அமைச்சர் கீர்த்தனா - 2005ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் அவர்கள் சிவகாசி சென்று பட்டாசு ஆலை தொழிலாளிகளை சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசினார் என்று சட்டசபையில் பெருமையாக பேசியிருக்கிறார்.
அதுவும் "2005லேயே" என்று சொல்லும்போது அவரது டயலாக் டெலிவரி, பாடி லாங்க்வேஜை பார்க்க வேண்டும். அப்படி ஒரு பெருமை.
உண்மையாக இருந்தால் பெருமைப்படவேண்டியது தான்.
ஆனால் 2005-ல் விஜய் நடித்து பேரரசு இயக்கிய சிவகாசி படத்திற்கான ப்ரோமோஷனுக்காகத் தான் சிவகாசி சென்றிருக்கிறார் விஜய். இந்த தகவலை சொர்ணமால்யா சென்ற வருடம் பதிவு செய்திருக்கிறார். சிவகாசி பட ப்ரோமோஷனுக்கு சென்றோம், ஒரு நாள் முழுவதும் அங்கெ இருந்தோம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து, என்னமோ பட்டாசு ஆலை தொழிலாளர்களை பார்ப்பதற்காக சிவகாசி சென்றது போல பேசியிருக்கிறார் கீர்த்தனா.
தேவையே இல்லாமல் பேசி மாட்டிக் கொண்டிருக்கிறார்.
.png)
.png)
No comments:
Post a Comment