Tuesday, June 30, 2026

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை அரசாங்கம்

 கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் முட்டை அரசாங்கம்..! #ADMK_vs_DMK https://www.facebook.com/photo/?fbid=4512537729025569&set=a.1479559295656776

தமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை சப்ளை செய்யும், குமாரசாமியின் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், வீடுகள், பினாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் 5.7.2018 முதல் ஐந்து நாட்கள் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள் தொடர்பாக பல ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. இந்தூரில் இருந்த குமாரசாமியை பாதுகாப்பாக, பெங் களூர் அழைத்து வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். குமாரசாமி விசாரணையின் போது ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒத்துக் கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறினார்கள்.
கிறிஸ்டி புட்ஸ் வளர்ந்த கதை :
தமிழகத்தில், சமூக நலத்துறையின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டம், 1989-ல் துவக்கப்பட்டது. 1989 திமுக ஆட்சியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு நாள் சத்துணவில் முட்டை போடப்பட்டது. 1998 முதல் சத்துணவில் முட்டை போடும் திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் 1991-96-ல் சமூக நலத்
துறை அமைச்சராக இந்திராகுமாரி இருந்தபோது, பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள கூட்டுறவு நிறுவனத்தின் பெயரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு சப்ளை செய்தார். 1996-ல் திமுக ஆட்சியில் 1991–96 அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரித்து, ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்ய எஸ்.ஏ.சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் டி.வி சோமநாதன் ஐ.ஏ.எஸ்., உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது.
சத்துமாவு கொள்முதல் முறைகேட்டில் குமாரசாமி சிக்கவில்லை. குமாரசாமியிடமிருந்துசத்துமாவை, வாங்கி கூட்டுறவு சொசைட்டி பெயரில் சப்ளை செய்த நசரத்பேட்டை முருகேசன், உமாபதி மட்டும் சிக்கினார்கள். சிறைக்கு சென்றார். குமாரசாமியின் பங்கு தாரராக இருக்கும் ஜெயபிரகாஷ் மட்டும், இலவச செருப்பு ஊழலில், இலவச பள்ளி சீருடை, இலவச வேட்டி, சேலை ஊழலில் அமைச்சராக இருந்த இந்திராகுமாரியுடன் சிக்கினார்.
திமுக ஆட்சி காலத்திலிருந்து (1996-2001) ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு சப்ளை செய்து வரும் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிதான் முட்டை சப்ளை செய்தார். முட்டை கொள்முதல் டெண்டரில் இவரே இரண்டு பினாமி நிறுவனங்கள் பெயரில் டெண்டர் போட்டுவிடுவார். அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சற்குண பாண்டியன், சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் மாதிரி மாதா மாதம் கிம்பளம் (கமிசன்) கொடுத்துவிடுவார் குமாரசாமி.
குமாரசாமிக்கு பெரிய அளவில் முட்டை கோழி பண்ணை இல்லாவிட்டாலும், முட்டை கோழி பண்ணை வைத்திருப்பவர்களுடன் ஒப்பந்தம் போட்டு, தமிழக அரசுக்கு தினமும் 50 இலட்சம் முட்டை சப்ளை செய்து வந்தார்.
2001–2006 அதிமுக ஆட்சியிலும், 2006- 2011 திமுக ஆட்சியிலும் முட்டை டெண்டரில், ஆதிக்கம் செலுத்தினார் குமாரசாமி. முட்டை கொள்முதல் டெண்டர் தொடர்பாக கேள்வி கேட்டால் பணத்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்லி விடுவார்.
அதிமுக ஆட்சி மீண்டும் 2011-ல் அமைந்த வுடன், அதிகார மையத்தில், ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முட்டை கொள்முதல் டெண்டரில், மத்திய, மாநில அரசில் ஏற்கனவே முட்டை உள்ளிட்ட உணவு பொருட்கள் சப்ளை செய்திருக்க வேண்டும் என்ற விதிகளை சேர்த்து, முட்டை டெண்டரில் அமைச்சர்கள், அதிகாரிகளை விலைக்கு வாங்கி அட்டுழியம் செய்ய தொடங்கினார்.
கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் மூலம் பல கோடி சொத்துக்கள் சம்பாதித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வே.மு.சேவியர் கிறிசோ நாயகம் ஐ.ஏ.எஸ். (ஜூலை 2016-ல் ஓய்வு). சேவியர் கிறிசோ நாயகம் சமூக நலத்துறை இயக்குநராக இருந்த போது, கிறிஸ்டி புட்ஸ் பணத்துக்கு அடிமையாகி அடித்த ஊழல் கூத்து. முட்டை டெண்டரில் வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாதபடி டெண்டர் விதிமுறைகளை மாற்றம் செய்தவர்.
2013-14-0 முட்டை ஆண்டிற்கான டெண்டரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனமான நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர் பிரைசஸ் கோயம்புத்தூர் இரண்டு பினாமி நிறுவனங் களில் பெயரில் கலந்து கொள்கிறார்கள். இந்த இரு நிறுவனங்களும் முட்டை கொள்முதல் டெண்டரில் தேர்வு செய்யப்பட்டது. 9 பைசா போக்குவரத்து செலவினம் உட்பட முட்டை விலை ரூ.3.19 என நிர்ணயம் செய்யப் பட்டது. ஒரு
ஆனால், நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல் ரூ.4.30-ம், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் ரூ.4.40-ம் விலைப்புள்ளி கொடுத்திருந்தார்கள். இரண்டு நிறுவனமும் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனம் என்பதால், சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.3.19 முட்டை சப்ளை செய்ய ஒத்துக்கொண்டார்கள். அப்போது முட்டையின் சில்லறை விலை ரூ.2.75 தான் மொத்த விலை ரூ.2.50.
ஒரு முட்டைக்கு 60 பைசா, கமிசனாக அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. சின்ன கணக்கு ஒரு நாளைக்கு 50 இலட்சம் முட்டை வாரம் 2.50 கோடி முட்டை, ஒரு முட்டை கமிசன் 60 பைசா என்றால் ஒரு நாளைக்கு கமிசன் ரூ.30 இலட்சம், அம்மாடியோவ்...!"
இந்த டெண்டரில் APPU FOODS PRIVATE LTD, AISHWARYA FEEDS NAMAKKAL, K.S.FOODS AND FEED NAMAKKAL ஆகிய மூன்று நிறுவனங்களின் தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெறவில்லை. அதாவது இந்த மூன்று நிறுவனங்களும், அரசுக்கு முட்டை சப்ளை செய்த அனுபவம் இல்லையாம்.
2014-15-ம் ஆண்டிற்கு கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள் நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் இரு நிறுவனங்களும் முட்டை கொள்முதல் டெண்டரில் தேர்வு செய்யப்பட்டது.15 பைசா போக்குவரத்து செலவு உட்பட ஒரு முட்டையின் விலை ரூ.4.51. ஆனால் 2014 ஜனவரி முதல் 201 டிசம்பர் வரை குக்கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு முட்டை ரூ. 3.75 -க்கு கிடைக்கிறது. மொத்த விற்பனையில் அதிகபட்ச ஒரு முட்டை விலை ரூ.3.20 தான்.
மொத்த விலையில் ஒரு முட்டை ரூ.3.20-க்கு சில்லறை விலையில் (கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில்) ஒரு முட்டை 5.3.75-5 கிடைக்கும்போது, சமூக நலத்துறை சத்துணவு மையங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 55 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்படும் டெண்டரில் ஒரு முட்டை ரூ.4.51-க்கு நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டது.
2014-15 முட்டை டெண்டரில் Appu Foods Private Ltd கலந்து கொள்ளவில்லை Aishwarya Feeds Namakkal, Kisan poultry farms Salem ஆகிய இரு நிறுவனங்களும் கலந்து கொண்டது. ஆனால் தொழில்நுட்ப தகுதி பெறவில்லை.
சராசரி ஒரு முட்டைக்கு ரூ.1.15 வரை கமிச னாக சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி முதல் சத்துணவுத்துறை அதிகாரிகள் வரை கொடுக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு சத்துணவு மற்றும் ஊட்டச் சத்து மையங்களுக்கு தேவையான முட்டை சுமார் சுமார் 55 இலட்சம். அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முட்டை கமிசன் ஒரு நாளைக்கு ரூ.60 இலட்சம்.
கிறிஸ்டி புட் குமாரசாமியின் பினாமி நிறுவனமான நாச்சுரல் புட் புராடக்ஸ் கம்பெனி இந்தியன் வங்கி திருச்செங்கோடு கிளையில் வங்கி கியாரண்டி ரூ.6 கோடிக்கு (No.00203IG 140000005 DATED 20.5.2014) கொடுத்துள்ளது.
சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கம்பெனி இந்தியன் வங்கி திருச்செங்கோடு கிளையில் வங்கி கியாராண்டி ரூ.3 கோடிக்கு (No.00203IG 140000004 DATED 20.5.2014) கொடுத்துள்ளது.
வங்கி கியாராண்டியை பார்க்கும் போது, இரண்டு நிறுவனமும் திருச்செங்கோட் டிலிருந்து செயல்படுகிறது என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையின் வங்கி கியாரண்டிக்கு அடுத்த அடுத்த எண்.
மேலும் இரண்டு நிறுவனங்களின் ரூ.100/-மதிப்பிலான பத்திரம் 28.5.14-ம் தேதி இந்திரா நகரில் உள்ள குமரவேலுவிடம் வாங்கப் பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களின் பினாமி உரிமையாளர் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி என்பது உறுதியாகிறது.
2015- 2016 ஆம் ஆண்டிலும் இதே நிலைதான். 2016-2017-வெளிமார்க் கெட்டில் சில்லறை விலையில் ஒரு முட்டை ரூ.3.50-க்கு கிடைக்கும்போது, சத்துணவு மையங்களுக்கு தினமும் 55 இலட்சம் முட்டை சப்ளை செய்ய, ஒரு முட்டை விலை ரூ.4.35 என டெண்டரில் நிர்ணயம் செய்தார்கள். கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனங்களான நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் இரு நிறுவனங்கள் தான் சப்ளை செய்தது.
வழக்கம் போல், அமைச்சர், அதிகாரிகளுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1.15 கமிசன் கொடுத்து, இந்தியாவில் ஊழல் சாதனை பட்டியலில் இணைந்தார் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி.
கோயம்புத்தூரிலிருந்து செயல்படுவதாக சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கூறி டெண்டரில் கலந்து கொண்டது. ஆனால் வங்கி கியாராண்டி திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் போலியான நிறுவனங்களின் பெயரில், 20.5.2014-ல் முட்டை கொள்முதல் போடப்பட்ட ஒப்பந்தம் போட்டவர் சமூக நலத்துறை இயக்குநராக இருந்த 2016 ஜூலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சேவியர்கிறிசோ நாயகம்,
சமூக நலத்துறை இயக்குநராக சேவியர்கிறிசோ நாயகம் ஐ.ஏ.எஸ். 28.9.2012 முதல் 2016 ஜூலையில் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார். சேவியர்கிறிசோ நாயகம் ஐ.ஏ.எஸ். சமூக நலத்துறை இயக்குநராக பணியாற்றிய நான்கு ஆண்டுகளில் மட்டும் முட்டை சில்லறை விலையை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்த காரணத்தால் அரசுக்கு ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, 2017-20018, 2018-2019 கிருஷ்டி புட்ஸ் குமாரசாமி, பினாமி நிறுவனங்கள் சப்ளை செய்து வருகிறார். 2017-2018-ம் ஆண்டில் முட்டை விலை சில்லறை மார்க் கெட்டில் ரூ.4.20-க்கு விலைக்கு கிடைக்கும் போது, ஒரு நாளைக்கு 60 இலட்சம் முட்டை கொள்முதல் செய்யும் முட்டைக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை முட்டை ரூ.4.34-க்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குநராக இருந்த வி.அமுதவள்ளி ஐ.ஏ.எஸ். சில்லறையை விட அதிக விலைக்கு முட்டை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை போட்டுள்ளார். இதனால், அரசுக்கு 2017-2018-ல் மட்டும் ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குநரகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ல் 2005-ல் தகவல்கள் தர மறுக்கிறார்கள்.
2016 மே மாதம் முதல் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் திருமதி.சரோஜா அவர்களுக்கு, சமூகநலத்துறை இயக்குநர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ன் கமிசன் கொடுப்பதாக கிருஷ்டி புட்ஸ் குமாரசாமியின் ஊழியர்கள் தலைமைச் செய லகத்தில் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். அமைச்சர் முதல் அதிகாரிகளுக்கு கமிசன் கொடுப்பதற்கு, கிருஷ்டி புட்ஸ் நிறுவனத்தில் ஆறு பேர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சமூக நலதாதுறை செயலாளராக நலத்துறையில் இருந்த மணிவாசன் ஐ.ஏ.எஸ், சமூக நலத் துறை செயலாளராக இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ், அசோக் டோங்கரா ஐ.ஏ.எஸ், ஐ.சி.டி.எஸ் திட்ட இயக்குநர் கண்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முட்டை ஊழலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள்.
1997 முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் சத்துணவு முட்டை டெண்டரில் அமைச்சர்கள், அதிகாரிகளை விலைக்கு வாங்கி, முட்டை அரசாங்கமே நடத்தி வருகிறார் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி...

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ.1350 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் குமாரசாமி தன் பினாமி பெயர்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாயை திறக்கவில்லையாம்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் வடக்கில் 140/3, 141/6A, 26/6 உள்ளிட்ட பல சர்வே எண்களில் 100 ஏக்கர் மற்றும் குளத்தூர் ញ់ 108/7. 11/1, 11/4/11/3, 199/13 உள்ளிட்ட பல சர்வே எண்களில் 140 ஏக்கர் நிலம் விளாத்திக்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 18 பினாமி பெயர்களில் பதிவு செய் துள்ளார். பதிவு செய்யப்பட்ட 240 ஏக்கரில் 27 ஏக்கர் அடுத்தவர் நிலம், அரசு புறம்போக்கு நிலம், பூமி தானம் நிலங்கள் போலியான பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு பதிவு செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ.2 இலட்சம். 240 ஏக்கருக்கு ரூ.480 இலட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர குளத்தூரில் 400 ஏக்கருக்கு விற்பனை ஒப்பந்தம் பத்திரம் போடப்பட்டுள்ளது.
நாங்குனேரியில் 600 ஏக்கர் நிலம் பேசி முடிக்கப்பட்டு விற்பனை ஒப்பந்த பத்திரம் போடப்பட்டுள்ளது. கமுதியில் 1000 ஏக்கர் நிலம் பேசி முடிக்கப்பட்டு, விற்பனை ஒப்பந்த பத்திரம் போடப்பட்டு, பத்திரப்பதிவும் நடந்து வருகிறது .தென்காசியில் 100 ஏக்கர் விற்பனை ஒப்பந்த பத்திரம் போடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்கள் குமாரசாமியிடம் பெங்களூரில் இரவு பகலாக விசாரணை நடத்தினார்கள். ஆனால் தூத்துக்குடி கொளத்தூர். நாங்குனேரி. கமுதியில் பினாமி பெயரில் வாங்கி நிலம் தொடர்பாக வாயை திறக்கவில்லை.
கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் விசுவாசம் மிக்க மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வருமான வரித்துறையால் குமாரசாமியின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
BRAND ROOT COMMERCIALS PRIVATE LTD இந்த நிறுவனத்தின் பெயரில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் Brand Root Commercials Private Limited இந்த நிறுவனம் Brand Root Commercials Private Limited is a Private incorporated on 26 July 2017. It is classified as Non-govt company company and is registered at Registrarof Companies, Coimbatore. Its authorized share capital is Rs. 100,000 and Its authorized share capital is Rs. 100,000. It is involved in Other wholesale [Includes specialized wholesale not covered in any one of the previous categories and wholesale in a variety of goods without any particular specialization.].
Brand Root Commercials Private Limited Annual General Meeting (AGM) was last held on N/A and as per records from Ministry of Corporate Affairs (MCA), its balance sheet was last filed on N/A.
Directors of Brand Root Commercials Private Limited are.
Brand Root Commercials Private Limited Corporate Identification Number is (CIN) U51909T Z2017PTC029261 and its registration number is 29261. Its Email address is nksenthilkumaracs@ yahoo.in and Its registered address is Door No.11/15, Thunganoor, Erumapatty Kongana puram, Edappadi Taluk Salem Salem TN 637210 IN.
BRAND ROOT COMMERCIALS PRIVATE
LTD நிறுவனத்தின் இயக்குநர் காளியப்பன் கோபாலகிருஷ்ணன் என்று கையெழுத்து போட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முகவரி 11/15 தூங்கனூர், எருமைப்பட்டி, கொங்கனா புரம், எடப்பாடி, சேலம். எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் தூங்கனூர், எருமைப்பட்டியில் காளியப்பன் கோபால கிருஷ்ணன் பெயர் இல்லை.
கிரைய பத்திரங்களில் கையெழுத்து போட பிரசாத் என்பவருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது. பிரசாத் சொந்த ஊர் 670ரங்கன் காடு, கருமாபுரம், காங்கேயம்பாளையம் நாமக்கல். வாக்காளர் பட்டியலில் இந்த முகவரி உள்ளது. பிரசாத் பெயர் உள்ளது. இந்த பிரசாத், கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் மேலாளர்.
BRAND ROOT COMMERCIALS PRIVATE LTD நிறுவனமே 26.7.17-ல் தான் ஒரு இலட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது.
2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி இந்த நிறுவனத்தின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தெற்கு கிராமத்தில் பி.கடற்கரை தங்கம் என்பவரிடமிருந்து சர்வே எண்.2178-ல் உள்ள 2.38 ஏக்கர் நிலம் ரூ.3.57 இலட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு ஆகஸ்டு 24ம் தேதி வே.முனியசாமி, வே.சங்கரன், வே. பேச்சியம் மாள் குடும்பத்தினரிடமிருந்து 3.55 ஏக்கர் நிலம் ரூ.5.32 இலட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி வே.பத்மநாபன் என்பவரிடமிருந்து 1.10 ஏக்கர் நிலம் ரூ.1.65 இலட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. கிரைய பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி மட்டும், குளத்தூர் கிராமத்தில் 28 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் ரூ.1.50 இலட்சம் என கணக்கீட்டால் ரூ.42 இலட்சத் துக்கு வாங்கி உள்ளார்கள்.
2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி ஒரு இலட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட BRAND ROOT COMMERCIALS PRIVATE LTD நிறுவனம் 28 நாட்களில் ரூ.42 இலட்சம் எப்படி முதலீடு செய்ய முடியும். BRAND ROOT COMMERCIALS PRIVATE LTD குமாரசாமியின் பினாமி நிறுவனம் என்பது உறுதியாகி உள்ளது.
இதேபோல் 2017ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சுமார் 100 ஏக்கர் BRAND ROOT COMMERCIALS PRIVATE LTD பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை தவிர குளத்தூர் வடபாகத்தில் அழகுராஜ், முத்துமாரியப்பன் உள்ளிட்ட பல தனி நபர் பெயர்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் குமார சாமி வாங்கிய நூற்றுக்கணக்கான நிலத்துக்கு வங்கி காசோலை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையை ஏமாற்றிய பலே கில்லாடிதான் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி.

No comments:

Post a Comment

குடியிருப்பாகப் பயன்படுத்தப்படும் கிராம நத்தம் நிலம் அரசுக்குச் சொந்தமல்ல

  குடியிருப்பாகப் பயன்படுத்தப்படும் கிராம நத்தம் நிலம் அரசுக்குச் சொந்தமல்ல! – Land Encroachment Act மூலம் வெளியேற்ற முடியாது: சென்னை உயர்நீ...