Tuesday, March 10, 2026

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான கொடூர அரேபிய மத சட்ட முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

 முஸ்லிம் பெண்களுக்கு எதிரான  கொடூர ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்டம் போன்ற முரண்​பாடு​களுக்கு பொது சிவில் சட்​டம் கொண்டு வருதே தீர்​வாகும் என்று உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரிவித்துள்ளது.
முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்​டத்தை எதிர்த்து பவுலமி பவனி சுக்லா என்​பவர் ரிட் மனு தாக்​கல் செய்துள்ளார். இந்த மனு​வில், 1937-ம் ஆண்டு ஷரி​யத் சட்​டம் வாரிசு சொத்​துகளை வழங்​கு​வ​தில் முஸ்​லிம் பெண்​களுக்கு எதிராக இருப்​ப​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் என்று கோரப்பட்​டிருந்​தது. இந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த். நீதிப​தி​கள் ஜோய்​மால்யா பக்​சி, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் ஆஜராகி, ஆண்​களுக்கு இணை​யாக முஸ்​லிம் பெண்​களுக்கு சமமான சொத்துரிமையை கொண்​டுள்​ளனர் என்று அறி​வித்து ஷரி​யத் முஸ்​லிம் தனி​நபர் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என வாதிட்டார்.

இதற்கு நீதிப​தி​கள், சீர்​திருத்​தம் என்ற பெயரில், முஸ்​லிம் பெண்களுக்கு தற்​போதுள்ள உரிமை​களும் கிடைக்​காமல் போகச் செய்​யும் நிலை உரு​வாகலாம். ஷரி​யத் சட்​டத்தை ரத்து செய்​தால், தேவையற்ற வெற்​றிடம் உரு​வா​கா​தா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்​பி​னார்.

நீதிபதி ஜோய்​மால்யா பக்சி கூறும்​போது, “முஸ்​லிம் பெண்களுக்கு எதி​ரான பாகு​பாடு குறித்து இந்த நல்ல விவகாரத்தை, வழி​காட்​டும் கோட்​பாடு​களின்​படி அரசமைப்பு சாசனத்​தில் வலியுறுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்​ட​மியற்​றும் அதி​காரத்தை படைத்த நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களிடம் விட்​டு​விடு​வது பொருத்தமாக இருக்​கா​தா" என்று கேட்​டார்.

அப்போது, தலைமை நீதிப​தி, இதற்கு தீர்வு பொது சிவில் சட்​டம் கொண்டு வரு​வ​தாகும் என்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோய்​மால்யா பக்​சி, "ஒரு மனைவிக்கு ஒரு கணவர் என்​பது அனைத்து சமூகங்​களி​லும் நடை​முறை​யில் இல்​லை. அதற்​காக தனி​ நபர் சட்​டத்​தின் கீழ் இரு தாரம், பல தார திரு​மணங்​கள் சம உரிமைக்கு எதி​ரானது என அறிவிக்க முடி​யு​மா? இந்த விவ​காரத்தை வழி​காட்​டும் கோட்பாடுகளின்​படி சட்டமியற்றும் நாடாளு​மன்​றம், சட்​டப் பேரவை​களுக்கு விடு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.

ஏற்​கெனவே பொது சிவில் சட்​டத்தை இயற்ற உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது" என்று குறிப்​பிட்​டார். இதைத் தொடர்ந்​து, உரிய திருத்​தங்​களை மேற்​கொள்ள அனு​மதி அளித்து விசாரணையை உச்ச நீதி​மன்​றம்​ ஏப்​ரல்​ 17-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்​துள்​ளது.

No comments:

Post a Comment