Sunday, August 23, 2026

பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறவினர்களை தற்காலிக டிரைவர்களாக வைத்திருக்கின்றனர்.

 பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (பொது) ஓட்டுநர் ரகுபதி கடந்த 2025 ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

அதுமுதல் இன்று வரை பொதுப்பணித்ததுறையின் தலைமை அதிகாரிக்கு நிரந்தர ஓட்டுநர் நியமிக்கபடவில்லை. முதன்மை தலைமை பொறியாளராக மணிவண்ணன் இருந்த போதும் அவரும் தனது வேண்டப்பட்ட நபரை தற்காலிக டிரைவராக நியமித்துக் கொண்டார். அவர் பணியிட மாற்றத்திற்கு பிறகு தற்போது புதிய தலைமை பொறியாளராக தற்போது செந்தில் உள்ளார். மூன்று நபர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள், இருந்தும் அந்த பணியிடத்திற்க்கு ஓட்டுநர் யாரையும் பணியமர்த்தபடவில்லை, தற்போது வரை அந்த இடத்தில் தினக்கூலி ஊழியர் தான் வாகனம் இயக்குகிறார், பலமுறை சம்மந்தப்பட்ட நபர்கள், மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (பொது) அவர்களிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.. பலமாவட்டங்களிலும் இதே நிலைதான் அங்கு எல்லாம் ஓட்டுநர்கள் இருந்தும் உபயோகபடுத்தவில்லை. லஞ்சம் வாங்கினால் பொதுப்பணித்துறை நிரந்தர டிரைவர்கள் மாட்டிக் கொடுத்து விடுவார்கள் என்கிற பயத்தில் தனது உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களை அதிகாரிகள் நியமித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அனுபவம் இல்லாத தினக்கூலி ஊழியர்களை வைத்து வாகனம் இயக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி என்றால் அரசுக்கு எவ்வளவு பணம் வீண், எங்களுக்கு தினக்கூலி ஓட்டுநர்கள் தான் எல்லாம் பணிக்கும் வசதியாக உள்ளது என்c,(எல்லாபணிகள் என்றால் என்ன?),. நேர்மையான ஆட்சி, தூய்மையான ஆட்சி, சிக்கனமான ஆட்சி என்று கூறும்,, தமிழக முதலமைச்சர் என்ன நடவடிக்கைஎடுக்கு போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.்.

No comments:

Post a Comment

பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறவினர்களை தற்காலிக டிரைவர்களாக வைத்திருக்கின்றனர்.

  பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (பொது) ஓட்டுநர் ரகுபதி கடந்த 2025 ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு...