திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் Show time IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா
திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்...
தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்....
நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்..
ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை...
இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த
திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்..
விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்..
விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்..
திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்..
இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்....
இந்தம்மா வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்...
பல மக்கள் போராளிகள் இங்கு தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
சிவகாசி தவெக எம்எல்ஏ கீர்த்தானா சம்பத் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள்... நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப் போகிறோம்." என்று கூறினார். கீர்த்தனா சம்பத் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியபோது, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக பல்வேறு தேர்தல் பிரச்சார உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்த தீவிரமாக உழைத்தார். சந்திரபாபு நாயுடு முதல்வராக உழைத்தவரை, அடையாளம் கண்டு தனது தவெகவில் இணைய அழைத்தார் விஜய்.
இதனிடையே அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த கீர்த்தனா, பின்னாளில் நேரடியாகக் களமிறங்க முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தனது 30 வயதிலேயே வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளார்.
தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றுள்ளார். அரசியல் களத்தில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவர், இன்று அதே களத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த தவெக எம்எல்ஏ கீர்த்தானா, " "எல்லாம் மாறப்போகிறது, அந்த மாற்றம் இதோ வந்துவிட்டது. தளபதி முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே இருக்கிறார்... ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, வேட்பாளராக வாய்ப்பு பெற்று, இன்று அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பது என்பது வேறு எந்த மாநிலத்திலாவது எளிதான காரியமா? இல்லை.
அவர் (விஜய்) திறமையை பார்க்கிறார், ஆற்றலை பார்க்கிறார்; அந்த மாற்றங்கள் அனைத்தையும் கொண்டு வர நாங்கள் இங்கே இருக்கிறோம்.
இந்த அரசாங்கம் 35 முதல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். மிக நீண்ட காலம் நீடிக்கப் போகும் அரசாங்கமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்கிறார்.
அமைச்சர் கீர்த்தனா, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.





No comments:
Post a Comment