Sunday, August 13, 2023

காட்டுப்பள்ளி துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும் காட்டுப்பள்ளி_துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும். பழவேற்காடு ஏரி பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கிளப்பி விடப் பட்டு உள்ளது. அனைவரும் மேப் பார்த்தால் போதும்

சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30 2013ல் செயல்பாட்டைத் துவக்கியது. அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியது. M/s MARINE INFRASTRUCTURE DEVELOPER PRIVATE LIMITED எனும் பெயரில் இத்துறைமுகத்தை அதானியின் Adani Ports and Special Economic Zone Limited நிறுவனம் நடத்தி வருகிறது.

330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி அதானி குழுமம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலம் . இவற்றை கையகப்படுத்தப்போகும் நிலையில் ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் ஓர நிலத்தை ஆழப் படுத்துவதாகத் திட்டம் எனப்படுகிறது 
 காட்டுப்பள்ளி துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும் காட்டுப்பள்ளி_துறைமுகம் (அதானி) விரிவாக்கம்- பூவுலகின் நண்பர்கள் மோசடி பிரச்சாரங்களும். பழவேற்காடு ஏரி பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கிளப்பி விடப் பட்டு உள்ளது. அனைவரும் மேப் பார்த்தால் போதும்பழவேற்காடு உவர் நீர் ஏரி பாதிக்கும் என்பதை நாம் கண்டால்.
அந்த ஏரி 250 சதுர கிலோமீட்டர் பரப்பும், அதிக அலை நீர் இருந்தால் 400 சகீமீ பரப்பு கொண்டது. அதன் பெரும்பகுதி ஆந்திராவில் உள்ளது.
காட்டுபள்ளி துறைமுகத்தின் மொத்த பரப்பு 1967 ஏக்கர் கடலோர நிலத்தை ஆழப்படுத்தி எடுப்பதை நாம் ச.கீமியில் பார்த்தால்




இத்திட்டத்திற்காக, நில மீட்பு (Sea Reclamation) என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, காளாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6கிமீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். 
1 சகீமீ = 247 ஏக்கர் என்பது 8சகீமி மட்டுமே; இதை பழவேற்காடு ஏரிக்கு வரும் நீருக்கும் தொடர்பு இல்லை.  காட்டுபள்ளி துறைமுகத்தின் மொத்த பரப்பு 1967 ஏக்கர் கடலோர நிலத்தை ஆழப்படுத்தி எடுப்பதை நாம் ச.கீமியில் பார்த்தால்
1 சகீமீ = 247 ஏக்கர்,2000 ஏக்கர் ஆளப்படுத்துவது என்பது 8சகீமி மட்டுமே; இதை பழவேற்காடு ஏரிக்கு வரும் நீருக்கும் தொடர்பு இல்லை. 

கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது என்பது திரும்ப சரிசெய்ய முடியாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும். அதானி குழுமன் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு(Environmental Impact Assesment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்(Environemntal Management Plan) தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை(Terms of Reference) 15.10.2019 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வழங்கியது. இந்த ஆய்வு எல்லையின் கால அவகாசம் 4 ஆண்டுகளாகும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்போதைய அ.தி.மு.க. அரசால் 22.01.2021 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல், மீனவர் அமைப்புகள் இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/poovulagin-nanbargal-g-sundarrajan-has-questioned-cm-mk-stalin-over-adani-kattupalli-port-526951.html?story=1











No comments:

Post a Comment