Tuesday, March 4, 2014

பதவி வேலை ஏசு வேண்டாம்- பிறகு ஏசு பரிசுத்த ஆவி கதை- உலகம் அழியப்போகிறது-உமாசங்கர் ஐஏஎஸ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100724_umashankar.shtml

கர்த்தரா? பரிசுத்த ஆவியா?    ஜுஜுபி- சாதி சர்டிபிகட் தான் தேவை

 large_77032
 


திருநெல்வேலி : “”சட்டப்படி நான் இந்துதான். என் வழிபாட்டு உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்தார்.

நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.



கிறிஸ்தவராக இருந்தும் தான் இந்து தலித் என்று சான்றிதழ் கொடுத்து இந்திய அரசுப் பணி வேலைக்கு சேர்ந்ததாக தமிழக அரசால் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர், தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதும் போது இந்து தலித்தாக இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய பிறகு, மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்.

பதவி மாற்றம் செய்யப்பட்ட வேளையில் கடும் மன உளைச்சலில் தான் இருந்தபோதே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், சமீபதித்தில் தான் தொடர்ந்திருந்த வழக்கில் கூட தான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னைசாதி மோசடி? : உமாசங்கர் விளக்கம் : “”டான்சி நிர்வாக இயக்குனராக நாளை மறுதினம் பொறுப்பேற்கிறேன்,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் கூறியதாவது: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போலியான ஜாதிச்சான்று பெற்றதாகவும் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்னை, “சஸ்பெண்ட்’ செய்த அரசு, அதை திரும்பப் பெற்றுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிப்பது என் கடமை. எனக்கு இரு சொத்துக்கள் உள்ளன. கடந்த 98ல் மாதவரம் அடுத்த கதிர்வேட்டில் 2.75 லட்சம் ரூபாயிலும், 2003ல் சாந்தோம் அருகே, 10 லட்ச ரூபாயிலும், 900 ச.அடி., இடம் வாங்கினேன். அதற்கான வங்கிக் கடனை இன்னும் செலுத்தி வருகிறேன். இதுதவிர எனக்கு வேறு சொத்து இல்லை. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.

என் தந்தைக்கு இரு மனைவிகள். என் அம்மா கிறிஸ்தவர்கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என் அப்பா, என்னை முறைப்படி இந்துவாக மாற்றினார்.   சங்கரன்கோவில் தாலுகாவில், “இந்து பள்ளர்’ என ஜாதிச்சான்று வாங்கியுள்ளேன். அதில் முறைகேடு இல்லை. நான் இன்று வரை சட்டப்படி இந்துவாகத்தான் உள்ளேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, சர்ச்சுக்கு செல்கிறேன். “டான்சி’ தலைவராக நாளை மறுதினம் பொறுப்பேற்கிறேன். இவ்வாறு உமாசங்கர் கூறினார்.

One requires to Be SC for Professional College Admissions. So Umasankar became Hindu then. ENJOY Minority Benefits and Swindle Dalit rights by doing like this.
//தற்போது 25 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.//
Sir you believe Christ- Allow real Dalits to get Benefits who earn less than Rs.20 per day almost 40 Crore people in India.
‘Umashankar did produce false certificate’
Express News Service Express News Service
First Published : 25 Jul 2010 03:31:04 AM IST
CHENNAI: Four days after IAS officer C Umashankar was suspended, a clarification about his community certificate came from a mysterious fax number. The four-page clarification titled “sequence of events relating to obtaining false Scheduled Caste community certificate by C Umashankar, IAS”, reiterated that the officer had, indeed, produced a false caste certificate to get selected as an IAS officer.
”Ever since he was selected by Union Public Service Commission in 1989-90, he is serving in Indian Administrative Service in a highly irregular, grossly dishonest and wholly unjustified manner”, the fax message said.
The message further said Umashankar’s parents Chellakani and Suganthi, though Hindus by birth, converted to Christianity and were Christians at the the time of their marriage. As such, Umashankar was a born Christian.
Umashankar converted to Hinduism on February 14, 1984 and applied for the issue of SC community certificate claiming that he was a ‘reconvert’ to Hindu religion and got the certificate on October 23, 1986.
Umashankar had not adhered to the conditions existing at that time in respect of converts to Hindu religion and therefore his action in having obtained SC community certificate is not correct and is a false one, the message said and added that only on the strength of the false certificate, Umashankar was allotted to IAS service.
உமா சங்கர் ஒரு காலத்தில் கம்பீரமாய் அரசுப் பதவியில் இருந்தவர் .இப்போது மதப் போதகராக உள்ளார் . அதுக்காக இப்படியா ? 



அவரின்  எச்சரிக்கையை பாருங்கள் 


கர்த்தாவே எங்களை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்



மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

உமாசங்கர் ஐஏஎஸ் அபூர்வமாக இருக்கும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர், 91-96 அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பல ஊழல்களை வெளிப்படுத்தியவர், சென்ற திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க சொன்ன காண்ட்ராக்டை மறுத்தவர், மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், பெரும் போராட்டத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். அப்போதிலிருந்தே இயேசுவை சரணடைந்தேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

நக்கீரனில் வெளிவந்த உமாசங்கரின் பேட்டி

உமாசங்கர் IAS : பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூலம் சொல்லி அனுப்பினார் அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உமாசங்கர் IAS : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

# நேர்மையான அதிகாரி உமாசங்கர் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருந்துகிறோம்.



ன்றி: நக்கீரன்: 2012 செப்டம்பர் 26-28 பக்கம் 18,19.
கேள்வி: பொறுப்புகள் மிகுந்த உயர்பதவியில் இருக்கும் அரசு அதிகாரியான நீங்கள், குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பிரசங்கம் செய்வது ஏற்புடையதாக இல்லையே?.
பதில்: ஒரு அரசு அதிகாரி, மத கூட்டங்களில் கலந்துக்கொள்ளக்கூடாது என்றோ மத பிரசங்கம் செய்யக்கூடாது என்றோ இந்திய அரசியல் சட்டத்திலும் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான நடைமுறை சட்டவிதிகளிலும் இல்லை. அப்படி மத பிரசங்கம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்பதை எனக்கு எதிராக பிரச்சனையை கிளப்பும் இந்து சக்திகளை காட்டச்சொல்லுங்கள். ஒருவேளை இந்துத்துவா சக்திகள் தங்களின் கட்சி விதிகளாக இதைப் புகுத்தியிருக்கிறார்களோ என்னவோ.. எனக்குத் தெரியாது. அப்படி அவர்கள் சட்டம் போட்டிருந்தால் அதைப்பற்றிய கவலையோ அதை பின்பற்றித்தான் ஆக வேண்டுமென்கிற அவசியமோ எனக்கு கிடையாது.
கேள்வி: அரசு அதிகாரியாக இருக்கும் உங்களை நீங்கள் பதவியிலிருக்கும் துறை ரீதியிலான பிரச்சனைகளுக்காக பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்த சூழலில், கிறிஸ்தவ மத போதகராக அந்த மதத்திற்கு மட்டும் ஆதரவாக இருக்கும் உங்களிடம் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
பதில்: கிறிஸ்தவ மதத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இது எனது சுதந்திரம். இந்த உரிமையில் யாரும் தலையிடமுடியாது. ஆனால், எனது அரசு பணியையும் நான் ஏற்றுக்கொண்ட மதத்தையும் பிரித்துத்தான் பார்க்கிறேன். அரசுபணியில் மதகொள்கைகளையும் மதபிரசங்கத்தில் பதவி அதிகாரத்தையும் பயன்படுத்திய தில்லை. திணித்ததும் இல்லை. சுருங்கச் சொல்வதானால்......... அரசு பணியாகட்டும் பொது பணியாகட்டும் எதிலும் எனது நேர்மையில் நான் சமரசம்செய்துகொண்டதில்லை. இது எல்லோருக்கும் தெரியும். அதனால் எனது பதவி அதிகாரத்திற்குட்பட்ட பிரச்சனைகளில் சட்டத்திற்கு புறம்பாக நான் செயல்பட்டது கிடையாது. செயல்படப்போவதும் இல்லை. என்னிடம் இப்படி கேள்வி கேட்கிறீர்களே!. நானும் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்களிடத்தில் பதில் உண்டா? என்று யோசியுங்கள். இன்றைக்கு தலைமைச் செயலகத்திலுள்ளஅலுவலங்களிலும் மற்ற இடங்களிலுள்ள அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் இந்து கடவுள்களுக்கு பூஜைகளை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் அலுவலகப்பணியைத் துவங்குவதற்கு முன்பு பகிரங்கமாக இந்து கடவுள்களை வணங்கிவிட்டுத்தான் அவர்கள் மற்ற பணிகளையே கவனிப்பார்கள்.அலுவலகத்திலேயே இந்து கடவுள்களை வணங்கும் அதிகாரிகளையும், பணியார்களையும்இந்துக்கள் அல்லாதவர்கள் சந்திக்க வாய்ப்பு உண்டுதானே!. அந்தச் சூழலில் இவர்கள் நியாயமாக நடந்துக் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்னிடம் கேட்கும் இதே கேள்வியை அவர்களிடமும் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இன்னும் சொல்லப்போனால் மழை பொழிய வேண்டி பூஜை நடத்துகிறார்கள். அதில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துக்கொள்கிறார்கள். அனைத்து மதங்களும் இந்த நாட்டில் இருக்கிறது. இவர்கள் இந்து கடவுள்களை நோக்கிமட்டும் ஏன் பூஜை நடத்தவேண்டும் என்று அவர்களைப்பார்த்து கேள்வி கேட்டதுண்டா? இப்படி நான் நிறைய உங்களிடம் கேட்கமுடியும். இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு என் மத பிரசங்கத்தைப்பற்றி கேள்வி எழுப்பட்டும்.
கேள்வி: தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மத பிரசங்கம் செய்யும் நீங்கள், இந்து கடவுள்களை பிசாசு என்றும் பேய்கள் என்றும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாற்று மத கடவுள்களை கொச்சைப்படுத்துவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?.

பதில்: இந்து கடவுள்களை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்தின் கடவுளையும் நான் பேய், பிசாசுஎன்று விமர்சித்தது கிடையாது. அது எனது நோக்கமும் அல்ல. நான் முழுக்க முழுக்க கர்த்தரின் தூதுவனாக இருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமென கர்த்தர் எனக்கு கட்டளையிடுகிறாரோ அதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பிசாசுகளைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு அரசியல் கட்சி தனது பொதுக்குழு செயற்குழுவில் மாற்று கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சிப்பதில்லையா? அதை யாராவது கேள்வி கேட்க முடியுமா? இப்படியெல்லாம் என்னால் பேச முடியும். அதனால் நான் விமர்ச்சிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் எனக்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டி இவைகளை பிரச்சனையாக்குகிறார்கள். அதுப்பற்றி நான் கவனம் செலுத்தப்போவதில்லை.

http://www.maalaimalar.com/2012/09/19165728/bjp-black-flag-protest-condemn.html
மதபோதகராக செயல்படுவதாக புகார்: உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கருப்பு கொடி
மதபோதகராக செயல்படுவதாக புகார்: உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கருப்பு கொடி

2 comments:

  1. //தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். //

    கர்த்தரை நம்பி கிறித்துவர் என உண்மையை சொன்னால் கர்த்தரால் காப்பாற்ற முடியாதா?

    உண்மையான ஒரு தாழ்த்தப்பட்டவரின் வாய்ப்பை இப்படி திருடுதல் சரியா

    ReplyDelete
  2. http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post.html
    சாதாரணமா அப்பா எந்த ரெலீஜியனோ அந்த ரெலிஜியனைச் சார்ந்தவராத்தான் பிள்ளைகளையும் பள்ளிகள்ல பதிவு செய்வார்கள். உங்களுடைய தந்தையோ ஹிந்து. பிறகெப்படி உங்களுடைய மதம் கிறிஸ்துவன் என்று பதிவு செய்ய முடிந்தது?'

    'எதுக்கு ஃபாதர் இந்த குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கறீங்க? நா யாராயிருந்தாலும் என்னுடைய நோக்கத்தை சந்தேகிக்காதீங்க ஃபாதர்.' என்று அவர் எரிச்சலுடன் கேட்டதை தேவசகாயம் கண்டுக்கொள்ளவில்லை..

    'என்னுடைய கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை.' என்றார் பிடிவாதத்துடன்.

    வந்த அரசு அதிகாரி எழுந்து நின்றார். 'உங்க க்ராஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் எனக்கில்லை ஃபாதர். உங்களுக்கு விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. சிட்டியில எத்தனையோ சர்ச் இருக்கு. அங்க குடுத்துக்கறேன்.'

    தேவசகாயம் புன்முறுவலுடன் எழுந்து நின்றார். 'அப்படியே செய்யுங்கள் சார். சிறிய விஷயங்களில் நேர்மையற்றவன் பெரிய விஷயங்களிலும் நேர்மையற்றவனாகவே இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்று முழு ஹிந்துவாக இருங்கள் அல்லது முழு கிறிஸ்துவனாக இருங்கள். நான் ஹிந்து ஆனால் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதில் தவறில்லை. சாதி அடிப்படையில் அரசாங்க சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெயரளவில் அதாவது, சட்டப்படி நான் ஹிந்து, ஆனால் மனத்தளவில் கிறிஸ்துவன் என்று கூறி கிறிஸ்துவத்தையும் ஹிந்துத்வைத்தையும் இழிவு படுத்தாதீர்கள். You don't deserve to be either a christian or a hindu, goodbye' என்றார்.

    தேவசகாயத்தின் சாடலை சற்றும் எதிர்பார்க்காத அந்த அரசு அதிகாரி தலையை குனிந்தவாறு வெளியேறினார்.

    ReplyDelete