Wednesday, August 25, 2021

தேவநேயப் பாவாணர் குடும்பம் தமிழர் மாண்பை இழிவு செய்கின்றனர்.

தேவநேயப் பாவாணர் குடும்பம் தமிழர் மாண்பை இழிவு செய்கின்றனர். 
 அரசு வேலை வேண்டும் - பணம் வேண்டும் என்பதற்கு பொய்கள், அதை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் பிரசுரம் செய்கிறது. 2010
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். குறள் 1066: இரவச்சம்.
மணக்குடவர் உரை:இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.
மு. வரதராசன் உரை:பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
மு. கருணாநிதி உரை:தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

(அதிகாரம்:வினைத்துய்மை குறள் எண்:656)

பொழிப்பு (மு வரதராசன்): பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது

 பாவாணர் நூல்கள்0  பாவாணர் உலக வரலாறு ஆய்வில் வல்லுனர் எனக் காட்டிக் கொண்டார். வேர்சொல் ஆய்வில் பன்னாட்டு பல்கலைக் கழக மொழியியல் ஆய்வாளர் யாரு ஏற்காதவகையில் தமிழை உயர்த்துவதாய் வேடமிட்டு இந்தியர்களை ஆரியர் - திராவிடர் எனப் பிரிக்கும் வேலையில் மிகவும் கீழ்த் தரமாக எழுதினார். 

இவர்  நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டும். பிராமணர்களை -  ஆரியர் எனப் புனைந்து கிட்டத்தட்ட  மிகவும் தவறானவர்களாக, ரத்தவெறி   பேய்களைப் போல சித்தரித்து தமிழகத்தில் வெறுப்பு பரப்புதலின் முக்கியப் பணி இவருடையது. தேவநேயன் கிறிஸ்துவர்.  

தன் அனைத்து குழந்தைகளையும் கட்டுக்கதை  கிறிஸ்துவ மதமாகத் தான் வளர்த்துள்ளார். அகராதி வழி பன்மொழி அறிஞர், மொழியியல் ஆய்வு என்ற போர்வையில், பலவிதத்தில் பாரத மக்களின் பூர்வ குடியான அந்தணர்களை இழிவு செய்ய சர்ச்சின் ஒரு ஆயுதமாக மொழி ஆய்வை வைத்து செய்தார்.

அவரது ஆய்வை எந்த ஒரு உலக பல்கலைகழகமும் ஏற்கவில்லை. திருவள்ளுவர் தன் கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயர் சொல்லவில்லை என்பதால் அவரை கிறிஸ்துவராக்க சர்ச் பல கோடிகள் செலவு செய்த மூளை இவர் தான் எனப் பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

தெய்வநாயகம் நூலில் தேவநேயன்  நூல் பெரும்பாலும் மேற்கோளில் உள்ளது, நடை இவரை ஒத்தே உள்ளது. தெய்வநாயகத்தினோடு நாம் பேசியதில் அவர் தமிழ் ஆய்வறிவும் நம்பிக்கை தரவில்லை.

நாம் தமிழக அரசின் அகரமுதலி அலுவலகம் (அகராதி இல்லை ஆதி- வடமொழி சொல்)எழும்பூரில் இருந்தபோது, பல தமிழ் அறிஞர்களோடு பழகியதில் தெய்வநாயகம் பெயரிலோ, பாவாணர் பெயரில் வந்தவை ஒருவர் அய்வு அல்ல, சர்ச் செய்யும் ஒரு பெறும் திட்டத்தின் வேலை, பாரத மக்களை பிரித்து கிறிஸ்துவம் பரப்ப போட்ட இன்னொரு வேடம் என்றனர்.


 

No comments:

Post a Comment

ஜேப்பியார் எஜுகேஷனல் டிரஸ்ட் செம்மஞ்சேரி 91.04 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பு -மீட்குமா

Jeppiaar Educational Trust v. The Secretary To Government (மெட்ராஸ் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு - Writ Appeal No. 3094 of 2003, தீர்...