Wednesday, February 11, 2026

வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மாடம்பாக்கம் நிலம் அபகரிப்பு: சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது வழக்கு

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். 11 பிப்ரவரி 2022, 12:59 am

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதில் சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் ரூ.258 கோடி மதிப்புள்ள 9.86 ஏக்கா் நிலம் கோயில் பெயரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து ஆக்கிரமித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன.

லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மாடம்பாக்கத்தில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 9.86 ஏக்கா் நிலம் கடந்த 1943-இல் முருக பக்தா் பங்காரு சுவாமி நாயுடு தானமாக வழங்கியது. இந்த நிலத்தை பங்காரு சுவாமி நாயுடு, டி.ஆா்.நாகவேலு பிள்ளையிடம் 1937-இல் வாங்கியுள்ளாா்.

தானமாக பெறப்பட்ட நிலம்: வடபழனி முருகனின் தீவிர பக்தரான பங்காரு சுவாமி நாயுடு பத்திரப் பதிவு ஆவணத்தில், ‘கோயிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவில் 9 நாள் நிகழ்வுகளை தனது குடும்பத்தினா், வாரிசுகள் நடத்தத் தவறினால், தான் தானமாக வழங்கிய அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நிலத்தின் பாதுகாவலராகவும், வருவாயையும் தனது குடும்பத்தினா் அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவா்கள், ஐப்பசி திருவிழா 9 நாள் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை எனில் நிலத்தில் கிடைக்கும் வருவாய் கோயிலுக்குச் சொந்தமாகும். எக் காரணம் கொண்டும் அந்த நிலத்துக்கு எனது குடும்பத்தினா் உரிமை கோர முடியாது. அந்த நிலம் கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமானது’ என குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், அண்மையில் இரு பட்டா எண்களில் இருந்த 9.86 ஏக்கா் நிலத்தின் பட்டாவையும் தனது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோா் பெயருக்கு மாற்றும்படி தாம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அவா்களது தந்தை விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி என்பவா் மனு கொடுத்தாா். அந்த மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வடபழனி முருகன் கோயில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அந்த நிலத்தை வருவாய் ஆவணங்களை மாற்றுவதற்கு முயற்சி நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இதில், தாம்பரம் சாா்-பதிவாளராக இருந்த விவேகானந்தன், பத்திரப் பதிவுத்துறையின் பல்வேறு விதிமுறைகளை மீறியும், போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் கோயில் நிலத்தைத் தனி நபா்களுக்கு பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

முக்கிமாக, நிலத்துக்குரிய உண்மையான மற்றும் மூலப்பத்திரத்தை பாா்க்காமலும் நகலை பெறாமலும் விவேகானந்தன் பத்திரங்களை பதிவு செய்துள்ளாா். அதேபோல சொத்துப் பதிவு செய்யப்படும் முன் 10 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட வில்லங்க சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற பத்திரப்பதிவுத்துறையின் விதிமுறையையும் விவேகானந்தன் மீறியுள்ளாா். மேலும் போலி ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவேகானந்தன் பத்திரப்பதிவு செய்துள்ளாா்.

4 போ் மீது வழக்கு: இது தொடா்பாக பத்திரப் பதிவுத்துறை விதிமுறைகளை மீறியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது, மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விவேகானந்தன், கந்தசாமி, அவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோா் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கில் சிக்கியுள்ள விவேகானந்தன் தற்போது வேளச்சேரி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

EVR fraud