கார்த்திக் சிதம்பரம், you are the real Annamalai of congress party from TN, இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில், சின்னங்களின் வரிசை நிரந்தரமானது அல்ல வேட்பாளர்களின் பெயர் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது அதோடு தொகுதிக்கு தொகுதி அந்த வரிசை மாறும் என்னும் அடிப்படையை சொன்னீர்கள்.
இந்த அடிப்படை கூட தமிழ்நாட்டில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் என்னும் கூமுட்டைகள் 90 சதவீதம் பேருக்கு தெரியாது அல்லது இன்றும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது ஒருவனுக்கு 100% நம்பிக்கை வர வேண்டும் என்றால் அவனுக்கு அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் அதோடு வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது அது போல வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது இந்த மூன்றும் தெரிந்த ஒருவரால் தான் இந்த நம்பிக்கையை பெற முடியும் என்பதை ஆணி அடித்தது போல சொன்னதற்கு நன்றி.
வாக்குப்பதிவு எந்திரங்கள் 100% பாதுகாப்பானது, அதை நம்பகத் தன்மையை ஒருவன் குறை சொல்லுகிறான் என்றால் அவன் அரசியல் ரீதியாக குறை சொல்லுகிறான் என்று அர்த்தம் அல்லது மேலே சொன்ன மூன்று காரணிகளில் ஏதாவது ஒன்று தெரியாதவனாக இருக்கிறான் என்று பொருள்.
No comments:
Post a Comment