Tuesday, February 24, 2026

ஸ்டாலின் திமுக ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை

ஸ்டாலின் திமுக ஆட்சியில் குறைவான நாட்களே கூடிய சட்டசபை 

சென்னை: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், சட்டசபை கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், சட்டசபை கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம், 100 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. 
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தமாக, 161 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. 30 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், இதுவே குறைவு.கடைசியாக, 1989 - 1991 வரை நடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் தான், மிக குறைவாக, 104 நாட்கள் சட்டசபை நடந்துள்ளது. 2011 - 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 191 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 162 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. பழனிசாமி முதல்வராக இருந்த போது, 2020 மார்ச் 8 முதல் ஏப்ரல் 9 வரை சட்டசபை நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே கூட்டம் முடிக்கப்பட்டது. கொரோனா பரவல் இல்லாவிட்டால், கூடுதல் நாட்கள் சபை நடந்திருக்கும்.தி.மு.க., ஆட்சியில் சபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கேள்வி நேரம், முதல்வர், அமைச்சர்கள் பதிலுரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வினர் பங்கேற்ற விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. சட்டசபை இறுதி நாளான, கடந்த 20ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்கள், அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியது மட்டும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் கைது தஹாவூர் ஹுசைன் ராணாவின் குடியுரிமை கனடா ரத்து?

  தஹாவூர் ஹுசைன் ராணா தற்போது இந்தியாவில் காவலில் உள்ளான், ...... 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப் பட்டு, அமெரிக்க சிறையில்...