முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்சி படுத்துவதில், 1990-கள் முதலே இந்திய சினிமாவில் தொன்று தொட்டு செய்து வருவது சாதாரணமாகிவிட்டது!
இதற்கு முன்பாக 1980 களில் இசுரேலிய யூதர்கள் தொடங்கி வைத்த முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு Narrative முஸ்லிம் சமூகத்தை உலக அரங்கில் தீவிரவாதிகளாக சித்தரிக்க மூலகாரணமாக இருந்திருக்கிறது.
அதனுடைய நீட்சியாக உலக அரங்கில் அந்த Narration இல் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்..
பொதுப்புத்தியில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி Normalise செய்து, முஸ்லிம்கள் தாடி, தொப்பி வைத்திருந்தாலே அவர்கள் சந்தேகத்தோடு அணுகவேண்டிய போக்கும் இந்த Normalise பின்பான காலக்கட்டத்தில் அதிகரித்து வந்திருக்கிறது!
குறிப்பாக, நான் மேலே குறிப்பிட்ட 1990 க்கு பிறகான காலக்கட்டத்தில், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான் உளவாளிகளாக, தீவிரவாதத்தை போதிப்பவர்களாக சித்தரிக்கப்பட்ட காலம் எல்லாம் உச்சம் எனலாம்!
ஆனால், நிஜ வாழ்க்கையில் அவருக்கு நம்பிக்கை அரணாக உறுதுணையாக நின்றவர் இப்ராஹிம் ராவுத்தர்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறோம் என்கிற எண்ணம் அவருக்கு எழுந்ததாக தெரியவில்லை..
ஆனால், தேசபக்தி என்ற பெயரில், ஒரு சமூகத்தை எதிரியாக சித்தரித்தால் தான் சினிமா வணிக ரீதியாக ஓடும் என்கிற பொது புத்தியை விதைத்தில் விஜயகாந்த் விழுந்திருக்கிறார் என்கிற புள்ளியில் பார்க்கலாம்!
விஜயும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துப்பாக்கி, பீஸ்ட், இப்போது ஜனநாயகன் முஸ்லிம்கள் குண்டு வைப்பது போல் வெளியான காட்சி,
இவையெல்லாம் இவர்கள் வணிக ரீதியாக மட்டுமே அணுகி, பணம் பெருக்குவதற்கு மட்டும் தான்!
ஆனால் இதற்கு பின்னால் ஒவ்வொரு தருணங்களிலும் முஸ்லிம்கள் எப்படி Target செய்யப்படுகிறார்கள்..
பொது சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்கிற துளி கவலையும் இந்த நடிகர் பிழைப்பு நடத்தும் பெரும்பாலான கூட்டத்துக்கு இல்லை.
(ஒரு சில இயக்குனர், நடிகர்களை தவிர)
ஒரு மாஸ் மீடியாவில், எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், நாம் விதைக்கும் கருத்துக்களை(விஷமமாக இருந்தாலும் கூட) மக்களிடம் எவ்வளவு எளிதாக கடத்த முடியும் என்பதை அவர்கள் நன்கே அறிந்து வைத்திருக்கிறார்கள்!
சினிமா என்றாலே ஹராம் (இசுலாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்டது) என ஒதுங்கியிருக்கும் இந்த முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபித்து ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த மாதிரியான படங்கள் ஏற்படுத்துகின்றன!
குறிப்பாக பல நெருக்கடிகளை சந்தித்து வரும் இந்திய முஸ்லிம்கள், வட மாநிலங்களில் "ஜெயஶ்ரீ ராம்" சொல்ல சொல்லி நடக்கும் கும்பல் படுகொ* கள், தாக்கு*கள்!
என அனுதினமும், ஏதோ ஒரு மூலையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் இன்று கடந்து போகும் செய்தியாக மாறி இருக்கும் வேளையில் இதை பற்றி சினிமா கதை எடுக்கவோ, பேசவோ, விவாதமாக்கவோ ஒரு இயக்குநருக்கும், நடிகனுக்கும் திராணி இல்லை.
அதிலும் குறிப்பாக தன்னுடைய சினிமா பிரபலத்தால் அரசியலில் குதித்த விஜய் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார் என்றால், இவர்களெல்லாம் யாருக்கானவர்கள்?
இவரை தூக்கி பிடிக்கும் இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்!
நீங்கள் முஸ்லிமாக இருக்கலாம்.. ஒரு முஸ்லிம் நண்பர் கொண்ட இந்துவாக இருக்கலாம்..அல்லது முஸ்லிம் நண்பர் கொண்ட கிறிஸ்தவனாகவும் இருக்கலாம்!
நீங்களெல்லாம் உங்கள் தலைவரை நோக்கி,
"இந்தியாவில் நடந்த அஜ்மீர் தர்கா,மக்கா மசூதி, சம்ஜோதா குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய RSS இல் இருந்த அசிமானந்தா குண்டு வெடிப்பு நடத்தியதை ஒப்புகொண்டதை சினிமாவாக எடுப்பீர்களா?
2022 இல் மீடியா பேட்டியில், RSS இல் பயிற்சி பெற்ற யஷ்வந்த் ஷிண்டே என்கிற நபர் வெளியில் வந்து நேரடியாக மீடியாக்களில், வெடிகுண்டு தயாரிப்புகள் பயிற்சி பெற்றதையும், RSS பல தீவிரவாத பயிற்சிகளை வழங்குவதாக வெளிப்படையாக சொன்னார்.அதனை, கதையாக வடிவமைத்து படம் எடுப்பீர்களா?.."
என நீங்கள் கேட்பீர்களா?
WHAT Bro It's Very Wrong Bro.. என உங்கள் தளபதிக்கு பாடம் புகட்ட வேண்டியது நீங்கள் தானே?
- கிளுர் முகம்மது -Bismi
ஊடகவியலாளர்
#JanaNayagan #JananayaganLeaked #Vijay #MuslimLivesMatter
No comments:
Post a Comment