நான் வேலைசெய்த சர்க்கரை ஆலை முதலில் மருதப் பிள்ளையோடையது. மருதப் பிள்ளையிடமிருந்து தியாகராஜ முதலியார் வாங்கினார். தியாகராஜ முதலியார்ட்ட இருந்து SNJ குழுமம் வாங்கியிருக்கு. Aranga Gunasekaran
SNJ தன்னை திமுக கட்சியின்னு காட்டிக்குதே ஒழிய முதலியாரா பிள்ளைமாரா நாடாரா தேவரா வன்னியரா என்று காட்டிக்கொள்வது இல்லை. அவர்களது உயர் நிர்வாக குழுவில் உள்ளூர் ஆண்ட சாதி பைல்வான்களை போடுவதில்லை. அவங்களவா அதிகாரிகளை போட்டுக்கிறாங்க.
கடைநிலை ஊழியர்களை உள்ளூர் பள்ளன்பறையனை போட்டிருக்காங்க. பூராப்பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள். நடுத்தர அதிகாரிகள் மட்டும் கம்பெனி ஊழியர்கள்.
உன்னை யார்ரா இதெல்லாம் கேட்டாங்க. சம்மந்தமில்லாமல் நீ பாட்டுக்கு உளருரேன்னு படிக்க நேருரவங்க கேட்கத்தோனும்.
நம்ம தோழர் Raj Kumar என்ன சொல்ராருன்னா உற்பத்திக் கருவிகளை யாரு வச்சிருக்காணோ அவன் முதலாளி. உற்பத்திக்கருவி சொந்தமா இல்லாமல் முட்டியடித்து ( உழைத்து ) கஞ்சிக்குடிக்கிறவன் தொழிலாளி என்று மார்க்சியம் வரையறுக்குதுன்னு சொல்ராரு.
எனக்கு நல்லா புரியுது நான் ஏற்றுக்கொண்டதை எழுதுறேன்.
திராவிட கம்யூனிஸ்ட் உயர்திரு Murugai Mainthan அதுக்கு என்ன சொல்ராருன்னா....
உற்பத்தி முறையே பார்ப்பனீய உற்பத்தி முறை. அது எந்த ஜாதிக்காரன் உற்பத்திக் கருவியை வச்சிருந்தாலும் அது பார்ப்பனீய உற்பத்திக்கருவி தான்ங்குறாரு.
ரைட்டு இவரு வரயறைப்படியே பார்ப்பனீய உற்பத்திமுறைன்னு வச்சுப்போம். கரும்பை பிழியும் மில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஜெர்மனியிலே பார்ப்பனீய உற்பத்திமுறை இல்லைங்களே பழநிவேலு. அது ஐரோப்பாவுல தானே இருக்கு. அப்புறம் ஜூஸை கொதிக்க வைக்கிற நவீன தொழில் நுட்பம் இலண்டனை சேர்ந்தது. அதுவும் பார்ப்பனீய உற்பத்தி முறையாடான்னு கேட்க தோனுது.
இதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் ஆசிய உற்பத்திமுறைன்னு மார்க்ஸே இந்திய பார்ப்பனீய உற்பத்திமுறையை சொல்லியிருக்கார்ன்னு பரோட்டா சூரி மாதிரி கணக்கை ஆரம்பத்திலே இருந்து ஆரம்பிப்போம் என்கிறார்.
இந்த பார்ப்பனீய உற்பத்தி முறையில் ஒரு பார்ப்பானின் வேலை என்னன்னா ஆலை வளாகத்திலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அது பள்ளன்பறையனால் சுத்தம் செய்யப்பட்டிருக்கும். ஏழு மணிக்கு வருகிற பார்ப்பான் கோயில் வாசலில் இருக்கும் டேப்பை திறந்து இரண்டே இரண்டு குடம் தண்ணி பிடித்து கழுவி விட்டுட்டு பறித்து வைத்திருக்கிற பூவை ஒவ்வொன்னா சாமி மேல கடாசிட்டு ஏதோ மந்திரம் சொல்லிட்டு கட்டி வச்சிருக்கிற மாலையை சாமி மேல போட்டுட்டு போய்டுவார்.
இனி மறுநாள்தான் இங்கூ வேலை.
சர்க்கரை உற்பத்தியில் ஒரு பார்ப்பானின் வேலை இதுதான்.
முதாலாளியிடத்தில் இருக்கும் சூத்திர நிர்வாகித்தான் அன்றைக்கு எவ்வளவு கரும்பு அரைக்கணும். வரும் சர்க்கரை எந்த தரத்தில் இருக்கணும்ன்னு திட்டம்போடுவார். இப்படி திட்டம்போடும் சூத்திர அதிகாரிக்கு ஆட்டுக்குடல் கொழம்பு ரொம்ப பிடிக்கும் பழனிவேல்.
அவ் டூ ஐ டெல் யூ பழநிவேல். -பார்ப்பனீய உற்பத்தி முறைன்னு ஒன்னு இல்லைய்யா இல்லை.
புளிக்கொழம்பு வைக்கும்போது கொஞ்சம் வெல்லம் போடுவதை வேணும்ன்னா பார்ப்பனீய உற்பத்தி முறை என்று சொல்லுலாம்.
அது ஏன் போடுராங்கன்னு ஆய்வுப்பண்ணினால் புளியும் உப்பும் அதிகமா ஆகிடுச்சுன்னா அதை நியூட்ரல் பண்ணுகிற பப்பர் ஏஜெண்ட்டாதான் அதை பயன்படுத்துராங்க என்பது புரிஞ்சிடும்.
உற்பத்தியிலேயே இல்லாதவன் பெயர்ல ஒரு உற்பத்திமுறை என்ற பெயர் வைத்த அறிஞர் நீதான் பழனிவேல்.
அவனுங்களே சொல்றானுங்க மழை வருதான்னு பார்ப்பான். புயல் வருதான்னு பார்ப்பான். அதனாலதான் அவனுங்க பார்ப்பானுங்கன்னு.
நீதான் பார்ப்பனீய உற்பத்திமுறைன்னு ஒரு நல்ல பெயர் வச்சி உட்டுருக்கே.
உன்னை அவனுங்க பார்த்தானுங்கன்னா கட்டிப்பிடித்து ஒரு உம்ம்மா தருவானுங்க.
எப்பூடிடா எங்களுக்கு சம்மந்தமே இல்லாத பெயரில் ஒரு உற்பத்தி முறைன்னு பெயர் வச்சேன்னு முத்தம் தருவானுங்க.
உண்மையிலியே நீ முருகனின் மைந்தன்தான்....
நன்றிங்க தோழர் வி.சின்னத்துரை

No comments:
Post a Comment