பெண்கள் வீட்டிலேயே முடங்க வேண்டுமா? - அரேபிய குர்ஆன் சுன்னி மத மௌல்வி அபுபக்கரின் கருத்துக்கு வி.டி.சதீசன் கண்டனம்
02 Sep 2026, திருவனந்தபுரம்: பெண்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது என்றும் கேரளாவைச் சேர்ந்த சுன்னி முஸ்லிம் மத மதகுரு அபுபக்கர் கூறி இருந்த நிலையில், அவரது கருத்துக்களைக் கண்டித்துள்ள முதல்வர் வி.டி.சதீசன், பெண்கள் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், “பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். கேரளாவின் வளர்ச்சிக்கு இது ஏற்றதல்ல. இதுபோன்று கூறுவதற்கு இது ஒன்றும் 19-ம் நூற்றாண்டு அல்ல. பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கக்கூடாது. அவர்கள் பொது வாழ்வில் இணைய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் பிந்து கிருஷ்ணா, “பாலின பாகுபாடு இன்றி ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை மக்கள் பெற்றிருக்கிறார்கள்.
இதுபோன்ற கருத்துக்கள் பெண்களை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளிவிடும். எனவே, இத்தகைய கருத்துக்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் பெண்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்கள். அவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாகவும் திகழ்கிறார்கள். எங்கள் பெண்கள் இந்த சமூகத்தின் ஒரு பகுதியாகவே வளர்ந்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாது.” என தெரிவித்திருந்தார்.
கொச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் பேசிய மதகுரு அபுபக்கர், “மத நிகழ்வுகளில் பெண்களின் பங்கேற்பு குறித்து சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமாவின் காந்தபுரம் பிரிவு மதக்குழுக்களுக்கு பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் மிகவும் சரியானவை. பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது. புனிதகுர்ஆன் அவ்வாறே கூறுகிறது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவே புர்கா முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் இன்றி பெண்களை பொதுவெளியில் அனுமதிப்பது பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும். இந்த கட்டுப்பாடுகள் பெண்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக அவர்களை கவுரவிக்கவும் பாதுகாக்கவுமே விதிக்கப்பட்டவை.
குடும்ப வாழ்க்கையை கைவிடாமலேயே பெண்களின் நிலையை உயர்த்தும் நோக்கில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு சொத்து மற்றும் வாரிசுரிமையை வழங்கியுள்ளது. எனது கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அது என்னை பாதிக்காது. எதிர்ப்பின் மூலம் யாரும் என்னை மவுனமாக்கவோ இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்றியமைக்க நிர்ப்பந்திக்கவோ முடியாது” என தெரிவித்திருந்தார்.
சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், மத நிகழ்வுகளின்போது அந்நிய ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் இருப்பதை மதரசாக்கள் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இளம் பெண்கள் பொது மேடைகளில் காட்சிப்படுத்தப்படுவதையோ அல்லது அந்நிய ஆண்களுடன் இணைந்து சாலைகளில் செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தி இருந்தது.

No comments:
Post a Comment