ன தடை?' என்று குறிப்பிடுகிறார், அதாவது இருவரும் தெலுங்கு சின்னமேளம் சாதியைச் சேர்ந்தவர்கள்)
தன் கையால் பணமுடிப்பை அளிப்பது போல நிகழ்ச்சி நிரலை மாற்றி அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும், 
அந்த பணத்தில் அண்ணாதுரை 5000 ரூபாயைத் திருடிக்கொண்டதையும்,
பிறகு ஏதோ தானே பணம் கொடுத்ததுபோல விளம்பரம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

பிறிதொரு காலத்தில் அண்ணாதுரை வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளாத வயதில் ஈ.வே.ரா தன்னைவிட 40வயது குறைந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததை எதிர்த்து அண்ணாதுரை வெளியேறி தி.மு.க வைத் தொடங்கி ஈ.வே.ராவை கடுமையாக கேலி கிண்டல் செய்து எழுதுகிறார்.

இதற்கு பதிலடியாக ஈவேரா காமராசரை ஆதரிக்கிறார்.
தெலுங்கரான அண்ணாதுரையை எதிர்க்க காமராசரை 'பச்சைத் தமிழர்' என்று குறிப்பிடுகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கனார் கூட 
"பச்சைத் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
இந்தப் ‘பச்சைத் தமிழருடைய' ஆட்சியில் இந்த ராஜ்யம் ‘தமிழ் ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?"
என்று காமராசரை விமர்சித்து எழுதியுள்ளார்.

மதுரையில் ஒரு மேடையில் முத்துராமலிங்கத்தேவர் பேச வந்தபோது அம்மேடையில் அண்ணாதுரை உட்கார்ந்திருந்தார்.
உடனே அவர் 
"தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்" என்று கூறினார்.

அண்ணாதுரை ஒரு தேவதாசி மரபினர் என்பதும்
அவர் விபச்சாரம் செய்வதையும் அனைவரும் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புரிகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, 
வாக்காளர் பட்டியலில் தன்னை
“அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
“சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது”
என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

சட்டசபையில் 
"உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?" 
என்று கேட்டதற்கு 
"நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல
அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல" என்று பதிலளித்தார்.

பலரும் அண்ணாதுரை இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் என்கின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டமானது சோமசுந்தர பாரதியார் தலைமையில் தொடங்கியது.
முதன்முதலாகக் கைதானவர் ஈழத்தடிகள் என்ற சாமியார் (ஈழத்தமிழர்).
ஈ.வே.ரா, அண்ணா ஆகியோர் பிறகுதான் அதில் பங்கெடுத்தனர்.
இந்தி எதிர்ப்பு போராக வெடித்தது.
150 பேர் உயிரிழந்திருந்த வேளை
அண்ணாதுரை 
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 
(1965) ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” 
என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அப்போது விராலிமலை சண்முகம் என்ற இளைஞர் அண்ணாதுரைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்தார்.
அதன்பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

ஆக இந்தி எதிர்ப்பு தமிழ் இயக்கங்களால் தொடங்கப்பட்டு தமிழக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமே தவிர திராவிடவாதிகளின் பங்கு அதில் மிக மிக குறைந்த அளவே.

ம.பொ.சி 'குமரி முதல் திருப்பதி' வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைப்பதை வலியுறுத்தி 1947 சனவரி 14 பொங்கல் திருநாளை 'தமிழர் திருநாள் விழா'வாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.
பல கட்சிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணாதுரையும் ஈவேரா வும் மட்டும் வரவில்லை.
ஆனால் அண்ணாதுரை தி.மு.க வைத் தொடங்கிய பிறகு பொங்கல் நாளைத் 'திராவிடர் திருநாள்' என்று கொண்டாடினார்.

இதேபோல மார்சல் நேசமணி தலைமையிலான குமரி மீட்புப் போராட்டத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் நாய், மலம் என்று திராவிட பாணியில் பேசியதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

அண்ணாதுரையாரால் வந்த பெருங்கேடுகள் :-

1) 1944 சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை 'தமிழர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது 'சி.என்.ஏ தீர்மாணம்' மூலமாக 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மாற்றிய பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.

2) தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டை) திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி 
"பரிசு விழுந்தால் வீட்டுக்கு, 
விழாவிட்டால் நாட்டுக்கு"
என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ் மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.

3) ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.

4) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மாணம் ஆக்கி, 
ஆங்கிலத்தை கட்டாயமாக்கி 
தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் ஆக்கி
முதல் வகுப்பு முதல் முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்நாட்டில் தமிழை ஒழித்துக்கட்டியவர்.

5) தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற 7 கட்சிக் கூட்டணியை உருவாக்கியவர் அண்ணாத்துரை.

6) கீழ்வெண்மணி படுகொலை நடந்தபோது பதவியிலிருந்தும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆனால் முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கனாரை எதிர்த்தார்.
ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெளிநடப்பும் செய்தார்.

இப்படி நிறைய உண்டு.

இவர் செய்த ஒரே நன்மை
சங்கரலிங்கனார் உண்ணாமல் உயிர்விட்ட கோரிக்கையான 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்தை 12ஆண்டுகள் கழித்து தான் சாகும் தருவாயில் நிறைவேற்றியது மட்டும்தான்.

இன்று எங்கே நோக்கினாலும் அண்ணா அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.
கண்ட கண்ட வந்தேறி வேசி மகனுக்கெல்லாம் திராவிடத்தால் வந்த வாழ்க்கை!

திராவிடம் என்றாலே வந்தேறிகள்.
அதிலும் பொய்யன், ஆங்கில அடிமை, சாதிவெறியன், திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளப் பொறுக்கி, பொறம்போக்கு, மாமாப்பயல், தேவிடியாப் பயல், குடிகாரன், சாராய வியாபாரி, பணம் கொழுத்தவன், அவுசாரி, அம்மணக் கூத்தாடி என தேடி எடுத்த அத்தனைக் கழிசடை வந்தேறிகளும் அதில் இருக்கும்.





ஈ.வெ.ராமசாமியார் உளறல்களை கிழித்துப் போட்டார் எழுத்தாளர் பிரபாகர்

 1952ல் இந்தியாவெங்கும் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல். காங்கிரசை எதிர்த்து நடந்த திமுக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தது !

தி.மு.க. நடத்திய போராட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின்மனைவி " கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிப்பட்டு செத்தான் " என்று அழுவது போல் பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பெற்றன.

அதை மையமாக வைத்து பெரியார், “ பிரச்சினைக்கு வழி சொல்லாமல் தாலியை அறுத்துவிட்டது அரசாங்கம் என்று சொல்லுகிறாயே. அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால் என்ன மறுதாலி போடுவாயா ” என்று கடுமையாய்க் கேட்டார்.

வேறெங்கும் இந்தப் பிரச்சினைக்குப் பதில் சொல்லாத அண்ணா பிரம்மாண்டமான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்.

“ மறு தாலி போடுவாயா என்கிறார், என்னுடைய தலைவர் பெரியார், அண்ணாதுரை மறு தாலி போட மாட்டான். அப்படியே போட்டாலும் என்னுடைய தலைவர் பெரியாரைப்போல் அவசரப்பட்டுப் போடமாட்டேன் ” என்றார்.

அக்காலகட்டங்களில் சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுத சம்பளமாக மாதம் 500 ரூ சம்பளத்தில் பணிசெய்துகொண்டே, பெரியாரின் குடியரசு நாளிதழில் கட்டுரையும் எழுதிக்கொண்டு திராவிடர் கழகத்தில் தொடர்ந்தார் கருணாநிதி.

அவரும் தனது பங்கிற்கு அண்ணாவை கடுமையாக சாடி ," அய்யா ஆணையிடுகிறார் ...... அண்ணா ஊளையிடுகிறார் " என்று தலைப்பிட்டு எழுதியவர் கருணாநிதி.


பெரியார் எப்படிப்பட்ட, " ஜாதி வெறியர் " என்பது பாவம் அவரை நம்பும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியாது.

இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அதிலும் குறிப்பாக டிசம்பர் 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 44 பேர், திருவாரூர் அருகில் உள்ள கீழ வெண்மணியில் துடிக்கத்துடிக்க குடிசையில் வைத்து கொளுத்திய காட்டுமிராண்டி சம்பவத்தை சொல்லலாம்.

முன்னேறிய மனித சமுதாயமே வெட்கி, தலைகுனியவேண்டிய சோகமான நிகழ்வு.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் கொளுத்தப்பட்ட 44 பேர்களில் ஒரு 6 வயது அப்பாவி பெண் குழந்தையும் அடக்கம்.

இந்தச்சம்பவமே சமீபத்தில், " ராமையன் குடிசை " என்று திரைப்படமாக வெளிவந்தது.

கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடு தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், கருகிய 44 பேர் தலித் சமூகத்தினர் என்பதாலும் பெரியார் அந்த சம்பவத்தை கண்டித்து ஒரு சிறிய ஆர்பாட்டம்கூட நடத்தவில்லை. எதுவுமே நடக்காததுபோல் அமைதியாக இருந்தார்.

அதேபோல இந்த உலகத்தில் மிகப்பெரிய சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் மிகப்பெரிய கெட்டிக்காரர் கருணாநிதிதான் என்பது உலகத்திற்கே தெரியும்.

1952 களில் எந்த அளவிற்கு கீழிறங்கி, அண்ணாவை திராவிடர் கழகத்தில் தொடர்ந்துகொண்டு மட்டமாக அர்ஜித்தவர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும்.

1959 - 60 களில் தமிழகத்தில் துணிவிலை உயர்ந்ததற்கு காரணம் பள்ளு, பறையர்கள் துணி உடுத்த ஆரம்பித்துவிட்டதுதான் காரணம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருந்தார்.

அதை கண்டித்து, 1957 தேர்தலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, பெரியாரை எதிர்த்து, கருணாநிதி எந்த அளிவிற்கு வசைபாடி அந்தர் பல்டி அடித்தவர் என்பதை உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.

1960 பொங்கல் மலரில் , தனது முரசொலி இதழில் பெரியாரை ஒரு கேலிச்சித்திரத்தின்மூலம் எந்த அளவு வசைபாடியுள்ளார் பாருங்கள் .

No comments:

Post a Comment