Friday, February 27, 2026

கேதார்நாத் கோயில் -சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்

அதிகளவில் குப்பை சேரும் கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்28 Feb 2026 Tamil Hindu 


புதுடெல்லி: ஆண்​டு​தோறும் அதிக அளவில் கேதார்​நாத் கோயில் பகு​தி​யில் குப்பை சேர்​வ​தாக ஒரு ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்​றுச்​சூழல் மோசமடைவ​தாக ஆர்​வலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்​ணி​யத்​தலங்​களாக கேதார்​நாத், பத்​ரி​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகியவை உள்​ளன. இவை சார்​தாம் என்று அழைக்​கப்​படு​கின்​றன. இந்​துக்​கள் இந்த சார்​தாம் கோயில்​களுக்கு புனிதச் சுற்​றுலா சென்று வரு​வதை புண்​ணி​ய​மாகக் கருதுகின்​றனர்.

குறிப்​பாக கேதார்​நாத் கோயிலுக்கு அதிக அளவில் பக்​தர்​கள் வரு​கின்​றனர். கடந்த சில ஆண்​டு​களாக இந்​தக் கோயிலுக்கு வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. இதனால் இந்​தக் கோயிலைச் சுற்​றி​யும், மலைப்​பகு​தி​களி​லும் அதிக அளவில் குப்பை சேர்​வ​தாக ஒரு ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

2025-ம் ஆண்​டில் மட்​டும் இங்கு 21.4 மெட்​ரிக் டன் குப்பை சேர்ந்​துள்​ள​தாக அந்த ஆய்வு தெரிவிக்​கிறது. இது கடந்த ஆண்​டைக் காட்​டிலும் 22 சதவீதம் அதி​க​மாகும். அதிக அளவில் இங்கு குப்பை சேர்​வ​தால் இப்​பகு​தி​யின் சுற்​றுச்​சூழல் மோச​மாகும் நிலை ஏற்​படு​வ​தாக அந்த ஆய்வு தெரிவிக்​கிறது.

இங்கு வரும் பக்​தர்​கள் தாங்​கள் கொண்டு வரும் பொருட்​களை பயன்​படுத்​தி​விட்டு அப்​படியே வீசி விடு​வ​தால் அதிக அளவில் குப்பை சேர்​கிறது. இது சுற்​றுச்​சூழலுக்கு ஊறு விளை​விப்​ப​த​தாக அமைந்​துள்​ளது.

யுனெஸ்​கோ​வில் அங்​கீகரிக்​கப்​பட்ட இந்த புண்​ணி​யத் தலத்தை குப்பை போன்ற மாசுகளில் இருந்து காக்​கவேண்​டும் என்ற கோரிக்கை சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​களிட​மிருந்து எழுந்​துள்​ளது.

இந்த ஆய்வை கேதார்​நாத் நகர் பஞ்​சா​யத்து நடத்​தி​யுள்​ளது. இதுதொடர்​பாக அமித் குப்தா என்று சுற்​றுச்​சூழலிய​லா​ளர் கூறும்​போது, “குப்பை போன்ற திடக்​கழிவு மேலாண்​மைக்​கான வசதி​கள் இருந்​த​போ​தி​லும், சரிவர அவை அகற்​றப்​படு​வ​தில்​லை. இது திடக் கழிவு மேலாண்மை தோல்​வியைத் தெளி​வாகக் காட்​டு​கிறது.

2025-ம் ஆண்டு மே மாதம் முதல் அக்​டோபர் மாதம் இடையே சேர்ந்த 21.4 மெட்​ரிக் டன் குப்​பை​யில் வெறும் 8.7 மெட்​ரிக் டன் குப்பை மட்​டுமே பதப்​படுத்​தப்​பட்​டது. இதனால் மீத​முள்ள 12.7 மெட்​ரிக் டன் குப்​பை, கேதார்​நாத் கோயிலுக்கு அருகே உள்ள அடிப்​படை முகாமின் நிலப்​பரப்​பு​களிலோ அல்​லது திறந்​தவெளி இடங்​களி​லோ குவிந்​துள்​ளது. கடந்த 5 ஆண்​டு​களில் இது மிக அதிக அளவி​லான திடக்​கழி​வாக உள்​ளது. இதனால் சுற்​றுச்​சூழலுக்கு கேடு உண்​டாகும்” என்​றார்.

இந்​நிலை​யில் ரூ.3.13 கோடி மதிப்​பிலான திடக்​கழிவை பதப்​படுத்தி வெளி​யேற்​றும் கருவி​களை வாங்​கு​வதற்​காக திட்​ட​மும் இன்​னும் நிலு​வை​யில் உள்​ள​தாக கேதார்​நாத் கோயில் அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர்.

கடல் மட்​டத்​திலிருந்து உத்​த​ராகண்ட் மாநிலத்​தின் கர்​வால் இமாலய மலைப்​பகு​தி​யில் கேதார்​நாத் புனிதத் தலம் 3,583 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்​ளது. இங்கு கடந்த சில ஆண்​டு​களாக சாலைகள் மேம்​பாடு, ஹெலி​காப்​டர் சேவை​கள் போன்​றவை ஏற்​பாடு செய்​யப்​பட்​டாலும், திடக்​கழிவு நிர்​வாகத்​தை​யும் கவனிக்க வேண்​டும் என்று சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.


No comments:

Post a Comment

கேதார்நாத் கோயில் -சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்

அதிகளவில் குப்பை சேரும் கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார் 28 Feb 2026 Tamil Hindu  புதுடெல்லி:  ஆண்​டு​தோறும் அதிக அளவில் க...