Friday, July 31, 2026

அரேபிய முஸ்லிம் அப்பீஸ்மென்ட் பாலிடிக்ஸ்; கர்நாடகா சம்பவம்

 இஸ்லாமிய அப்பீஸ்மென்ட் பாலிடிக்ஸ், இஸ்லாமியர்கள் தாஜா அரசியல் எந்தளவுக்கு இந்தியாவில் ஊடுருவியிருக்கிறது என்பதற்கு கர்நாடகாவில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டலாம்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திரு நாகேந்திரா. மருத்துவர். அவர் சந்தேகப்படுபடியான சில நபர்களை பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார். சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய பங்களாதேஷிகள்.
நியாயமாக பார்த்தால் காவல்துறை சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து அவர்களை திருப்பி அனுப்பும் வேலையை பார்க்க வேண்டும். இதுதான் நடைமுறை. இதற்கான SOP நாடு முழுவதும் இருக்கிறது.
ஆனால் கர்நாடக காவத்துறை என்ன செய்தது தெரியுமா? சட்டவிரோத குடியேறிகளான பங்காளதேசிகளிடம் புகார் பெற்று டாக்டர் நாகேந்திராவை கைது செய்தது. அதுவும் அவர் மீது கிரிமினல் குற்றப்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி மாநில அரசை, காவல்துறையை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளிடம் புகார் பெற்று சொந்த நாட்டை சேர்ந்தவரையே கைது செய்வீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால் புகார்தாரரின் முகவரி என்று பங்களாதேஷ் முகவரியை போட்டிருக்கிறது காவல்துறை. பங்களாதேஷில் இருந்து புகாரை பெற்று இந்தியர் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள். இது இந்தியாவா, இல்லை பங்களாதேஷில் பிரான்ச்சா என்று தெரியவில்லை.
காங்கிரசின் தாஜா அரசியல் எந்தளவுக்கு முற்றியிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சி. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்காக தாஜா செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் சட்டவிரோத குடியேறிகளான பங்களாதேஷ் முஸ்லீம்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கும் ஆதரவாக இருக்கின்றன. அதுதான் மதச்சார்பின்மை என்று பாடம் வேறு எடுக்கிறார்கள்.
அதை எதிர்ப்பவர்களை இஸ்லாமிய வெறுப்பு என்ற வட்டத்துக்குள் அடைக்கிறார்கள்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவளித்தால் இன்று ஐரோப்பாவின் நிலைதான் நாளை இந்தியாவுக்கும். பிரான்ஸ் எப்படியிருக்கிறது என்று பாருங்கள். நேற்று ஸ்பெயினில் என்ன நடந்திருக்கிறது பாருங்கள். எங்கெல்லாம் இடதுசாரிகள் ஆள்கிறார்களோ அங்கெல்லாம் சட்டவிரோத குடியேற்றம் படுவேகமாக நடக்கிறது.
சட்டவிரோத குடியேறிகளுக்கு சொந்த நாட்டை கூட்டி கொடுக்கும் வேலையைத்தான் உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் செய்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் நடந்த சம்பவம் நமக்கான உதாரணம். இஸ்லாமியர்களின் ஓட்டு மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டது காங்கிரஸ்.
காங்கிரஸ் - இந்தியாவுக்கே கேடு

No comments:

Post a Comment

Joy Alukkas is getting TVK ₹755 crore gold ring tender -TNMSC buying is against rules & Scam

Joy Alukkas is getting the ₹755 crore gold ring tender. Interestingly, it quoted just 1 paisa for making and other charges, excluding the go...