தமிழகமும் உத்தரபிரதேசமும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதமும்:-
மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு சுழற்சி( cyclic growth), தமிழகத்தின் மக்கள்தொகை கடந்த நூற்றாண்டில் வடக்கைவிட முன்னறே வளர்ந்து, அதன் உச்சத்தை 1970-80களில் அடைந்து, இன்று கீழ்நோக்கிய நிலைக்கு நகர்கிறது, உத்திர பிரதேசம்( மொத்த வடக்கும்) அதன் உச்சத்தை இப்போதுதான் தொட்டு, அவர்களின் வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்திருக்கிறது!
மாநிலங்களுக்கு அன்று தொகுதிகளை நிர்ணயம் செய்தபோது, தமிழகம் உச்சத்தில் இருந்ததால் நமக்கு 39 கிடைத்தது என்பதை மறந்து மறைத்து, இன்று ஏதோ குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் போட்டு மத்திய அரசு ஏமாற்றி விட்டது என கதைவிடுகிறார்கள்!
மக்கள் ஓட்டு போட்டு தங்களை ஆள ஆட்சியை கொடுக்கும் ஜனநாயகத்தின் அடிபடை விழுமியமான ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதை மாற்றி, தமிழகம் மட்டும் ஏதோ அதிசிய பிறவிகளை கொண்ட மாநிலம் போல் நடப்பதற்கு மத்தியில் காங்கிரஸ் போன்ற ஆட்சி ஆளுமையுள்ள கட்சி ஆளாமல், பயந்தாங்கொள்ளி பாஜக ஆள்வதால்தான் இன்று இப்படி அடிபடைகளை மறந்து, மிரட்டி தமிழ்நாட்டு வாக்காளனின் ஒரு ஒட்டுக்கு இரண்டு பீகாரிகளுக்கு சமம் என்ற நிலையை, ஏதோ தார்மீகமானது போல் பேசுவது அதுவும் படித்தவர்கள், பொதுவுடமை வாதிகள் பேசுவதுதான் நகைமுரன்!
பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலம் எங்கள் வரிப்பணம் தான் வடக்கனை வாழ வைக்கிறது என்ற எண்ணத்தின் அடுத்த கட்டமே இந்த ஓட்டு திருட்டு! ஆம் மக்கள்தொகை இருந்தும், உன் வாக்குக்கு அரை மதிப்பெண்தான் என்பது நாசிசத்தின் அடையாளம்!
மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது இந்துக்களுக்கு மட்டும்தான் இஸ்லாமிய மக்கள் கடைபிடிக்காதபோது, கேரளத்தில் நடந்ததைப்போல் வடகேரளம்(மலப்புரம்) முன்பைவிட அதிக தொகுதிகளை பெற்றது, அதன் இழப்பு இந்து பெரும்பாண்மை மாவட்டங்களை பாதித்தது! ஆனால் அங்கு மட்டும் பொங்கமாட்டார்கள் இன்று எதிர்ப்பவர்கள்!
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்பதும் உண்மையில் நல்ல ஜனநாயக முறையல்ல! அதுவும் சட்டம் இயற்றும் பாராளமன்ற தேர்தலில் என்பது அநியாயம்! கல்வியில் ஜாதிவாரி இடஒதுக்கீட்டு முறை உண்மையில் சமூக நீதி ஆனால் அதை அரசு வேலை பதவி உயர்வு ஏன் மூன்றாம் தலைமுறை அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என நீடிப்பதுபோல்தான், இந்த மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையில் நடக்கும்!
இந்த தொகுதிவரையரையை அப்படியே நீடித்து, 50 மாநிலங்கள், 3 கோடி மக்களுக்கு ஒரு மாநிலம், ஒரு மாநிலத்திற்கு 20 MP, 15 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கள் அவைக்கு அந்தந்த மாநில அமைச்சர்களே உறுப்பினர்கள், மாநிலத்திற்கு 100 MLA, 10 அமைச்சர் + ராஜ்ஜியசபை உறுப்பினர் என்று மாற்றிவிட்டால், இந்த வடக்கு தெற்கு பிரச்சனை முதல் மொழி அரசியல், ஆற்றுநீர், வரி பங்கீடு வரைக்கும் பல பிரச்சனைகள் தீரும்!
ஆனால் அதைச்செய்ய தைரியமான மெவ்ரிக் அரசியல்வாதி வேண்டும்!
————-
TFR 2 புள்ளிகளுக்கு கீழ் செல்லும் எந்த நாடும், மாநிலமும்,மொழிக்குழுவும், ஜாதியும் இந்த உலகில் காணாமல் போகும், அந்த இடத்தை வேறு ஒருவர் பிடுத்துக்கொள்வார்! இன்று அனைத்து வசதி வாய்ப்புகளும், செல்வசெழிப்பும், கட்டமைப்பும் கல்வியும் உள்ள ஐரோப்பா மூன்று நூற்றாண்டு உழைப்பை அப்படியே எடுத்து முட்டாத்துலுக்கனிடம் கொடுத்து விட்டு காரிருள் எதிர்காலத்தை நோக்கி பயத்துடன் பயணிக்கிறது! ஆம் கல்யாணம் வேண்டாம், குழந்தை வேண்டாம் என் வசதி என் வாழ்க்கை என்று வாழ்ந்த ஐரோப்பியர் இன்று கிழடுகளின் நாடாகி, வேலை செய்யும் ( productive age) ஆட்கள் இல்லாமல் இஸ்லாமிய நாடுகளில் இருந்து குடியேற்றி, மொத்தமும் காலி என்ற நிலையில் உள்ளனர்!
எனவே சந்திரபாபு நாயுடு சொல்வதுபோல் குறைந்தது 3 குழந்தைகளை பெற்று வளர்க்கும் சமூகம் வாழும்!


No comments:
Post a Comment