Friday, February 27, 2026

நடிகையுடன் உறவு.. கண்டுபிடித்த பின்பும் இரக்கமே இல்லாமல் தொடர்ந்தார் விஜய் .. சங்கீதா குற்றச்சாட்டு

நடிகையுடன் உறவு.. கண்டுபிடித்த பின்பும் இரக்கமே இல்லாமல் தொடர்ந்தார் விஜய் .. சங்கீதா குற்றச்சாட்டு By  February 27, 2026 

சென்னை: தவெக தலைவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்ததாக அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடித்ததாக கூறியுள்ள சங்கீதா, அதன்பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்ததாக தெரிவித்திருக்கிறார். 

நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்திருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது சிக்மா என்ற படத்தை சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வருகிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்கு பின் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன் வைத்திருக்கிறார். 

அதன்படி, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி மார்ச் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தில் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நேரில் ஆஜராகவில்லை என்றாலும், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினர் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அதன்பின் விஜய்யின் எந்தப் படத்தின் விழாவிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. விஜய் கட்சி தொடங்கிய போதும் கூட அவரது பெற்றோர் பங்கேற்றனர். ஆனால் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்று யாரும் பங்கேற்கவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-in-her-divorce-petition-sangeeta-the-wife-of-tvk-leader-vijay-has-alleged-that-he-had-a-777261.html

No comments:

Post a Comment

சோழர் கால பள்ளிக்கூடங்கள் - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சோழர் கால பள்ளிக்கூடங்கள் 28 ஜனவரி 2024 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டியன் பாடிய "கற்றல் நன்றே' எனும் புறநானூற்றுப் பாடல...