ஒவ்வொரு பொருளும் நாட்கள் செல்லச்செல்ல நல்ல நிலையில் இருந்து அழுகும் நிலைக்குச் செல்லும். உண்ணத் தகுந்த நல்ல ஆப்பிள் அதே நிலையில் விடப்பட்டால் சில நாட்களில் அழுகும். ஆனால் அழுகிய ஆப்பிள் நல்ல ஆப்பிளாக மாறாது. More → lesser → none என்பதுதான் இயற்கை விதி. பணமும் அதே போலத்தான். 1000 ரூபாய் பணத்தைப் பெருக்க எந்த வழிகளும் இல்லாமல், இருக்கும் பணத்தை அப்படியே வைத்திருந்தால் சில நாட்களில் செலவாகிப் போகும்.
கையில் இருக்கும் பொருளைக் காப்பாற்ற குறைந்தபட்சம் அது கெட்டுப்போகாமல் இருக்கத் தேவையான செயல்கள் செய்ய வேண்டும். ஒரு action தேவை. நான் அது கெட்டுப்போக எதுவும் செய்யவில்லையே, சும்மாதானே இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் அதைக் காத்துக்கொள்ள உங்கள் பங்கில் ஒரு வேலை தேவை.
உங்கள் பொருளை அழிக்க நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கும்போதே அது அழிந்துபோகும் என்றால், அதை அழிக்க நீங்கள் மும்முரமாக இருந்தால் என்னாகும்?
இதற்கு பாகிஸ்தான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தங்களுக்கென ஒரு நாட்டைப் பெற்றுக்கொண்டு போனார்கள். அதில் மகிழ்வாக வாழ்ந்திருக்கலாம். அந்தப் பொருளை பெருக்கியிருக்கலாம். துபாய் போல வளர்ந்த நிலமாக மாற்றியிருக்கலாம்.ஆனால் உலகிற்கே பயங்கரவாதத்தை supply செய்யும் தொழிற்சாலையாக அது மாறிப்போனது. கிடைத்த நாட்டை வளர்க்க முயற்சிக்கவில்லை என்பதோடு, அதை அழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது பாகிஸ்தான்.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு, வறுமை 29%-ஆக உயர்ந்து, மாதத்திற்கு குறைந்தபட்சம் 8,484 ரூபாய் கூட இல்லாமல் 7 கோடி மக்கள் கடும் வறுமையில் வாழ்வதாக Times of India சொல்கிறது. 21 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.1%-ஆக எகிறியிருக்கிறது.
இதற்கெல்லாம் யார் காரணம்? என்றைக்காவது இந்தியர்கள் உடலில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் பாகிஸ்தானில் வெடிக்கச் செய்திருக்கிறார்களா? சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாவாசிகளை மனைவி கண்முன் சுட்டிருக்கிறோமா? கிடைத்த பொருளை பாதுகாக்கவே தனியான வேலை தேவைப்படும்போது அதை அழிக்க ஒரு நாடே முயன்று, இப்போது அதில் வெற்றியும் பெற்று, இன்று பிச்சைக்கார நாடாய் ரோட்டில் நிற்கிறது. பாலஸ்தீனில் நடந்தது இதேதான்.
பயங்கரவாதம் தவிர்ப்போம், தோழர்.
கையில் இருக்கும் பொருளைக் காப்பாற்ற குறைந்தபட்சம் அது கெட்டுப்போகாமல் இருக்கத் தேவையான செயல்கள் செய்ய வேண்டும். ஒரு action தேவை. நான் அது கெட்டுப்போக எதுவும் செய்யவில்லையே, சும்மாதானே இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் அதைக் காத்துக்கொள்ள உங்கள் பங்கில் ஒரு வேலை தேவை.
உங்கள் பொருளை அழிக்க நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கும்போதே அது அழிந்துபோகும் என்றால், அதை அழிக்க நீங்கள் மும்முரமாக இருந்தால் என்னாகும்?
இதற்கு பாகிஸ்தான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தங்களுக்கென ஒரு நாட்டைப் பெற்றுக்கொண்டு போனார்கள். அதில் மகிழ்வாக வாழ்ந்திருக்கலாம். அந்தப் பொருளை பெருக்கியிருக்கலாம். துபாய் போல வளர்ந்த நிலமாக மாற்றியிருக்கலாம்.ஆனால் உலகிற்கே பயங்கரவாதத்தை supply செய்யும் தொழிற்சாலையாக அது மாறிப்போனது. கிடைத்த நாட்டை வளர்க்க முயற்சிக்கவில்லை என்பதோடு, அதை அழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது பாகிஸ்தான்.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு, வறுமை 29%-ஆக உயர்ந்து, மாதத்திற்கு குறைந்தபட்சம் 8,484 ரூபாய் கூட இல்லாமல் 7 கோடி மக்கள் கடும் வறுமையில் வாழ்வதாக Times of India சொல்கிறது. 21 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.1%-ஆக எகிறியிருக்கிறது.
இதற்கெல்லாம் யார் காரணம்? என்றைக்காவது இந்தியர்கள் உடலில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் பாகிஸ்தானில் வெடிக்கச் செய்திருக்கிறார்களா? சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாவாசிகளை மனைவி கண்முன் சுட்டிருக்கிறோமா? கிடைத்த பொருளை பாதுகாக்கவே தனியான வேலை தேவைப்படும்போது அதை அழிக்க ஒரு நாடே முயன்று, இப்போது அதில் வெற்றியும் பெற்று, இன்று பிச்சைக்கார நாடாய் ரோட்டில் நிற்கிறது. பாலஸ்தீனில் நடந்தது இதேதான்.
பயங்கரவாதம் தவிர்ப்போம், தோழர்.

No comments:
Post a Comment