Sunday, July 19, 2026

100 கோடி வசூல் புரோக்கருடன் வலம் வரும் அமைச்சர் ஸ்ரீநாத் - நக்கீரன்

 100 கோடி வசூல் புரோக்கருடன் வலம் வரும் அமைச்சர்

முதல்வரின் நெருங் கிய நண்பரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், தன்னுடன் புரோக்கரை வைத்துக் கொண்டு தனது துறையில் பல தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதாகக் கூறி 100 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்த விவகாரம், தூய சக்தியின் முகத்திரையை கிழித்துள்ளது. சென்னை அபிராமிபுரம் 4வது தெருவில், 11/6, கோவிந்தாலயா க்ரெஸ்ப்ராஸ் அப்பார்ட் மெண்ட்டில் மூன்றாவது மாடியிலுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்குவைத்து அமைச்சர் சொல்லும் முக்கியமான நிறுவனங்களுடன் டீல் பேசிவருகிறாராம் புரோக்கர் ரமேஷ். அதற்காகவே வருகின்றவர்களுக்கு அந்த அடுக்குமாடியின் தரைத் தளத்திலேயே, 8220736..என்ற செல் போன் எண்ணை கொ டுத்து அணுகச்சொல்லும் ஒரு நபர், வரக்கூடியவர் உண்மையாகவே நிறு வனத்தின் உரிமையாளரா என்று விசாரித்த பிறகே இந்த புரோக்கர் ரமே ஷிடம் கூட்டிச்செல்வாராம். கடந்த வாரம் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து, வின் பாஸ்ட் என்ற நிறுவனத்திடம், மீன்வளத் துறையிலுள்ள கட்டுமானப் பணிகளுக்கு உங்கள் நிறுவனத்தையே உறுதி செய்கிறோம் என்று டீல் பேசப்பட்ட கையோடு, 25 கோடி ரூபாய் அட்வான்ஸாக கைமாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை தொடர்பு கொண்ட புரோக்கர் ரமேஷ், "தொழில் துறை அமைச்சரும் நம்ம கையில்தான்.... உங்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடித்து விடலாம்'' என்று வின்பாஸ்ட் நிறுவனத்திடம் கூறியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சரிடம் புரோக்கர் ரமேஷ், "வின் பாஸ்ட் நிறுவனம், தொழில்துறை அமைச்சரையும் கையிலெடுக்கத் திட்டமிடுகிறார்கள். அதை நாம் செய்துகொடுத்தால் நமக்கு மேலும் பலன் கிடைக்கும்' என்றிருக்கிறார். ஏற்கனவே தொழில் துறை அமைச்சருக்கு ஹவாலா பணத்தை மாற்ற சில இடங்களில் முயன்றதாகவும், அதனை செய்து கொடுக்கமுடியுமா என்று தன்னிடமே அவர் தரப்பினர் வந்தார்கள் என்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் கூறியவர், "அதை நாம் செய்துகொடுத்தால் அந்த அமைச்சரும் நம்ம பக்கம்தான்! அந்த வேலையை நான் கனகச்சிதமாக பார்த்துக்கொள்கிறேன், உங்களுக்கு கவலைவேண்டாம். இதற்காக ஒரேயொரு வேலையை மட்டும் நீங்க செய்யணும்... தொழில் துறை அமைச்சரிடம் பேசி என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தால் போதும்' என்று காய்நகர்த்த, மீன்வளத்துறை அமைச்சரும், "நம்ப தம்பி தான்!' என்று அறிமுகம் செய்துவைத்தபின் அடுத்த பணியை தொடங்கிவிட்டாராம். அதேபோல மீன்வளத்துறையில் என்ன நடந்தாலும் உடனடியாக தகவல் அமைச்சருக்கு சென்றடைய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு வாட்சப் குரூப் உருவாக்கியுள்ள நிலையில், அந்த குரூப்பிலும் இந்த புரோக்கர் ரமேஷின் எண்ணை அமைச்சர் இணைக்கவே, அதைவைத்து அத்துறையில் டிரான்ஸ்பருக்கான வசூலிலும் களமிறங்கியுள்ளாராம். ஆரம்ப காலகட்டங்களில் உயர்தர கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதன் மூலமாக தன்னை பெரும்பணக்காரராகக் காட்டிக்கொண்டு, முக்கிய வி.ஐ.பி.க்கள் இருக்கும் இடங்களாகப் பார்த்து பழக்கம் ஏற்படுத்தி, கடந்த ஆட்சியிலுள்ள அமைச்சர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதன் மூலமாக வாரியப் பதவி பெற்றுத்தருவதாகவும், அறநிலைத்துறையில் அறங்காவலர் பணி பெற்றுத்தருவதாகவும், இப்படி ஏகப்பட்டதாக பணம் வசூல் செய்து ஏமாற்றுவதே இவருடைய வேலையாக இருந்துள்ளது. இப்படி விலையுயர்ந்த கார்களை அவருக்கு தருவது யார் என்று பார்த்தால், ஒரு மார்வாடியான கமலேஷ் தான். இந்த கமலேஷ் வேறு யாருமில்லை, டி.டி.வி.யிடம் இரட்டை இலை சின்னத் தை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி வழக்கில் கைதானாரே சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா பணத்தை மாற்றிக்கொடுத்து அவருடனே திகார் சிறையில் இருப்பவர்தான் இந்த கமலேஷ். கமலேஷ் நண்பர்தான் இந்த ரமேஷ். ஆக, நண்பர் கமலேஷ் விட்டுச்சென்ற பணியை தற்போது ரமேஷ் செய்துவருகிறார். அதே போலதான் தற்போது மீன்வளத் துறை அமைச்சரையும் டிபென்டர் காரை வைத்து மயக்கி, பல விசயங்களைச்சொல்லி அவருக்கு ஒரு பெரும் தொகையான ஹவாலா பணத்தை மாற்றிக்கொடுத்து அமைச்சரிடம் நெருக்கமாகி, தற்போது வசூல் மன்னனாக வலம்வருகிறார். இந்த கார் இப்போது வரை அஜய்குமார் என்பவர் பெயரில் தான் இருந்து வருகிறது. இதுகுறித்து ரமேஷிடம் கேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லி மறைக்கப் பார்த்தார். இந்த ஒட்டுமொத்த தகவலையும் ஆதாரப்பூர்வ மாக அமலாக்கத்துறை கனகச்சிதமாக எடுத்து வைத்து வருகிறதாம். ஆளும்கட்சி அமைச்சர் குறித்து அமலாக்கத்துறை ஆதாரங்களைத் திரட்டுவது, முதல்வர் மீது வைக்கும் பொறி யாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வர் விஜய்க்கு பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. தூய சக்தி என்று மார்தட்டிக்கொண்ட த.வெ.க., அமலாக்கத்துறை விசாரிக்கும் தகவல் கசிவதால் தீய சக்தியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. - நக்கீரன்

No comments:

Post a Comment

TVK appoints IAS Officer for TNPCB Member Secretary

  Tamil Nadu’s appointment of an IAS officer with MBBS background as Member Secretary of the @Tnpcbofficial has sparked questions over com...