கோயில் பணியாளர்கள் -பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் சேகர்பாபுவிடம் வலியுறுத்தல் 26 Feb 2026, TamilHindu
சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, கோயில் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் வலியுறுத்தினர்.
குறிப்பாக, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். கோயிலில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.
மாத ஓய்வூதியத் தொகையான ரூ.5 ஆயிரம் அடிப்படையாகக் கொண்டு, ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும்.
கோயில் வருமானத்தில் 40 சதவீத சம்பள தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பொது நிதியாக ஏற்படுத்தி, அதன் மூலமாக கோயில் பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்க கவுரவத் தலைவர் முத்துசாமி, துணைத் தலைவர் சு.தனசேகர் தலைமையில் நிர்வாகி கள் நேற்று மீண்டும் அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

No comments:
Post a Comment