தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக, சிங்கப்பூர்ருடனும், ஐரோப்பிய தேசங்களுடனும் போட்டி போடும் நிலையில் உள்ளது!
தமிழ்நாடு வடமாநிலங்களைவிடவும் இந்த தேசத்தின் GDPக்கு கொட்டிக்கொடுக்கிறது !
இத்தகைய வளர்ச்சியை சாதித்தது திராவிட மாடல் என ஆளும் கட்சி, இதை இங்குள்ள அறிவுஜீவிகள் முதல் 200 ரூ உபி வரை தினமும் உருட்டுகிறார்கள் !
தமிழர்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்தால் ஒரு சிங்கப்பூரோ / ஜெர்மனியாகவோ மாறி இருப்போம், இந்த பானிபூரி பீடவாய்யன்களை தூக்கி சுமக்கவேண்டியுள்ளது என புலம்பல் வேறு!
உண்மை என்ன ?! இந்தியாவின் மொத்த GDPல் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கை கீழே கொடுத்துள்ளார்கள், இது இந்திய அரசாங்கத்தின் உண்மையான நெம்பர்கள், அதை நீங்களே சரி பார்த்துக்கொள்ளலாம்!
• 1960-61ல் தமிழ்நாடு -8.7% / 2023-24- 8.9%.
• ஆந்திரா(AP+TS) - 60-61- 7.7% / 2023-24- 9.7%
• கர்நாடக- 5.4% ல் இருந்து 8.2%
• கேரளம்- 3.4 %ல் இருந்து 3.8%
இது தென்னிந்திய அதாவது திராவிட நாட்டின் பங்கு
இதில் பெரும் பங்கை அளிக்கும் மகாராஷ்ட்ரா 12.5% ல் இருந்து 13.3% பெரிய வளர்ச்சி இல்லை, ஆனால் தமிழகத்தைவிட 156% அதிகமாக இந்தியவின் GDPயில் பங்கு வகிந்தாலும் நம் திராவிட மாடலைப்போல் வீணாக பீத்திக்கொள்வதில்லை!
• உத்திரபிரதேசம் - 14.4%ல் இருந்து 9.5%
• பீகார் - 7.8%ல் இருந்து 4.3%
• மேற்கு வங்கம்- 10.5%ல் இருந்து 5.6%மாக சரிவு!!
• குஜராத் 5.8%ல் இருந்து 8.1% வளர்ச்சி
• டில்லியும் ஹரியானாவும் இருமடங்கு வளர்ச்சி
• மற்ற மாநிலங்கள் வளர்ச்சி இல்லாமல் அதே நிலை!
• தமிழக வளர்ச்சிக்கு காம்ப்ளேன் கொடுத்து திராவிட மாடல் தந்த வளர்ச்சி வெறும் 0.2%தான் !!
உண்மையில் தென்னிந்திய அளவில் கர்நாடகாவும் (2.8%) ஆந்திராவும் (2%) வளர்ச்சி அடைந்து இந்தியாவின் GDPயை உயர்த்தியுள்ளன, அங்கு எந்த திராவிட மாடல் ஆட்சி செய்தது?!
உண்மையில் உத்திரபிரதேசம், பீகார் மற்றும் வங்கத்தை பங்கப்படுத்தியது, நம் திராவிட மாடலின் இன்றைய பங்காளிகளான காங்கிரஸ், யாதவ்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள்தான் !
கேரளா எப்படியோ அரேபிய எண்ணை வளத்தால் கூலி வாங்கி தப்பியது!
இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்று நேற்றல்ல, பண்டைய காலந்தொட்டு கடல் வணிகம் தொடங்கிய காலம் முதலே பிற இந்திய நிலங்களைவிட முன்னெறியே இருந்தது! அது தொடர்கிறது! யாரும் வங்கத்தை கெடுத்ததுபோல் இங்கு செய்யவில்லை!
GDP இல்லை தனிமனித வளர்ச்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது என சொன்னால் , per capita incomeல் நாம் முன்னேறியுள்ளோமா?! நீங்களே அட்டவணையை பார்த்துக்கொள்ளுங்கள்!
ஒரு நாட்டின்/ மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்ல நிலம், கனிமவளம், கடல்வழி, மக்கள் கல்வி என பலதும் வேண்டும், அதை தாண்டி இன்றைய சூழலில், சட்டத்தின் ஆட்சி(rule of law) என்பது மிக மிக அவசியமானது !
பல வளங்கள் இருந்தாலும் (எண்ணை வளம்-வெனிஜூலா), (அருகிலேயே சந்தை-மெக்ஸிகோ), அறிவு( ஈரான்)) இந்த நாடுகள் தத்தளிக்க காரணம் அங்கு சட்டத்தின் ஆட்சி இல்லை! சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை!
இதுவே நம் நாட்டிலும் உள்ள வங்கத்திற்கும் பீகாருக்கும், உத்திர பிரதேசத்திற்கும் பொருந்தும்! அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்க ஆரம்பித்தால் மெல்ல வளர்ச்சி வந்து சேரும்!
மொளரியர் காலத்து பாடலிபுத்திராவும் இன்றைய பாட்னாவிற்கும் ஒரே வித்தியாசம் அதுவே! சட்டத்தின் ஆட்சி!
எங்கோ அடிஆளத்தில் இருந்து குதித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தி, அதன்மூலம் வளர்ச்சியை கொடுத்த ஆந்திராவும், கர்நாடகாவும், குஜராத்தும், டில்லியும், ஹரியானாவும் தான் இங்கு “சட்டத்தின் ஆட்சி” மாடல் என பீத்திக்கொள்ளவேண்டும்!
ஆக திராவிட மாடல் கொடுத்தது என்ன?!
சட்டத்தை மீற மட்டுமே லஞ்சம், சட்டப்படி நடப்பது நடக்கட்டும் என தங்கள் பங்கை மட்டும் எடுத்துக்கொண்டு ஆட்டத்தை கெடுக்காமல் இருந்ததே திராவிடம் செய்த பெரும் புரட்சி!


No comments:
Post a Comment