Tuesday, March 10, 2026

சென்னைக்கு பைக்கில் நண்பனுடன் வந்த 14வயது மாணவியை சேஸ் செய்து கூட்டு பாலியல் கொடுமை- திராவிட கொடுமை தொடர்கிறது

சென்னைக்கு பைக்கில் நண்பனுடன் வந்த 14வயது பெண் குழந்தையை சேஸ் செய்து கூட்டு பாலியல் கொடுமை- திராவிட கொடுமை தொடர்கிறது
மதுராந்தகம் அருகே மதுபோதையில் இருவர் 14 வயது சிறுமியை #கடத்தி கூட்டு #பாலியல் #வன்கொடுமை....



14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; மதுபோதையில் கடத்தி அத்துமீறிய மர்ம நபர்கள்!

https://www.nakkheeran.in/24-by-7-news/a-14-year-old-girl-was-abducted-and-mysterious-individuals-while-intoxicated-11192749/amp

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கெளதம் என்ற 17 வயது சிறுவன் நள்ளிரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் 14 வயது மற்றும் 16 வயது சிறுமிகளை அழைத்துக் கொண்டு மதுராந்தகம் அத்திவாக்கம் அருகே சென்றுள்ளனர்.

அப்போது தேவத்தூர் அருகே மதுபோதையில் இருந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த சிறுவர்கள் செல்வதை கண்டு அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தொடர்ந்து பின் சென்ற அந்த மர்ம நபர்கள், முந்திச் சென்று சிறுவர்கள் சென்ற வாகனத்தை எட்டி மிதித்துள்ளனர். இதில் சிறுவர்கள் மூன்று பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அந்த மர்ம நபர்களை கண்ட சிறுவனும், 16 வயது சிறுமியும் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த நபர்கள் பலத்த காயமடைந்த 14 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த கொடூரச் சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தும் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மதுராந்தகம் அருகே மதுபோதையில் இருவர் 14 வயது சிறுமியை #கடத்தி கூட்டு #பாலியல் #வன்கொடுமை....

 

No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...