Thursday, July 12, 2018

ஜான் சாமுவேல்-பேராயர்.அருளப்பா, பாவாணர், தெய்வநாயகம் கூட்டணி திருக்குறளிற்கு செய்யும் மோசடிகளும் கேடும்

திருக்குறளை கிறிஸ்துவ நூல், கிறிஸ்துவத் தொன்மக் கதை நாயகன் ஏசுவின் சீடன் தோமா என்பவர் போதனையில் திருவள்ளுவர் எழுதியதே குறள் என நிருபிக்க தொடர்ச்சியாய் தமிழக கிற்ஸ்துவம் மோசடிகளை செய்து வருகிறது. 
திருக்குறளை கிறிஸ்துவ நூலாக அறிவிக்கும் மோசடியின்  ஆரம்பப் புள்ளிகள் சாந்தோம் சர்ச் பேராயர் ஆர். அருளப்பா, CSI பிரிவின் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியின்    பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி,  பாவாணர் தேவநேயன் எனும் ஒரு பெரும் கிறிஸ்துவக் கூட்டம்.
1969ல் முதல் நூல் “திருவள்ளுவர் கிறித்தவரா?” வெளிவருகிறது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி வாழ்த்துரையோடு.  அந்நூலில் அருவருப்பான கிறிஸ்துவ நச்சுப் பொய்கள்- 
திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

கிறிஸ்துவப் பன்றித்தன பொய் நூலை- தமிழை தமிழரை திருவள்ளுவரை இதைவிடக் கேவலமாய் கூறமுடியாது எனும்  பாவாணர் கண்டிக்கவே இல்லை, விளம்பரமே கொடுக்கின்றார்.
வள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச் சார்பற்றவராய்  மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர். கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் “திருவள்ளுவர் கிறித்தவரா?” என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன.// 

1969ல் இதே நேரத்தில் தேவநேயரின் திருக்குறள் தமிழ் மரபுரை- முழுவதும் நச்சு பொய்கள், அருவருப்பாய் வள்ளுவத்தைக் கொச்சை படுத்தல் எல்லாம் நிறைந்த உரையும் வெளியாகிறது.
தெய்வநாயகம் பெயரில் மேலும் பல நச்சு  குப்பை நூல்கள்வெளியாகிறது
 ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார்? எழு பிறப்பு?? சான்றோர் யார்?

இவற்றில் ஒரு நூல்கூட வள்ளுவர் சொன்னதை, கூறுவதில்லை; இப்படி கிறிஸ்துவ குப்பைகள் எழுத உதவியது பொதுமறை என திருப்பி திருப்பி உளறி, குறளில் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றும் குறள்களை எல்லாம் சிதைத்து பொருள் செய்த பல உரைகளே, பலவும் எழுதியது பெரும் புலவர்களே, ஆனால் கிறிஸ்துவ காலனி திட்டம் பரப்பிய நச்சுபொய் ஆரிய - திராவிடக் கொள்கைகள், அந்தணர் மீது வெறுப்பு வளர்த்தல் இவற்றினால் எழுந்த உளறல் உரைகள் உதவின.
கிறிஸ்துவர் சதிகளில் பைத்தியக்கார உரைகளை எழுதியோர்கள், தங்கள் உரையை சிதைத்து கிறிஸ்துவர் இப்படி செய்ததை கண்டிக்கவும் முடியவில்லை, மேலும் கிறிஸ்துவர் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களின் வாங்கும் சக்தி, ஆளும் தமிழர் விரோத திமுக ஆட்சி வேறு.
சர்ச்சுகள் ஒரு மாபெரும் மாநாடு - 1972ல்
சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது. சர்ச்சுகள் ஒரு மாபெரும் மாநாடு - 1972ல், திருக்குறளில் அன்று ஆய்வில் இருந்த உச்சகட்ட அறிஞர்கள் கிட்டத் தட்ட அத்தனை பேரும் எனலாம், முடிவில் கிறிஸ்துவப் பாவாணர் திருக்குறள் கிறிஸ்துவம் இல்லை என தீர்ப்பு தந்தாராம்.
 


  
 

சர்ச் இத்தோடு நிறுத்தவில்லை; பாவாணர், பேராயர், சத்தியசாட்சி அணி இந்த மாநாட்டை மறைத்தது, திருக்குறளிற்கு பழங்காலம் தொட்டு கிறிஸ்துவ உரை மோசடி ஓலைச் சுவடி தயாரிக்க திட்டம் தீட்டினர்.

ஸ்ரீரங்கம்சேர்ந்த ஜான் கணேஷ் ஐயர் என்பவரை தயார் செய்து, அவருக்கு 1973 -76க்குள் 14 லட்சம் தந்து மோசடி சுவடி தயாராக; சர்ச் செலவில் உலக சுற்றுலா, அன்றைய போப் அர்சருடன் தனி சந்திப்பு எல்லாம் செய்தனர்.
ஆனால் சர்ச் உள்ளே பொறாமை போட்டியால் போலிசுக்கு, நீதிமன்றம் செல்ல, அந்த ஜான் கணேஷ் ஐயர்  குற்றவாளி என தீர்ப்பு வந்தது, ஆனால் தீர்ப்பை நிறுத்தி சர்ச் கோர்டுக்கு வெளி சமாதானம் என அவரை வெளிவிட்டது, இவை அனைத்தும் அன்றைய இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிக்கையில் முழுமையாய் வெளி வந்தது.
சர்ச் - மெட்ராஸ்  பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து, அதில் தெய்வநாயகத்திற்கு - முனைவர் பட்டமும் விற்றது- "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு" என.
இந்த மோசடி கூட்டத்தோடு ஜான் சாமுவேல் எனும் அறிஞர், இவர் ஆசியவியல் நிறுவன இயக்குனர், அங்கு பல மோசடிகள் செய்தார் என நிருபிக்கப் பட்டு, சிறையும் சென்றார், நீக்கவும் பட்டார், ஆனால் ஜப்பானியர் உதவியுடன் சில சிறு சட்ட ஓட்டைகளால் வெளி வந்தவர்; தோமோ வருகை - தெய்வநாயகம் - வி.ஜி.சந்தோஷம் கும்பலோடு சேர்ந்து கொண்டார். ( ஜான் சாமுவேல் மோசடி, பட உதவி வரலாற்று அறிஞர் திரு.வேதம் வேதப் பிரகாஷ் கட்டுரைகள்
  





செயின்டு தாமஸ் சொல்லிக் கொடுத்து திருவள்ளுவர் கிறிஸ்துவ திருக்குறள் எழுதினார் எனும்படி உலக தமிழ் கிறிஸ்துவ மாநாடுகள் சென்னை, அமெரிக்கா, மலேசியா எனப் பல இடங்களில் ஜான் சாமுவேல் -தெய்வநாயகம் மோசடி குழு நடத்தி உள்ளது.
நடுவில் திருக்குறள் மாநாடுகள்;
 

 

 


திருவள்ளுவரை இழிவு செய்த ஜான் சாமுவேல் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மாநாட்டில் திருக்குறளை கிறிஸ்துவர் இழிவு செய்தனர் என உள்ளூர் திருக்குறள் மன்றம் வேறோரு மாநாடு நடத்தியது, இந்த நிலையில் இங்கிலாந்து லீவர்பூல் பல்கலைக் கழகத்தில் மாநாட்டில் திருவள்ளுவரை இழிவு செய்த ஜான் சாமுவேல் பின்னால் செல்ல தமிழ் பகைவர்கள், கயமை புலவர்களும் உள்ளனர்

Tuesday, July 10, 2018

பாவாணர் பிதற்றும் வர்ணாஸ்ரமம் போற்றும் கிறிஸ்துவ நச்சு - தமிழ் மரபுரை

தேவநேயப் பாவாணர் எனும் கிறிஸ்துவ மதவெறி பிடித்து, தமிழ் பற்றாளர் வேடத்தில் செய்த நச்சுக் கருத்துகளில் ஒன்று - திருக்குறள் தமிழ் மரபுரை

வள்ளுவர் -இல்வாழ்க்கையில் இயல்புடைய மூவர்


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை  (குறள்  41; இல்வாழ்க்கை ) 
இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக்  பிரித்துக்  குறிக்கவில்லை என்பது தெளிவு, இதை விளக்க அடுத்த குறளைப் படித்தால் போதும் - (துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை), - எனவே இது பெற்றோர், மனைவி, குழந்தை என்போர் வள்ளுவர் வழியிலிருந்து விலகி விடுகின்றனர்.

திருவள்ளுவர் இந்திய தத்துவ ஞான மரபு வழியினர், எனவே அறிவு சார்பு வழியினர், , அவர் இங்கு இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். அறிவு சார் சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர், துறவியர் - குடும்ப வாழ்வு என மூன்றாகப் பிரியும். அன்றைய நிலையில் கல்வி என்பது, ஆசிரியர் வீட்டில் இருந்து குருகுலக் கல்வி தான், இந்த நிலையில் மாணவர் உணவு - உடை உதவி தேவைகளிற்கு உதவ வேண்டும்; சங்கப் பாடல் ஒன்று வேதக் கல்வி 48 வருடம் என்கும் எனவே இல்வாழ்வான் கடமை மாணவர்களுக்கு உதவுதல், கல்வி பயிலும் மாணவரை பிரம்மச்சாரி என்பது உலக வழக்கு ( Bachelor -பட்டப் படிப்பு), வள்ளுவர் துறவறத்தை ஏற்று போற்றுபவர் எனவே  கல்வி பயிலும் மாணவர்கள், குடும்பம், துறவிகள் என்பது ஒருவன் வாழ்வில் இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணை.

 சமண சமயத்தை சேர்ந்த மணக்குடவர் உரை திருவள்ளுவர் குறள் எழுதி 100 ஆண்டுக்குள் எழுதப் பட்டது - சமணர் உரை


நாம் மேலே பார்த்ததில் சமணர் உரை பார்த்தோம், பரிமேலழகருக்கு முந்தைய மற்ற உரை பரிபெருமாள் மற்றும் பருதியார் உரை அதையும் பார்ப்போம்


கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணர் பழைய உரையாசிரியர்கள் அனைவரும் கூறும் ஒரே பொருள் என்பதை மறைத்து பரிமேலழகர்- அந்தணர் என்பதால்  கிறிஸ்துவ பொய் நச்சு திணிக்க ஆரியர் கொள்கை திணிப்பு என பல இடங்களில் பன்றித்தனமாய் உளறி திட்டுவார்.
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=41

வள்ளுவர் சொன்னதை மாற்றி உளறித் தள்ள வலிந்து அர்த்தமற்று பல பழம் பாடல் சொல்லி, இதில் ஒருவன் என்பது வேளாளனைக் குறிக்கும் - இயல்புடைய மூவர் என்றால் வேளாளன் - பார்ப்பனர், அரச குலத்தினர் (ஷத்திர்யர்) மற்றும் வாணிபம் (வைசியர்) செய்வோர் என வர்ணாஸ்ரமத்தைப் போட்டு குழப்பி பாவாணர் தன் கிறிஸ்துவ வெறியின் உச்சக் கட்ட பைத்திய உரையை இக்குறளில் காட்டி உள்ளார்.





"வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோடொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக.
ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகை அந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக.
திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம்.

இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை" (குறள். 41)
என்னுங் குறட்கு இல்லறத்தோடு கூடி வாழ்வதற்குச் சிறந்தவன் என்று சொல்லப்பெறும் வேளாளன், தன்னைப்போன்றே இல்வாழும் இயல்புடைய பார்ப்பான், அரசன், வணிகன் என்னும் ஏனை மூவர்க்கும், அவர்செல்லும்.//

வள்ளுவர் சொன்னதை மாற்றி உளறித்தள்ள வலிந்து அர்த்தமற்று பல பழம் பாடல் சொல்லி, இதில் ஒருவன் என்பது வேளாளனைக் குறிக்கும் - இயல்புடைய மூவர் என்றால் வேளாளன் - பார்ப்பனர், அரச குலத்தினர் (ஷத்திரியர்) மற்றும் வாணிபம் (வைசியர்) செய்வோர் என வர்ணாஸ்ரமத்தைப் போட்டு குழப்பி பாவாணர் தன் கிறிஸ்துவ வெறியின் உச்சக் கட்ட பைத்திய உரையை இக்குறளில் காட்டி உள்ளார்.



பாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை

திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி  நச்சுப் பொய்யை பாவாணரின் கிறிஸ்துவ பன்றித்தனத்தை ஆங்காங்கே காணலாம்-//"என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும் பிறவற்றைக் கடிந்ததை ஆங்காங்கு நூலுட் காண்க."// (திருக்குறள் தமிழ் மரபுரை )
முழுவதும் பொய் பித்தலாட்டம் - அனைத்து குறளும் தமிழரில் தொல் குடியான அந்தணரைப் போற்றியும், வேதங்களை உயர்த்தி சொல்லப் பட்ட குறள்கள்.
பாசீச இனவெறி பரப்பும் கிறிஸ்துவ பைபிள் தொன்மக் கதைகளை பரப்பி மதம் மாற்றி சர்ச் அடிமையாக்குதலை தடுத்தது அந்தணர்கள் என்பதை 3000 கோவில்களை இடித்தது சர்ச் நீதிமன்றம் அமைத்து கொடுங்கோல் கொலைகளின் சூத்திரதாரி ப்ரான்சிஸ் சேவியர் எனும் சவேரியர்  & லயோலா கடிதம் சொல்கிறது. 


திருக்குறளில் உள்ள சொற்கள் சங்கத் தமிழ் இலக்கிய மரபில் உள்ள பொருள்படியும்,  பின்னரான சிலப்பதிகாரம்-மணிமேகலை படியும் தான்
திருக்குறள் எழுதி நூறு ஆண்டுக்குள் எழுந்த முதல் உரை மணக்குடவர் உரை - அது சமணருடையது
திருக்குறள் எழுதி நூறு ஆண்டுக்குள் எழுந்த முதல் உரை மணக்குடவர் உரை - அது சமணருடையது, அவர் மேலுள்ள குறள்பாக்களில் சிலவிற்கு கொடுத்த பொருள் பார்க்கலாம்




திருக்குறள் - 1330 குறட்பாக்களில் ஒரு முறை கூட வள்ளுவர் பயன்படுத்தாத சொல் தமிழ். மேலும் மொழியால், இனத்தால், மதத்தால் பிரிவினை தூண்டுவோரை நாட்டினை பாழ் செய்யும் உட்பகை என வள்ளுவர் சாடுவார்

ஒருவன் நிறைய அறம் செய்தால் உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின்,  இழிவாய் அறத்திற்கு மாறாய் செய்தால் பாவம் உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயேய் விடுவான்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.                                        ஒழுக்கமுடைமை குறள் 133:
மணக்குடவர் உரை:ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

இங்கு ஜாதியை இழுத்து - பிராமணனை தாக்குவது பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி நச்சு பொய்கள், பைத்தியக்கார உளறல்கள்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                  ஒழுக்கமுடைமை  குறள் 134:
மணக்குடவர் உரை:  பிராமணன் வேததித்னை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
அன்றாடாம் ஓதும் வேதத்தை கூறுகையில் மறந்தாலும், மீண்டும் கற்கலாம், தன் பிறப்பு குடி ஒழுக்கத்தை விட்டால் இழிந்தவனாய் கெடுவான் என்கிறார் வள்ளுவர்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.   குறள் 543- செங்கோன்மை
மணக்குடவர் உரைஅந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.    குறள் 560:  கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.
வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29



Sunday, July 8, 2018

திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி

தேவநேயப் பாவாணர் மிழறிஞர், ஆனால் 2ம் தலைமுறை கிறிஸ்துவர், தன் மதவெறியை மறைத்து தமிழ் பற்றாளர் வேடமிட்டு நச்சுக் கருத்துகளை மொழி நூல் எனும் பெயரில் பிரிவினை விஷக் கருத்துக்களை எழுதியவர். 
பாவாணர் பற்றிய செய்திப் படி  தன் பேரன்கள் எவருக்கும் தமிழ் பெயர் வைக்காமல் பைபிள் தொன்மத்தில் உள்ள ஹீப்ரு, லத்தீன் பெயர்கள் வைத்து- தான் முழுமையான கிறிஸ்துவர் மட்டுமே; தமிழர் அல்லர் என நிருபிக்கிறார்.
சாந்தோம் ஆர்சி சர்ச் பல லட்சம் செலவு செய்ய சிஎஸ்ஐ சர்ச் மற்றும் லுத்ரன் என பல்வேறு சர்ச்கள் சேர்ந்து செய்த சதி தான் திருக்குறளை கிறிஸ்துவம் என்பதாக மாற்றுவதன் ஆணிவேர் பாவாணர் எனவும் சில வயதான அறிஞர்கள் கூறி உள்ளனர், தெய்வநாயகம் முனைவர் கட்டுரையின் நடை பெருமளவு பாவாணரது போலவே இருக்கும். மொத்தமும் உளறல் கிறிஸ்துவ பிரிவினை நச்சு கருத்துக்கள்.

1969ல் நூல் வந்ததை கண்டித்து தேவநேயர் ஏதும் எழுதியதாய் இல்லை. ஆனால் நூல் அட்டையில் வள்ளுவரை ஒரு முனிவராக காட்டுவதை சற்றே திரித்தல் தொடங்கியதை பெருமையாய் வேறோரு நூல் முகவுரையில் பாவாணரே சொல்கிறார்.
வள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச் சார்பற்றவராய்  மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர். கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-

//புலவர் தெய்வநாயகம் தம் “திருவள்ளுவர் கிறித்தவரா?” என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன.//  

1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு -
1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி


தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்? 

பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.

தேவநேயப் பாவாணர் தமிழர் பகைவர், கிறிஸ்துவ வெறியர் என்பதை மிக எளிதாய் அவருடைய திருக்குறள் தமிழ் மரபுரை படித்தால் அனைவரும் ஏற்பர்.
தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம் நூலில் ஒரு கட்டுரை - "திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்" புலவர் தமிழர் வரலாற்றில் மிகவும் புலமை பெற்றவர், இவர் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளது, அதில் ஒரு நூல் தட்டச்சாக தமிழ் பல்கலைக் கழக இணையத்திலேயே உள்ளது. "பதினெண் கீழ்க்கணக்கும்" அந்த நூலில் உள்ள இணையப் பக்கம்

 ‘மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.                 (கு. 134)  
 வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். வேதம் கற்பவன் தன் பிறப்பிற்குரிய ஒழுக்கத்திலே தவறுவானாயின், அவன் குடிப்பெருமை அழியும்.’

வள்ளுவர் காலத்திலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற
நால்வகைப் பிரிவுகளும், இன்னும் பல பிரிவுகளும் தமிழர் சமுதாயத்தில்
இருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு வேற்றுமைகளும் இருந்தன.
இவ்வுண்மையை இக்குறளால் காணலாம்.

‘‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                         (கு.543)
 அந்தணருடைய வேதத்திற்கும், அறத்திற்கும் அடிப்படையாகி நின்று
உலகத்தைக் காப்பாற்றுவது அரசனது செங்கோல்தான்.’’    
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

  ‘‘ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;
        காவலன் காவான் எனின்.                           (560)
      அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காப்பாற்றாவிட்டால் பசுக்களின்  பயன் குன்றும்; அந்தணர்கள் அறநூலை மறந்து விடுவர்.’’                        

தமிழகத்தில் வேதங்களும், வேள்விகளும், வழங்கி வந்தன; அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர்; வேள்விகளையும் வேதியர்களையும் காப்பாற்ற வேண்டியது அரசாட்சியின் கடமை; இக்கருத்தை இவ்விரண்டு குறள்களும் கூறின.

‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.    (259)
 நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகம்
செய்வதைக் காட்டிலும் ஒரு பிராணியின் உயிரைக் கொன்று
தின்னாமலிருத்தல் சிறந்தது.‘‘
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின்

இக்குறளை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிருக்கிறார் என்று கூறுவோர் உண்டு. புலால் உண்ணாமையின் சிறப்பைக் கூற வந்ததே இக்குறள். யாகம் தீமையானது; அதைச் செய்யக்கூடாது என்று இக்குறள் சொல்லவில்லை. யாகத்தால் வரும் புண்ணியத்தைவிடப் புலால் உண்ணாமயால் வரும் புண்ணியமே சிறந்தது என்றுதான் இக்குறள் உரைக்கின்றது. ஆதலால் இது வேதவேள்வியைக் கண்டிக்கும் குறளாகாது.

பாவாணர் கிறிஸ்துவ வெறியில் பொய், மோசடியாய் எழுதினார் என்றால், அந்தணர் மேல் கிறிஸ்துவர் பரப்பிய பொய்யில் எமாந்து பைத்தியக்காரத்தனமாய் உரை எழுதியோர் கா.சு.பிள்ளை மற்றும் அப்பாதுரை போன்றோர்.

தமிழ் பகைவர்கள், திராவிட மலக் கூட்டத்தோடு இணைந்த குப்பை உரைகள் பாவலேறு, இலக்குவனார் போன்றோர், தங்கள் அறிவை கிறிஸ்துவ காலனி நச்சிற்கு அடிமையாய் தமிழ் பகைவராய் போனர்.

நாம் திராவிட சாக்கடையுள் முழுதாய் ஊரிய புலவர் குழந்தை, நெடுஞ்செழியன் உரைகள் ஆய்விற்கே தகுதி அற்றவை.

Monday, June 4, 2018

கருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்

தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு ண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  =         சிலம்பு 7. வரந்தரு காதை 

தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. 

 

திருவள்ளுவர் வேடமிட்டு தமிழர் பண்பாட்டின்படி  பூனூல் எனும் முப்புரி நூல் அணிந்து வந்த சிறுவனை சற்றும் மேடை நாகரீகம் இல்லாமல் கருணாநிதியும், அவர் மகனும் பன்றித்தனமாய் கேலி செய்யும் அருவருப்பன காட்சி



14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான்

1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார், ஆனால் தமிழ் பகைவர்கள் கிறிஸ்துவ, மார்க்ஸிய, திராவிஷங்கள் நீக்கியதை 2011ம் தேதி கருணாநிதி தன் பேச்சில் குறிப்பிட்டதன் வ லைப் பக்க படக் காட்சி  





திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

திருக்குறளை மலம் எனப் பேசியவர் திராவிட இயக்க நிறுவனர் நயினா கன்னடர்- ஈ.வெ.ராமசாமி, இவர் தமிழ் சனியந் இதை அழிக்கவே திராவிடம் எனத் தெளிவாய் பேசிய காட்டுமிராண்டித்தனமான ஜாதிவெறி கொண்டு அலைந்தவர்.
50 ஆண்டு திராவிட இயக்க ஆட்சியில் சாராயம் - ஏசுவின் ரத்தம் ஆறாக ஓடவிட்டது மட்டுமே சாதனை.

தமிழை அழிப்பதையே தொடர்கிறது திராவிஷம்