கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் ஒரு உண்டியலை எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது உறுதியானது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகாரின் பேரில் பூசாரி உட்பட 4 பேரையும் உக்கடம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பாலசுப்பிமணியன், சரவணன், பிரதீப்குமார்,கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும், பணம் திருடப்பட்டதைக் கண்டறியாமல் ஆஜாக்கிரதையாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோவில் செயல் அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ஆகிய 8 பேரையும் சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.





No comments:
Post a Comment