Sunday, May 10, 2026

தமிழக முதல்வர்விஜய் அவரது முதன்மைச் தனிச் செயலாளர்- பி.செந்தில் குமாரையும் தனிச் செயலாளர்-2 வதாக லட்சுமி பிரியா

 விஜய்யின் principal secretary! செந்தில் குமாருக்கென 2022ல் ஸ்டாலின் உருவாக்கிய புதிய பதவி! யார் இவர்

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid08HY2Y4NJy7QgY2EvUvBL5BLmRPCcr8TjKqthsBe7WT4kgGddDDoLxuxeV4YCKfaol&id=100056755337809&__tn__=%2CO*F

ச.ஜோசப் விஜய்க்கு முதல் கண்டனம்! விஜய் மற்றுமொரு திமுக ஆட்சியின் தொடர்ச்சியா?

பதவியேற்பு விழாவில் ஊழலுக்கு எதிராக இருப்பேன் என்று சொல்லிவிட்டு, சில மணி நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை தமது செயலர்களாக நியமித்த ச.ஜோசப் விஜய் அவர்களைக் கண்டிக்கிறேன்!


P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லையெனினும் இந்த நியமனங்கள் அவரின் ஊழல் ஆட்சிக்கான முன்னோட்டமாகத் தெரிகிறது.

திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்?

விஜய் மற்றுமொரு திமுக ஆட்சித் தொடர்ச்சியா?



தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்து தற்போது விஜய்யின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.செந்தில் குமார் ஐஏஎஸ் யார் என்பதை பார்க்கலாம்.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அவரது முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர்- 1) பி.செந்தில் குமாரையும் தனிச் செயலாளர்-2 வதாக லட்சுமி பிரியாவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு தேவையான அதிகாரிகளை நியமித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கு பதிலாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே இந்தத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் இவர்.
முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
அந்த வகையில் சுகாதாரத்துறையிலிருந்து முதன்மைச் செயலாளராக பொறுப்புக்கு வந்த டாக்டர் பி. செந்தில்குமார், 1995 ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த அனுபவமிக்க அதிகாரி ஆவார். 1968ல் தமிழ்நாட்டில் பிறந்த இவர், வேளாண்மையில் இளங்கலை, முதுகலை பட்டங்களும், பூச்சியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொது நிர்வாகப் பயிற்சி பெற்றவர். விழுப்புரம் கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களின் ஆட்சியர் என பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.
2017ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மைச் செயலாளராகவும், மக்கள் மற்றும் மறுவாழ்வு நலத்துறையின் பொறுப்பு தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தி.மு.க. அரசு ஆட்சி வந்ததும், சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளராகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்தப் புதிய பதவி உருவாக்கம் அப்போது சில விவாதங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. சிறப்புச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன், நிதித்துறை (செலவினம்) செயலாளராகப் பணிபுரிந்தார்.
அதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், போக்குவரத்துத் துறை இயக்குநர் என பல முக்கியமான பொறுப்புகளையும் இவர் திறம்பட வகித்துள்ளார். இவரது பரந்துபட்ட நிர்வாக அனுபவம், சுகாதாரத் துறைக்கான இவரது தற்போதைய உயர் நியமனத்திற்கு வலு சேர்க்கிறது.
இதுவரை சுகாதாரத் துறை செயலாளர் என பதவி இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் என்ற பதவியை ஸ்டாலின் உருவாக்கினார். இதன் மூலம் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
See less

No comments:

Post a Comment