Thursday, July 16, 2026

மதுரை முகாலய சுல்தான்களின் கோரப் படுகொலைகள்

 மாறவர்மன் குலசேகரனுக்கு சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் என இரு மகன்கள்..இதில் சுந்தர பாண்டியனே பட்டத்து ராணிக்கு பிறந்து அரியணைக்கு உரித்தானவன்..ஆனால் தகுதி அடிப்படையில் வீரபாண்டியனுக்கு பட்டம் கட்டி வைத்தான் குலசேகரன்..வழக்கத்துக்கு மாறாக தன் தந்தையையே கொன்று பொயு.1310 ல் அரியணை ஏறினான் சுந்தர பாண்டியன்..இதைப் பொறுக்காது படையைத் திரட்டி சுந்தரபாண்டியனை விரட்டி மதுரையம்பதியை கைப்பற்றி பாண்டியனாக முடிசூடினான் வீரபாண்டியன்..நிற்க..

பொயு.1307 லிருந்தே டெல்லி சுல்தானகத்தின் பிரதிநிதியாக கில்ஜியின் கோரக் கரமான மாலிக்காபூரை வைத்து தென்னிந்தியா மீது தீவிர படையெடுப்புகளை துவக்க ஆரம்பித்துவிட்டார்கள்..அதன் முதல் ஆரம்பம் தேவகிரி யாதவ அரசின் மீதான தாக்குதல் அடுத்தது, காகதீய அரசின் மீதான தாக்குதல் என இந்து மன்னர்களை கப்பம் கட்ட வைக்க யுத்தம் நிகழ்ந்தது.. இதே நிலையில் மாலிக்காபூரிடம் சுந்தரபாண்டியன் உதவி கேட்டான் என ஒரு கருதுகோள் உள்ளது..ஆனால் இதை அதன் சமகாலத்தில் பதிவு செய்த அமீர்குஸ்ரு எங்கேயும் குறிப்பிடவில்லை..மாலிகாபூர் கொடுத்த உத்தரவாதம் என்ன? செய்த உதவியென்ன அதை யாரும் அறியார்.. மாலிகாபூர் பழம்பெரும் மதுரையை தன் வழக்கமான யுத்தபாணியில் தாக்கினான்..வீரபாண்டியன் தலைநகரை விட்டு பல்வேறு இடங்களில் தனது படைகளை வைத்து மாலிக்காபூருக்கு எதிரான யுத்தத்தில் அதிரடி காட்டி வந்தான்.ஆனால் வாரிசுரிமை யுத்தத்தில் பலகீனமாக இருந்தது பாண்டியர் படை என்பது உண்மையாக இருக்கலாம்.. வீரபாண்டியன் தன் படையுடன் "பீர்தூல்" என்ற பகுதியில் இருந்ததாக அமீர்குஸ்ரு சொல்கிறார்..பீர்தூல் என்பது விருதாச்சலமாக இருக்கலாம் என ஒரு கருதுகோள் உள்ளது..இந்த பீர்தூல் எது என்ற விவாதம் உள்ளது..அது விருத்தாச்சலம் அல்லது திருப்பட்டூர் அருகே அல்லது திருச்சிக்கும் - கண்ணணூர் என்கிற சமயபுரத்திற்கும் இடையில் பாண்டியன் அமைத்திருந்த பாசறை என்ற வேறுபட்ட பார்வைகள் உள்ளன.. ஆனால், இந்த பீர்தூலில் இருந்த 20000 முஸ்லீம் வீரர்கள் தன் கடமையை மறந்து டெல்லி சுல்தானகத்தின் தலைமையை ஏற்று மாலிக்காபூர் படையில் இணைந்தனர் என தெளிவாக அமீர்குஸ்ரு பதிவு செய்துள்ளார்.இதை K.K.பிள்ளையும் தனது நூலில் விரிவாக கூறியுள்ளார்.. இதன் பிறகுதான் திருவரங்கம், திருப்பட்டூர், சிதம்பரம் என பல கோவில்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினான் மாலிக்காபூர்..சுந்தர பாண்டியன் மீதும் அவன் தாக்குதல் நடத்தவே மீண்டும் மதுரை சென்றால் ஆனால் அவன் அங்கே இல்லை..கருவூலமும் இல்லை என்ற பின் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மீது தாக்குதல் எல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு..இந்த தாக்குதல் நடந்து 25 வருடங்களில் சங்கத் தமிழ் வளர்த்த பாண்டியர்களின் புகழ்பெற்ற மதுரை மதுரை சுல்தானியர்களின் ஆட்சிக்கு கீழ் சிக்கி சின்னாபின்னமானது.. மாலிக்காபூர் எதோ பங்காளிச் சண்டையை தீர்க்க வந்தவன் போலவும், மாலிக்காபூர் அணியில் சேர்ந்தவர்கள் சாட்சிகள் போலவும் உருட்டுவது வெட்கக்கேடு..

No comments:

Post a Comment

Dravidianist Govts' HR&CE Dept Buried A 1966 Supreme Court Verdict And Let 49 Acres Of Madurai Meenakshi Temple Land Stay With RC Church

Dravidianist Govts' HR&CE Dept Buried A 1966 Supreme Court Verdict And Let 49 Acres Of Madurai Meenakshi Temple Land Stay With RC Ch...