மனித வரலாற்றில் மிகப்பெரிய சமூக ஊடக மோசடி மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த ஒரு சினிமா பிம்பம் , நடிகர் விஜயின் மேலாளர் #ஜெகதீஸ் பழனிச்சாமி என்ற நபரால் "ரூட்" நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மோசடி தான் இது.
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை. #சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 6 மையங்களில் (Hubs) பரவியிருக்கும் 4000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டா கணக்குகள்.
நாள்தோறும் 7 கோடி மனங்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட ஒரு #உளவியல் போர் (Psychological Operation).ஒரு ஒட்டுமொத்த மக்கள் தொகையின் சிந்தனைப் போக்கையே இவர்கள் மாற்றி அமைத்துவிட்டனர்.இந்த மக்கள் சிந்திக்கும் திறனை அடகு வைத்தார்கள், அதற்கு மாறாக உணர்ச்சிகளுக்கே (emotional)முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
எப்போதும் விஜய் குறித்த விடியோக்கள், தகவல்கள்,உணர்வை தூண்டும் பிரச்சார பாடல்கள் என்று அது மட்டுமே ரீல்ஸ், வாட்ஸாப்ப் குழுக்கள் என்று உங்களை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அதுதான் உலகம் என்றும், ஆண்ட முதல்வரை ஏதோ #கொடூர_வில்லன் போன்றும் சித்தரித்து உங்கள் சிந்தனைகளை கொண்டு வந்தார்கள்.
அதன் விழைவு : ( படிக்கும், விஜய் ஆதரவு நபர்கள் மனசாட்சியோடு நிதானமாக புரிந்து கொள்ளவும் )
1. #இந்த Manipulate க்கு எதிராக கருத்து தெரிவித்த சொந்த சகோதரனையே, tvk ஆதரவு சகோதரன் மூர்க்க குணத்தோடு அடிக்கும் காட்சிகளை நானே நேரில் பார்த்திருக்கிறேன்..!
3. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை வீட்டின் உள்ளே சேர்க்காமல் வெளியே படுக்க வைத்த காட்சிகளை தமிழகம் கண்டது.
4. #விஜய் வெற்றி பெறவில்லையென்றால், நானும் எனது குழந்தைகளும் விஷம் தின்று தற்கொலை செய்வோம் என்று ஒரு பெண் சொன்னதை தமிழகம் கண்டது.
5. #Tvk க்கு வாக்களிக்காத தந்தையை ஒரு இளம்பெண் அடித்து உதைக்கும் கட்சிகள் வெளி வந்தன.
6. #மாநில வளர்ச்சி பற்றி அறிந்திராத விவரமில்லாத 5-10 வயதுடைய குழந்தைகள் கண்ணீரோடு விஜய் மாமாவுக்கு ஓட்டு போடு என்று பெற்றோரை கெஞ்சிய காட்சிகளை தமிழகம் கண்டது.
7. #என் கணவரை விடவும் விஜய் தான் எனக்கு புடிக்கும் என்று பொது வெளியில் பேட்டிகொடுக்கும் பெண்கள்.
8. #அவருக்கு பொண்டாட்டியா, கூட இருப்போம், என்கிற அறிவார்ந்த தமிழ் சமுதாய பெண்கள்.
9. #கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு கூட கிடைக்காத கண்ணீர்! பிரச்சார கூட்டங்களில் பெண்கள் கண்களிலிருந்து சாரை சாரையாக கண்ணீரோடு நின்ற பெண்களை தமிழகம் முதல் முறையாக கண்டது.
10.#மேலும் வெளியே தெரியாத எத்தனையோ பிரளயங்களை, பிரச்சனைகளை, பிரிவுகளை பல குடும்ப உறவுகளிடம் , நண்பர்களிடம் , அலுவலகங்களில் இப்படி manipulate செய்யப்பட்ட 'ஜோம்பிகள்' செய்திருக்கலாம்.
இன்று இவர்கள் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே #தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள்...!!
ஒரு சாதாரண வீடியோ பின்னணியில் ஏதோ ஒரு Emotion ஐ தூண்டும் பின்னணி இசை. இது போதும் இந்த மக்கள் மயங்க..!
எத்தனையோ மக்கள் எப்போதும் உண்மையிலேயே மக்களுக்காக வியர்வை சிந்தி உழைப்பார்கள். ஆனால் அதை பார்க்கிற மக்களுக்கு எந்த உணர்வும் வராது..!
ஆனால் எப்போதும் AC அறையிலேயே இருந்து விட்டு எப்பவாவது ஒரு மணி நேரம் வெயிலில் வந்து அதை ஒரு 30 வினாடி வீடியோவாக Cut பண்ணி பின்னணியில் ஒரு சோகம் இழையோடும் Bgm அல்லது பாடல் (Sample song #அந்த_ஆகாயம்_போதாத_பறவை) போட்டால் அதை பார்த்து அவன் எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான் என Emotional Attach ஆகிறார்கள்.
ஒருவர் கொள்கை கருத்தோடு பேசினால் அதை சிந்தித்து கூட பார்க்காத மக்கள் .இது எல்லாமே உண்மையில் #Emotional_manipulation என்பதை அறியாத அளவுக்கு இந்த தலைமுறை மாறி விட்டது.
இதை ஏதோ விஜய் வெறுப்பில் சொல்வதாக விஜய் ஆதரவாளர்கள் எண்ணலாம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல..!!!
அரசியல் ஒரு #சாக்கடைதான், ஆனால் இந்த அளவுக்கு திட்டமிட்டு மூன்றில் ஒரு பங்கு மக்களை எமோஷனல் பிளாக் மெயில் செய்து ஆட்சியமைக்கும் அளவுக்கு நினைத்து பார்க்கவில்லை...!!
75, 100 ஆண்டு கட்சிகள் தோல்வி,பொறாமை, ஆற்றாமை, ஜீரணிக்க முடியவில்லை என்று இதற்கும் பல ஏளன பேச்சுக்கள் சொல்லி கடந்து போவார்கள், "மக்கள் மன்றம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்".
#ஆட்சியர் அலுவலகம் முன்பு,தலைமை தபால் அலுவலகம் முன்பு,தாலுகா அலுவலகம் முன்பு என்று பல வருடங்களாக மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து கடும் வெயிலில் நின்று போராடியும், நாலுபேருக்கு நல்லது நடக்கட்டுமே என்று அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்த எங்களை போன்றவர்களுக்கு அதன் வலிகள் இருக்கத்தான் செய்யும்...!!
அதற்காக பழைய அரசியலை ஆதரிக்க கூட வேண்டாம். வருகைக்கு முன்பு குறைந்த பட்சம் மக்களுக்காக எதாவது போராடுங்கள், கண்டனங்கள் என்று மக்கள் மன்றத்தில் களமாடுங்கள், உங்கள் தொண்டர்களும் பக்குவபடுவார்கள், ஆனால் அதைவிடுத்து குறுக்கு வழியில் கும்பல்களை வைத்து மீடியா மூலம் ஆட்சியை பிடித்தது ஏற்று கொள்ள முடியாதது தான்..!!
( குறிப்பு : இன்று அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த ஜெகதீஸ் என்பவரின் ' ரூட் ' நிறுவனம் தான் இனி தமிழ்நாடு மீடியாக்களின் செய்திகளை தணிக்கை செய்யும் என்று அறிவிக்கபட்ட நகலை இணைத்துள்ளேன் )
மத்தியிலும் மீடியா ஆட்சி, மாநிலத்திலும் மீடியா ஆட்சி! நாட்டின் நாலாவது தூண் அதன் உறுதிதன்மையை இழந்து இறையாண்மைக்கு எதிராக வந்து நிற்கிறது..!
மணவாளக்குறிச்சி
https://www.facebook.com/story.php?story_fbid=27395676586735259&id=100001588590398&_rdr



No comments:
Post a Comment