செட்டில்மென்ட் ஆவண ஆதாரத்துடன் கோவில் நில மோசடி அம்பலம்!
கோவில் நிலங்களைப் பயன்படுத்தி,அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கை(Share) இறைவனுக்கு(Deity)தவறாமல் செலுத்துவோம் என்ற அசைக்க முடியாத நிபந்தனை மற்றும் வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே இந்த நிலங்கள் வழங்கப்பட்டன.இதற்கான தெளிவான ஆதாரங்கள் செட்டில்மென்ட் ஆவணத்தில் (Settlement Record)உள்ளன.ஆனால் இன்று,சில மோசடி சட்டங்களையும் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு"பட்டா கிடைத்து விட்டது"என்று கூறுவது அப்பட்டமான பச்சை துரோகம்! நமது முன்னோர்கள் உழைப்பில் இறைவனுக்காகக் கொடுத்த 'தேவதாயம்'நிலத்தை 'சர்வீஸ் இனாம்' என்று வாய்க்கூசாமல் பொய் சொல்லி அபகரிக்கப் பார்க்கிறார்கள்.இந்தத் துரோகத்திற்கும் மோசடிக்கும் துணைபோனவர்கள் யாராக இருந்தாலும்,அறநிலையத்துறை அமைச்சர் S.ரமேஷ் ஆக இருக்கட்டும் அல்லது முதலமைச்சர் C.ஜோசப்விஜய் அவர்களாக இருக்கட்டும்,அவர்கள் செய்த இந்த மகா பாவத்திற்கு கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,மீண்டும் தர்மமே வெல்லும்!

No comments:
Post a Comment