Sunday, May 3, 2026

கன்னியாகுமரி நாம் தமிழர் -ராஜா போரான் - ரௌடித்தனமும் அதிக விலை “யானைக் கவளம் ”உணவும்

இவர் ராஜா போரான்… கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாடிபில்டர். இந்திய தபால் துறையில் வேலை பார்த்தவர்… இப்போது “நாம் தமிழர்” கட்சியின் உறுப்பினர். ஜிம்மில் உடம்பு கட்டுவது மட்டும் இல்ல, “யானைக் கவளம்” என்ற பெயரில் இயற்கை உணவுப் பொருளையும் தயாரித்து விற்பனை செய்வார்.

“யானைக் கவளம் சாப்பிட்டா ஒரே நேரத்தில் 50 பேரா வந்தாலும் அடிச்சு சாய்க்கலாம்!” என்று முழு கான்ஃபிடென்ஸுடன் பேசுவார்… அதோடு சீமானைப் பற்றி ஓவர் லெவலில் புகழ்ந்து பேசுவது இவரின் ஸ்பெஷாலிட்டி.
இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்சன் என்பவர், இவருடைய வீடியோவை வைத்து, “இவர் விற்கும் யானைக் கவளம் அதிக விலை… அதோடு FSSAI லைசன்ஸே இல்லை!” என்று ஒரு வீடியோ போட்டார்.
ஆனா இங்கே ஒரு ட்விஸ்ட் இருக்கு… ராஜா போரான் என்ன சொல்றார்னா, “நான் விற்குறது உணவுதான்… இதில் கருப்பட்டி, கருப்பு எள்ளு, திப்பிலி, மிளகு மாதிரி எல்லாம் நம்ம வீட்டுலயே இருக்கும் பொருட்கள். எந்த சீக்ரெட்டும் இல்லை… நேரம் இருந்தா நீங்களே வீட்டுல செய்து கொள்ளலாம்… இல்லனா என்னிடம் வாங்கிக்கலாம். விலை கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்” என்று ஓபனாகவே சொல்லியிருக்கிறார்.
அதனால, இதை மறைத்து விற்கிறார் அல்லது ஏமாற்றுகிறார் என்று சொல்ல முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்கள், “செய்ய டைம் இல்லை… பணம் பிரச்சினை இல்லை” என்று ஆர்டர்கள் அடிக்கடி போட்டார்கள்… வியாபாரம் ஜோராக போயிட்டே இருந்தது. சென்னை மாதிரி நகரங்களிலும் இதே ஸ்டோரி… “செய்வதற்கு டைம் இல்லை பணம் கொடுத்து, வாங்கிக்கலாம்!” என்ற மனநிலை.
FSSAI லைசன்ஸ் விஷயத்திலும் பெரிய சீன் ஒன்றும் இல்லை… சாதாரண ஹோட்டலுக்கு கொடுக்கிற மாதிரி தான் கிடைக்கும். அவர் இதை மருந்து என்று சொல்லவில்லை… உணவுப் பொருள் தான் என்று சொல்லியிருக்கிறார். எனவே ஒரு இட்லி கடைக்கு கிடைப்பது போல எளிதாக லைசன்ஸ் கொடுத்து விடுவார்கள் வெறும் ஐயா ரூபாய் செலவாகும் அவ்வளவுதான். 
ஆகவே விலை அதிகம் என்று குறை சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை… வாங்குறவன் வாங்குவான், வாங்க மாட்டேன் என்றவன் ஸ்கிப் பண்ணிவிடுவான், அல்லது இவரே அதனுடைய இன்கிரிடியன்ஸ் சொல்லிவிட்டார் என்னும் நிலையில் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிட்டு கொள்வார்கள், அதிக விலைக்கு விற்கிறாய் என்று யாரும் கம்ப்ளைன்ட் சொல்ல முடியாது கூடாது, இது மார்க்கெட் லாஜிக்.
ஆனா நெல்சன் வீடியோ போட்டதும்… ராஜா போரான் கோபம் பீக்கில் போய்ட்டு! இரண்டு பாக்கெட் யானைக் கவளம் சாப்பிட்டு, ஒரு ஸ்கூல் பேக்கில் இரண்டு கத்தி, ஒரு வெட்டு அருவாய், நாலு ஆக்சா பிளேடு,  ஒரு நைல் கட்டர், 10 குண்டூசி, ஒரு ஸ்குரு டிரைவர் எல்லாம் போட்டு “மிஷன் நெல்சன்” என்று கிளம்பிட்டார்.
நெல்சன் வீட்டுக்கு போய், “உங்க மகன் என்னைப் பற்றி தவறா பேசிருக்கான்!” என்று அப்பாவுடன் பேசிக்கிட்டு இருக்கும்போது… நெல்சன் எண்ட்ரி! அடுத்த செகண்டே ராஜா போரான் “நான் பாடிபில்டர்… என்னை யாராலும் அடிக்க முடியாது!” என்ற ஓவர் கான்ஃபிடென்ஸில், இடைமறித்தவர்களை எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்டார், உச்சகட்ட தமாசாக, நீங்க 50 பேர் வந்தாலும் உங்களை எல்லாம் ரவுண்ட் கட்டுவேன் என்று மசாலாவாக பேசிக்கொண்டு சமாதானம் பேச வந்தவர்களை கூட அடித்துக் கொண்டிருக்கிறார்..
ஆனா கிளைமாக்ஸ் இங்க தான்… “இவன் என்ன பெரிய பாடிபில்டர்?” என்று அந்த பகுதியிலிருந்த சுகர் பேஷண்ட்ஸ், பிபி பேஷண்ட்ஸ், ஹார்ட் பேஷண்ட்ஸ், முதியவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக மாறி… ராஜா போரானை சுற்றி கொண்டு… ஒரு கலகலப்பான ‘பப்ளிக் டெமோ’ எடுத்துட்டாங்க!
மூன்று பாக்கெட் யானைக் கவளம் சாப்பிட்ட உடம்பு… லுங்கி கழன்று… இறுதியில் மூலையில் சிலிண்டர் பக்கத்தில் உட்கார வைத்த நிலை!
இந்த சம்பவத்துக்கு அடுத்தே ராஜா போரான் புரிஞ்சிக்கிட்டார்… “நீ எவ்வளவு பெரிய பலசாலி ஆனாலும்… இரண்டு மூன்று பேரை தான் சமாளிக்க முடியும்… முழு ஊரையே சமாளிக்க முடியாது!”
முடிவு என்னன்னா… யானைக் கவளம் சாப்பிட்டாலும் சரி, பிரியாணி சாப்பிட்டாலும் சரி… லிமிட் அதேதான்! இரண்டு பேர் எக்ஸ்ட்ரா வந்தா தான் கஷ்டம்… முழு ஊர் வந்தா, மசாலா பேசிட்டு தப்பிக்கணும். இல்லனா… ஜட்டியோடு உட்கார வைப்பாங்க!. 
ராஜா பேரன் உணவு பொருளை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தவறு இல்லை,  அவர் அதை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார் என்று நெல்சன் சொன்னது தவறு, நெல்சன் அவ்வாறு சொல்லிவிட்டார் என்பதற்காக நெல்சரின் வீட்டுக்குள் புகுந்து எல்லோரையும் தான் ஒரு பாடி பில்டர் என்று சொல்லிக் கொண்டு அடித்தது ராஜா போறேன் செய்த தவறு, இப்படி இரண்டு தரப்பிலும் தவறு இருக்கிறது என்னும் நிலையில் காவல்துறையினில் முறையாக விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்..


No comments:

Post a Comment

CSI & Church of South India Trust Association (CSITA) discharge falls within the contours of Article 21 and 21A of the Constitution of India.

  Madras High Court rules on Church of South India's public duty The Rassalam Clan’s plea overturned: A Landmark judgement by 3 member b...