Sunday, September 3, 2023

மனஅமைதி தரும் சனாதன தர்மம்- இந்து மதம் :ஜூலியா ராபர்ட்ஸ்

ஹாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன்  கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

https://www.youtube.com/watch?v=ryf4i7pCLeY

இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.



இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின்
படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள்
வரை இந்தியாவில் தங்கி இருந்தார்.

“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில்
நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில்
வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன
நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில்
இருந்த காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள்,
ஆராதனைகள், அபிஷேகங்களில் கலந்து கொண்டார்.

டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி
பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக எடுத்துக் கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டது.

இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ
மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார்.  இது பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர்.

சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று
அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து
வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன்.
இந்த ழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு டைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும்
போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற
பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை
கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு
பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து
மதம் என்வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. -வ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார்.

ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு
தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட்,
ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக
வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து
மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும்
என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.

http://www.maalaimalar.com/2010/08/07133837/Julia-Roberts.html

World celebrities who embraced Hinduism (Sanatan Dharma) !

https://www.thehinduportal.com/2019/03/world-celebrities-who-embraced-hinduism.html


மைனாரிட்டி கல்லூரிகளில் கிறிஸ்துவர்களுக்கு 50% ஒதுக்க மாட்டோம்- சர்ச் நிர்வாகம்

 சென்னை: சிறுபான்மைக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்று வரையறை நிர்ணயம் செய்யும் மாநில சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் லயோலா, ஸ்டெல்லா மேரிஸ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், “ சிறுபான்மையினர் கல்லூரிகளான எங்கள் கல்லூரிகளைப்போல் தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1998ல் டிஎம்ஏ பாஸ் பவுன்டேசன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்க கடந்த 1998 ஜூன் 17ல் தமிழக அரசு சில வழிகாட்டுதல்களை உருவாக்கியது. அதில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கையில் 50%த்திற்கு மிகாமல் சிறுபான்மையினருக்கு இடம் தரவேண்டும். அதை நிரப்ப முடியவில்லை என்றால் பொதுவான மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரிகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும் சேர்க்கைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எங்கள் கல்லூரிகளுக்குத் தரப்பட்ட சிறுபான்மை அந்தஸ்து 2007 முதல் 2012 வரை அதாவது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று 2009 அக்டோபர் 8ம் தேதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையைப் பிறப்பித்தது.
 
இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடியானது.  இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ம்தேதி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் எங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் 2017 முதல் 2019ம் கல்வி ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களைக் கேட்டுள்ளது. எங்களை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 50 சதவீத சேர்க்கை சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.
 
இது விதிமுறைகளுக்கும், சிறுபான்மையினரின் நலனுக்கும் முரணானது. எனவே, சிறுபான்மை ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 2 வாரங்களில் பதில் தருமாறும் நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449247

நக்கீரன் அலுவலகம் விதி மீறல்கள்- இடிக்கலாமா? - ஈஷா ஆதியோகி சிலையும்

நக்கீரன் அலுவலகம் -சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில், - 104ம் எண் கட்டிடம், இது உள்ளே அமைந்து உள்ளது - 4 அடி குறிகிய பாதை வழியாக 50அடி உள்ளே அமைந்து உள்ளது
Nakkheeran Publications (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்)
105, Jani Jhan Khan Rd, Royapettah, Chennai, Tamil Nadu 600014

சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில், - 104ம் எண் கட்டிடம், இது உள்ளே அமைந்து உள்ளது - 4 அடி குறுகிய பாதை வழியாக 50அடி உள்ளே அமைந்து உள்ளது. இதில் 5 மாடி கட்டிடம் உள்ளது, 2005ல் கட்டப்பட்டது 

இந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டுவது திட்டமிட்ட விதிமீறல் ஆகும். அஸ்திவாரம் போடுவதில் கம்பிகள் தேர்வு முதல் அனைத்துமே திட்டமிட்டு சட்ட வீதிகளை உடைத்து கட்டியது ஆகும்







 

Saturday, August 26, 2023

விஞ்ஞானி நம்பிநாராயணன் 'தேசத்துரோகி',எனசீரழிக்கப்பட்ட வரலாறு 'ராக்கெட்ரி-நம்பி விளைவு!'திரைப்படம்.

 தேசப்பற்றாளரை, 'தேசத்துரோகி',என பட்டம் சூட்டப்பட்டு அவருடைய வாழ்க்கையை சீரழிக்கப்பட்ட வரலாற்று ஆவணம்தான்,'ராக்கெட்ரி-நம்பி

https://www.facebook.com/groups/897137793992554/?multi_permalinks=1909857709387219&hoisted_section_header_type=recently_seen&__cft__[0]=AZWMokUx8mm4jwNVKYGUGBKD0Ly5ikV_a_8GY4y82LGqAyrJAITM_Lqmi23GZ9x0OmVi61Tp-U3h0kW1Ky7K_PzKWQT56Mo9Du4qug-qVrw9vAilEEEnFWq6XKtJsYk0eKvQ48wcsGX1TZA6xn1weKIe9dgjUwrKdqIOcdgPOPUyhw-D82hLViIiROigZrXcFTw&__tn__=%2CO%2CP-R

விளைவு!'திரைப்படம்.தன்னுடைய முதல் படத்தையே தமிழ்சினிமாவில் முத்திரை பதிக்கும் விதமாக எடுத்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர்-R.மாதவனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் படத்தை எடுக்கும் பொழுதே, அவருக்கு நன்றாகத் தெரியும் படம் வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று.இருந்தும்,அவர் துணிந்து எடுக்கக் காரணம் சினிமாவின் மீது அவர் வைத்த காதலும், தேசப்பற்றும்,அப்பழுக்கற்ற தலைசிறந்த ஒரு விஞ்ஞானியின் மீது தேசத்துரோகம் பட்டம் சூட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே ஆகும்.

நம்பி நாராயணன் அவர்கள் நாகர்கோவிலில் பிறந்தவர்.படித்தது,மதுரை தியாகராயர் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பை முடித்தவர்.

இங்கு,படிப்பை முடித்தப் பிறகு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சீட் கிடைக்க, அங்கு தனது படிப்பை தொடர்ந்தார்.அங்கு சீட்கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இவருடைய தேசப்பற்றுக்கு ஒரே ஒரு சம்பவம் மட்டும் போதுமென நினைக்கிறேன்.படிப்பு முடித்தவுடன், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது.அதே நேரத்தில்,இஸ்ரோவின் அன்றைய இயக்குனரும் இவரின் குருவும் ஆன விக்ரம்சாராபாய் அவர்கள் இஸ்ரோ விண்வெளி மையத்தில் இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அவர் நம்பிநாராயணனிடம்,'உன்னுடைய திறமை நம் நாட்டிற்கு பயன்படவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.ஆனால்,நாசா கொடுக்கும் சம்பளம் எல்லாம் இங்கே கிடைக்காது என்பதும் ஒனக்குத் தெரியும்.முடிவு செய்ய வேண்டியது நீதான்',என்கிறார்.அதேநேரத்தில் நாசாவிலும் இவரை பணியிலிருந்து விடுவிக்க மனமில்லை.ஆனால்,விஞ்ஞானி நம்பி நாராயணன் பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு, தாய்நாட்டிற்காக இஸ்ரோவிற்கு பணியாற்ற வருகிறார். இப்படியாப் பட்டவரைத்தான் தேசத்துரோகி என பட்டம் கொடுத்து ,இவரையும் இவருடைய குடும்பத்தையும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 50 நாட்கள் வரை சித்ரவதை செய்திருக்கிறது கேரள உளவுத்துறை போலீஸ்.

இவருடைய சிறப்புகளைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ இன்று விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் படைப்பதற்கு தலைசிறந்த விஞ்ஞானியான நம்பிநாராயணனின் உழைப்பும் அடங்கியிருக்கு.

விண்வெளித்துறையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து,விண்வெளித் துறையின் எதிர்காலம் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் போகும் என்பதை 1970-களில் உணர்ந்து அதற்கான முயற்சிகளில் இறங்கி திரவ எரிபொருள் விண்வெளி என்ஜினைக் கண்டுபிடித்தார் நம்பி நாராயணன்.

இன்றைய ராக்கெட் தொழில் நுட்பத்தில் அதிகமாக பயன்படும் கிரையோஜெனிக் இன்ஜின் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

விக்ரம் சாராபாய் இறந்த பிறகு,ராக்கெட்டுக்கான கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார். அதற்கு,'விகாஸ்',என தனது குருவின் நினைவாக பெயர் வைக்கிறார்.

நம்பி நாராயணனாக மாதவன்!

விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம் நடிகர் மாதவன்.நம்பிநாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை ,நம் மனதை ஆக்கிரமிக்கும் வகையில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மாதவன் அவர்கள்.

நம்பிநாராயணன் எழுதிய சுயசரிதை நூல்,'ஓர் மகனூட ப்ரமந பதம்'.அந் நூலை அடிப்படையாக வைத்தே திரைக்கதை அமைத்திருக்கிறார்,மாதவன்.

திரைக்கதை அமைத்தப்பிறகும், அவர் அருகிலேயே இருந்து பல ஆலோசனைகளை எல்லாம் கேட்டு ராக்கெட்டின் தொழில்நுட்பங்களை எல்லாம் துல்லியமாக எழுதிய பிறகே படப்பிடிப்புக்கே சென்றிருக்கிறார்.அதனால்தான்,படத்தின் முதல்பாதியில் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கிறார்கள்.கதை ராக்கெட் சம்மந்தப்பட்டது எனும் பொழுது அதைப்பற்றிய விளக்கமும் தேவைதானே!

காட்சிகளில் எந்த ஜோடனைகளும் இல்லை.அதுவும் உடல்ரீதியாக அவருக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளைப் பார்க்கும் பொழுது,அவருடைய மன உறுதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஒருவேளை,சித்ரவதை தாங்கமாட்டாமல் அவர்கள் கூறும் பழியெல்லாம் ஒத்துக்கொண்டிருந்தால், ஒரு அப்பழுக்கற்ற தேசப்பற்றாளர் நிரந்தரமாகவே தேசத்துரோகி பட்டத்தை சுமந்திருப்பார்.அதை நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கலங்கி விடுகிறது.

அவர் சித்ரவதை செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 50 நாட்கள் சிறையில் இருந்த பொழுது,இப்படிக் கூட அவருடைய எண்ண ஓட்டம் ஓடியிருக்கும்,'நான்,நாசா விண்வெளி மையத்திலேயே வேலை செய்திருந்தால் இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டிருக்காதே',என்று உறுதியாக நினைத்திருப்பார்.அப்படி நினைப்பதுதான் நியாயமானதும் கூட.

இவர்,பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை சொன்னதாக நாளிதழில் வந்ததை படித்து விட்டு, இவரையும் இவருடைய குடும்பாத்தாரையும் ,சொந்தபந்தங்கள் எல்லாம் அவமதிக்கும் நிகழ்வை எல்லாம் காட்சிவழியாக பார்க்கும் பொழுது எப்படித்தான் இவ்வளவு கொடுமைகளை எல்லாம் இந்தக் குடும்பம் தாங்கோச்சோன்னு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

ஒரு காட்சியில் விசாரணை(50நாட்கள்)எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மகன்களும் மகளும் கண்ணீரோடு நிற்க,மாதவன்(நம்பி நாராயணன்),'அம்மா எங்கே',ன்னு கேட்க ,'அம்மா ரொம்பவும் ஒடைஞ்சிட்டாங்கப்பா',ன்னு சொல்லி வெடித்து அழ ஆரம்பிக்க ,படம் பார்க்கும் நாம் என்ன ஏதுன்னு அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்போம்.

மாதவன்(நம்பி நாராயணன்)பதறியபடியே மனைவியின் அறையைத் தேடி ஓடுவார்...அங்கு அவரின் மனைவியின் நிலையைக் கண்டு நம் மனம் அலறித் துடிக்கும்.இக்காட்சியில் சிம்ரன் போன்ற திறமை வாய்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும்.அதனால்தான்,மாதவன் இக்கதாபாத்திரத்திற்கு சிம்ரனை மிக சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவரை தேசத்துரோகி என எல்லா ஊடகங்களும் போட்டிப் போட்டு கத்தியது மாதிரி ,உச்சநீதிமன்றம் இவரை நிரபராதி என விடுவித்தபோது, ஏன் பெரிய அளவில் Focus பண்ணவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

எப்பொழுதுமே ஊடகங்கள் எதிர்மறை சம்பவங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,நேர்மறை சம்பவங்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இவரை நிரபராதி என உச்சநீதிமன்றம் விடுவித்தப் பிறகு ,இந்தச் சிக்கலில் இவரை மாட்டியது யார் ?பின்னணி என்ன?இந்தக்கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது வரையில் விடையே இல்லை.

காட்சிப்படி,மாலத்தீவில் இரண்டு பெண்களை இவர் சந்தித்தாகவும் அவர்கள் மூலமாகவே இவர் ராக்கெட் ரகசியங்களை விற்றதாகவும் சொல்லப்படுகிறது.அப்பெண்கள் இவரை பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார்கள்.பின் ஏன் கேரள உளவுத்துறை போலீஸ் நம்பிநாராயணனை இப்படியொரு கேஸில் மாட்டவைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

இவருக்கு நஷ்டஈடாக வெறும் 50 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டும் ,இவரும் இவர் குடும்பம் அடைந்த மன உளைச்சலை எல்லாம் நேர்செய்து விட முடியுமா?

படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று.விசாரணைக் கைதியாக நம்பி நாராயணன் சிறையில் இருக்கிறார்.இவருடன் பணியாற்றிய, இக்கட்டான சூழ்நிலையால் நம்பிநாராயணனை தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும், அவர் மேல் அடங்காத கோபத்தில் இருக்கும் சக விஞ்ஞானி ஒருவர் மாதவனை (நம்பிநாராயணன்) சந்திக்க வருகிறார்.அப்பொழுது அவர் சொல்லும் டயலாக் காட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்."ஒன்னையை இந்தக் கோலத்துல பாக்க எனக்கு சந்தோஷமாத் தான்யா இருக்கு...அதற்காகத்தான் ஒன்னையை பாக்கவும் வந்தேன்...அதே நேரத்துல ஒன் கூட வேலை செஞ்சவங்க யாருமே பாக்க வரலேன்கிறதை நினைச்சும் ஆச்சர்யப் படறேன்....என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில எனக்கு ஒன் மேல கோவம் இருந்தாலும் ஒன்னையை நாட்டைக் காட்டிக் கொடுக்கற தேசத்துரோகியா ஒருக்காலும் என்னால ஏத்துக்கவே முடியாது",ன்னு சொல்வார்.இதற்கான reaction-ஐ அற்புதமா வெளிப்படுத்துவார் நடிகர் மாதவன்.இக்காட்சிக்கான பின்னணிக் காட்சியானது படத்தின் மிக முக்கியமான காட்சியாகும்.நம்பிநாராயணன் அவர்களின் Character-ஐ ஆணித்தரமாக சொல்லும் அழுத்தமான காட்சியும் கூட.

நம்பிநாராயணன் அவர்களின் சக விஞ்ஞானியாக பணியாற்றியவர்களில் அப்துல்கலாமும் ஒருவர் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

நடிகர் மாதவன் நம்பிநாராயணன் கதாபாத்திரத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார். தொப்பை எல்லாம் இயற்கையாகவே வளர்த்திருக்கிறார்.எவ்வித செயற்கையும் கிடையாது.இதற்கான வீடியோவும் தனியா இருக்கு.Old getup-ஐ அப்படியே தன்னுடைய மேக்கப் மூலம் அழகாக கொண்டு வந்திருக்கிறார்.நடிகர் சூர்யா படப்பிடிப்புத்தளத்தில் 'யார் உண்மையான நம்பிநாராயாணன் ',என கண்டுபிடிக்க முடியாமல் சற்று நேரம் திணறியிருக்கிறார்.

விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு கொடுத்த மன உளைச்சலுக்கு ஈடு செய்யும் விதமாக, இந்தப் படத்திற்கு இந்தியா முழுக்கவே வரிவிலக்கு கூட கொடுத்திருக்கலாம்.

இன்றைய மாணவச்செல்வங்கள் எல்லாம் விஞ்ஞானி நம்பிநாராயணனின் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நடிகர் சூர்யா நம்பிநாராயணனை நேர்காணல் எடுப்பதிலிருந்து படம் விரிகிறது.

நேர்காணல் முடியும்பொழுது,சூர்யா Emotional ஆகி நம்பிநாராயணன் காலில் விழுந்து ,'இந்த நாட்டின் சார்பா நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்',என சொல்லும் பொழுது நம்மாலும் கண்ணீரை அடக்க முடியாது.

அந்தக்காட்சியில் மாதவனை dissolve ஆக்கி நிஜ நம்பி நாராயணனை காண்பித்து காட்சியை அழகுபடுத்தியிருப்பார்கள்.தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிய பிறகு,அவர் கண்ணீர் சிந்தி அழும் காட்சியில் திரையரங்கமே ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கி விடும்.

இசையமைப்பாளர் சாம் C.S.,ஒளிப்பதிவாளர் சிரிஷாராய் -போன்றவர்களின் அர்ப்பணிப்பை காட்சிகளின் வழியே கண்டு அவர்களின் மீது பெருமதிப்பும் கொண்டேன்.

இதுதான்,இப்படத்திற்கான வெற்றி.தேசிய விருதுகள் பல கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் அதே வேளையில் தேசப்பற்றாளரை தேசத்துரோகி என குத்தப்பட்ட கொடுமையான காலத்தையும் மீண்டும் நினைவு படுத்தவே இப்பதிவு!

சே மணிசேகரன்

ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம் கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்த...