மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?
“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!”
- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
மூலமும்
நாவலர் பண்டித
ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும்
ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும்
https://www.tamilvu.org/ta/library-l3100-html-l3100ind-132364
- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,
சிலப்பதிகாரம் -
கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்;
பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான். துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான். அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான். தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான். அவனைப் போற்றாத நா என்ன நாவே....
பாடல்
ஆய்ச்சியர் குரவை என்பது இளங்கோவடிகள் இயற்றிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் அமைந்துள்ள 17-வது காதையாகும்.முக்கிய குறிப்புகள்- நிகழிடம்: ஆயர் சேரி (ஆயர் வாழும் பகுதி).
- காரணம்: ஆயர் சேரியில் பசுக்களுக்குக் தீமை தரும் பல அபசகுனங்களும் உற்பாதங்களும் நிகழ்ந்தன. அவற்றைப் போக்கி நாடகம் மற்றும் குரவைக் கூத்து மூலம் இறைவனை வேண்ட மாதரி என்ற முதியவள் ஏற்பாடு செய்கிறாள்.
ஆய்ச்சியர் குரவை பாடலில் உள்ள வரிகள், அதன் பொருள் அ
ஆய்ச்சியர் குரவை பாடலில் உள்ள வரிகள், அதன் பொருள் அ
கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்.
பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.
பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.
துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.
அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.
தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.
அவனைப் போற்றாத நா என்ன நாவே....
பாடல்
"எடுத்துக்காட்டு"
ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்,-
என்று, தன் மகளை நோக்கி,
தொன்று படு முறையான் நிறுத்தி,
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.
உரை
"படைத்துக் கோள் பெயர்"
மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
‘ஐ!’ என்றாள், ஆயர் மகள், உரை
"கூத்து உள்படுதல்"
அவர்-தாம்
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக்
குரல்-கொடி தன் கிளையை நோக்கி, ‘பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,
முல்லைத் தீம் பாணி’ என்றாள்.
எனா,
குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,
வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின்
பின்றையைப் பாட்டு எடுப்பாள்.
உரை
"பாட்டு
மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்"
1
கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
உரை
2
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
உரை
3
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
உரை
"பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்"
தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை-
அணி நிறம் பாடுகேம் யாம்.
உரை
4
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்?
உரை
5
வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?
உரை
6
தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்?
உரை
"ஒன்றன் பகுதி"
1 கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார். உரை
2
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார்
உரை
"ஆடுநர்ப் புகழ்தல்"
மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும்,
கோவலர் - தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர,
ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த,
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே.
எல்லாம் நாம்,
புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்-
உள்வரிப் பாணி ஒன்று உற்று.
உரை
"உள்வரி வாழ்த்து
பூவை நிலை"
1
கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்.
உரை
2 பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால், உரை
3
முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான்,
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்:
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால்.
உரை
"முன்னிலைப் பரவல்"
1 வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே:
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை:
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! உரை
2 ‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே:
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்:
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! உரை
3 திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!
உரை
"படர்க்கைப் பரவல்"
1 மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
உரை
2
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
3
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?
என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள, வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே!
மதுரைக் காண்டம் |
7. ஆய்ச்சியர் குரவை
"கயிறும் மத்தும் கொண்டு, மாதரி தயிர் கடைய முற்படுதல்" | |||||||
5 10 | ‘கயல் எழுதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவல் அம் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, ஐயை தன் மகளைக் கூஉய், கடை கயிறும் மத்தும் கொண்டு, இடை முதுமகள் வந்து தோன்றும்-மன். | உரை | |||||
"உரைப் பாட்டு மடை மாதரி கண்ட உற்பாதங்கள்" | |||||||
1 2 3 | குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! உறி நறு வெண்ணெய் உருகா; உருகும் மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்; மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு! | உரை | |||||
"கருப்பம்" | |||||||
| ‘குடத்துப் பால் உறையாமையும், குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோர்தலும் உறியில் வெண்ணெய் உருகாமையும், மறி முடங்கி ஆடாமையும், மால் மணி நிலத்து அற்று வீழ்தலும், வருவது ஓர் துன்பம் உண்டு’ என, மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே! மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும்-தான் காண, ஆயர் பாடியில், எரு மன்றத்து, மாயவனுடன் தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில், வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்’ என்றாள்- ‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’ | உரை | ||||||
"கொளு" | |||||||
1 | ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ் வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, | உரை | |||||
2 | நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப் பொன் தொடி மாதராள் தோள். | உரை | |||||
3 | மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம் முல்லை அம் பூங் குழல்-தான். | உரை | |||||
4 | நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப் பெண் கொடி மாதர்-தன் தோள். | உரை | |||||
5 | பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந் நன் கொடி மென்முலை-தான். | உரை | |||||
6 | வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக் கொன்றை அம் பூங் குழலாள். | உரை | |||||
7 | தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப் பூவைப் புது மலராள். | உரை | |||||
"எடுத்துக்காட்டு" | |||||||
| ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங் கோதையார்,- என்று, தன் மகளை நோக்கி, தொன்று படு முறையான் நிறுத்தி, இடை முதுமகள் இவர்க்குப் படைத்துக் கோள் பெயர் இடுவாள்; குடமுதல் இடமுறையா, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என, விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே. | உரை | ||||||
"படைத்துக் கோள் பெயர்" | |||||||
| மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை- ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள் பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார் முன்னை ஆம் என்றாள் முறை. மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்; வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்; கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள், முத்தைக்கு நல் விளரி-தான் அவருள், வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு, தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர் வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப் | |||||||
| பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே, | |||||||
| ‘ஐ!’ என்றாள், ஆயர் மகள், | உரை | ||||||
"கூத்து உள்படுதல்" | |||||||
| அவர்-தாம் செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து, அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக் குரல்-கொடி தன் கிளையை நோக்கி, ‘பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும், முல்லைத் தீம் பாணி’ என்றாள். எனா, குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக, வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின் பின்றையைப் பாட்டு எடுப்பாள். | உரை | ||||||
"பாட்டு மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்" | |||||||
1 | கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! | உரை | |||||
2 | பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! | உரை | |||||
3 | கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில் முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! | உரை | |||||
"பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்" | |||||||
| தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை- அணி நிறம் பாடுகேம் யாம். | உரை | ||||||
4 | இறும் என் சாயல் நுடங்க நுடங்கி அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்? அறுவை ஒளித்தான் அயர, அயரும் நறு மென் சாயல் முகம் என்கோ யாம்? | உரை | |||||
5 | வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்? நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்? | உரை | |||||
6 | தையல் கலையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்? கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி, மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்? | உரை | |||||
"ஒன்றன் பகுதி" | |||||||
| 1 | கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான், மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள், பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார் | ||||||
| முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார். | உரை | ||||||
2 | மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள், | ||||||
| பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள், கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார் | |||||||
| குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் | உரை | ||||||
"ஆடுநர்ப் புகழ்தல்" | |||||||
| மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும், | |||||||
| கோவலர் - தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர, ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த, தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே. எல்லாம் நாம், புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்- உள்வரிப் பாணி ஒன்று உற்று. | உரை | ||||||
"உள்வரி வாழ்த்து பூவை நிலை" | |||||||
1 | கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம், | ||||||
| தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே: | |||||||
| தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக் கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால். | உரை | ||||||
| 2 | பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான், மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்: மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன் | ||||||
| பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால், | உரை | ||||||
3 | முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான், மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்: மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன் கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால். "கோவாமலை.........என்பரால்" கோவாமலை ஆரம் கோத்த கடல் ஆரம் தேவர் கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார் பினவே - கோக்கப்படாத பொதியமலையின் ஆரமும் கோக்கப்பட்ட கொற்கைக்கடலின் ஆரமும் இந்திரன் வெகுண்டு இட்ட பூணாகிய ஆரமும், ஆகிய இவை பாண்டியர் தலைவனது மார் பிடத்தன, தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் - அங்ஙனம் தேவர்கோன் பூணாரம் இறுதியாக வுள்ளனவற்றைப் பூண்டவன் யாவனென்னின், செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால் - வள மிக்க துவராபதிக்கண் ஆனிரையை மேய்த்துக் குருந்த மரத்தினை முறித்த கண்ணனென்று கூறுவர்; | உரை | |||||
பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ; பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம்.
| |||||||
| 1 | வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி, கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே: கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை: | ||||||
| மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! | உரை | ||||||
‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்: | |||||||
| வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! "அறுபொருள்...........மருட்கைத்தே" அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே - தீர்ந்த பொருள் இவனே எனக் கொண்டு தேவர் கூட்டம் வணங்கிப் போற்ற நீ மிக்க பசி ஒன்று இல்லாது எல்லா உலகங்களையும் உண்டாய், உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகமுண்ட வாய் களவின்கண் உறிக்கண் உள்ள வெண்ணெயை உண்ட வாயாகும், வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே - வளவிய துழாய் மாலையை உடையாய் இஃது ஒரு மாயமோ மிகவும் மருட்கையினை யுடைத்தாயிருந்தது; வண்டுழாய் மாலையாய் என்பதனை முதற்கண் உரைக்க. அறு பொருள் - தீர்ந்தபொருள் ; அறுதியிடப்பட்ட பொருள் ; இனி, இதற்கு ஐயமற்ற பொருள் என்றும், அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள் என்றும் கூறுவாருமுளர். உறுபசி - உற்றபசியுமாம். அடைய - முழுவதும். | உரை | ||||||
| 3 | திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே; நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி; | ||||||
| மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே! "திரண்டமரர்...மருட்கைத்தே" திரண்டு அமர் தொழுது ஏத்தும் திருமால் நின் செங்கமல இரண்டு அடியான் மூவுலகும் இருள் தீர நடந்தனையே - அமரர் கூடி வணங்கிப் போற்றுகின்ற திருமாலே நினது சிவந்த தாமரை மலர் போலும் இரண்டு அடிகளான் மூன்று உலகங்களும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாய், நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி - அங்ஙனம் நடந்த அடிகள் பாண்டவர் பொருட்டுப் பின்பு தூதாக நடந்த அடிகளாம், மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே - நரசிங்கமாகிப் பகையை அழித்தோய் இஃது ஓர் மாயமோ எங்கட்கு மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது; அமரர் தொழுதேத்தலை அடிக்குக் கூட்டினுமமையும். இவை மூன்றும் முன்னிலைப் பரவல். | உரை | ||||||
"படர்க்கைப் பரவல்" | |||||||
| 1 | மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத் தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து, சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே? | ||||||
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
| உரை | ||||||
2 | பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும், திருவடியும், கையும், திரு வாயும், செய்ய கரியவனை; காணாத கண் என்ன கண்ணே? கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
| உரை | |||||
3 | மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற, படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே? ‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? | உரை | |||||
"மடந்தாழும் ......... நாவே" மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை - நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும் பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே - போற்றாநா எப் பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்னா நா என்ன நாவே - நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும்; தாழ்தல் - தங்கல். கஞ்சனார் - செறலின்கண் பால் மயக்கம். நாற்றிசை, ஆகுபெயர். படர்தல் -செல்லுதல். இவை மூன்றும் படர்க்கைப் பரவல். "வாழ்த்து" | |||||||
| என்று, யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர் மருள, வைகல் வைகல் மாறு அட்டு, வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே! | உரை | ||||||
வேத்தர் - வேந்தர்; வலித்தல். அடுக்கு, பன்மைப்பொருட்டு.
[அரும்பத, 'காலைவாய்த் தழுவினாள், மாலைவாய்க் கண்டாள்' என்கையால் குரவை யாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க.]
இது கொச்சக வொருபோகு உரைவிரவி வந்தது.
ஆய்ச்சியர் குரவை முற்றிற்று.
7. ஆய்ச்சியர் குரவை
"கயிறும் மத்தும் கொண்டு, மாதரி தயிர் கடைய முற்படுதல்" | ||
5 10 | ‘கயல் எழுதிய இமய நெற்றியின் அயல் எழுதிய புலியும் வில்லும் நாவல் அம் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, ஐயை தன் மகளைக் கூஉய், கடை கயிறும் மத்தும் கொண்டு, இடை முதுமகள் வந்து தோன்றும்-மன். | உரை |
"உரைப் பாட்டு மடை மாதரி கண்ட உற்பாதங்கள்" | ||
1 2 3 | குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! உறி நறு வெண்ணெய் உருகா; உருகும் மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்; மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு! | உரை |
"கருப்பம்" | ||
| ‘குடத்துப் பால் உறையாமையும், குவி இமில் ஏற்றின் மடக் கண் நீர் சோர்தலும் உறியில் வெண்ணெய் உருகாமையும், மறி முடங்கி ஆடாமையும், மால் மணி நிலத்து அற்று வீழ்தலும், வருவது ஓர் துன்பம் உண்டு’ என, மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே! மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும்-தான் காண, ஆயர் பாடியில், எரு மன்றத்து, மாயவனுடன் தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில், வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்’ என்றாள்- ‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’ "என்றியாம் ...... முரசே" என்று யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் - என்று கூறி நாம் தொடுத்த குரவைக் கூத்தினுள் போற்றிய கடவுள், நம் ஆத்தலைப்பட்ட துயர் தீர்க்க - நமது பசுவினிடத்துப் பட்ட துன்பங்களை நீக்கிடுக ; வேத்தர் மருள வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே - வெற்றி தரும் இடியைப் படையாகவுடைய இந்திரனது முடி இடத்தை உடைத்த தொடி பொருந்திய தோளையுடைய பாண்டியனது குணிலால் எறியப்படும் முரசமானது பகையரசர் மயங்கும் வண்ணம் நாடோறும் பகைவர்களைக் கொன்று வெற்றியை அத் தென்னற்கு அளித்து முழங்குவதாக. வேத்தர் - வேந்தர்; வலித்தல். அடுக்கு, பன்மைப்பொருட்டு. [அரும்பத, 'காலைவாய்த் தழுவினாள், மாலைவாய்க் கண்டாள்' என்கையால் குரவை யாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க.] இது கொச்சக வொருபோகு உரைவிரவி வந்தது. ஆய்ச்சியர் குரவை முற்றிற்று. | உரை |
No comments:
Post a Comment