Thursday, January 21, 2021

ECI சர்ச் பரம்பரை பேராயராய் எஸ்ரா சற்குணம் மகள் கதிரொளி மாணிக்கம்- பைபிள் விரோத செயல்

பேராயர் எஸ்ரா சற்குணம் நடத்தும் சர்ச்சை தன் பரம்பரையே உரிமை ஆக வேண்டும் என மகள் கதிரொளி மாணிக்கம் என்பவரை நியமித்து உள்ளர், அவர் 3 முறை திருமணம் ஆனவர் என பலவற்றை சர்ச் Jesus Saves Ministries பேராயர் காட்ப்ரே நோபுள் காணொளி
1 கொரிந்தியர் 14 :34 கிறிஸ்துவ கூட கூச்சல் சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். .. எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.
1 தீமோத்தேயு 2:  9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். 11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
பேராயர் எஸ்ரா சற்குணம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் கிறிஸ்துவ கதை வணக்கத்தில் மதவெறியின் உச்சம், பல நேரங்களில் திட்டமிட்டு மனித நேயமின்றி பொய்களையும் அருவருக்கத்தக்க வாகியிலும் பேசுபவர். கடந்த 100 ஆண்டுகளில் கிறிஸ்துவர் கிளப்பிய பொய்களை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மை ஆகாது..
பேராயர் எஸ்ரா சற்குணம் பொதுவெளியிலும் ஏன் தொலைக் காட்சி காளொளிகளும் பேசுவதை கேட்டால் இவர் ஏன் இன்னும் கைது செய்யப் படவில்லை, இவர் எப்படி பிஷப் என அழைக்கப்படுகிறார், இவர் ஒரு அரசியல் புரோக்கர் போலவும், திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர் போலவும் பேசுவார்

பேராயர் எஸ்ரா சர்குணம் மெடிக்கல் காலேஜ் மாணவர்களிடம் டொனேஷன் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி சிபிஐ நீதிமன்றம் ரூபாய் 7 கோடி அபதாரம் செலுத்த ஆணை மற்றும் கிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்து வரும் மூன்று கணவர்களை உடைய பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கத்திற்கு பேராயர் பதவி? கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை..

பேராயர் எஸ்ரா சற்குணம் மெடிக்கல் காலேஜ் மாணவர்களிடம் டொனேஷன் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி பெற்ற வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என்று
அறிவித்து ரூபாய் 7 கோடி பணத்தை செலுத்த சிபிஐ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அவர் பணம் அடைக்கவில்லை. நான்காவது முறையாக கடந்த அக்டோபர் மாதம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும்
பேராயர் எஸ்ரா சர்குணம் தமிழ்நாட்டின் திமுக கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவரும். மேடையில் கலைஞரின் அருகே நாற்காலியில் அமரும் செல்வாக்குப் பெற்றவரும், என்பது எல்லாருக்கும் அறிந்த உண்மையே. பேராயர் எஸ்ரா சர்குணத்திற்கு அதனால் தானோ அரசியல் புத்தியும் அவருக்குள் புகுந்து விட்டது, இதனால் அவர் ஆவிக்குரிய ஜீவியத்தை இழந்து போனார் என்று ECI திருச்சபை மக்கள் புலம்புகின்றனர். மேலும்,
பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கு இரண்டு மகள்கள் உண்டு, அதில் ஒரு மகள் கதிரொளி மாணிக்கம். அப்பாவின் அரசியல் புத்தி மகள் கதிரொளி மாணிக்கத்தையும் ஆட்கொண்டது.ECI திருச்சபைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் நிலங்கள் அளவில்லாமல் பெருகி இருக்கின்ற காரணத்தால்,ECI திருச்சபைகளின் சொத்துக்கள் மற்றவர்களின் கைகளுக்கு போய்விடாமல் இருக்க தன் மகள் கதிரொளி மாணிக்கத்தை அவசரமாக பேராயர் கமிசரி என்ற பதவியில் அமர்த்தினார். தன் மகள் முன் கோபக்காரியும் உடைகளை மாற்றுவது போல கணவர்களையும் மற்றும் பலவீனமானவர் என்பதை அறிந்தும், அந்தப் பதவியை மகள் கதிரொளி மாணிக்கத்திற்கு கொடுத்தார். மேலும்,கிறிஸ்துவ மத சட்டத்தின்படி மூன்றாவது திருமணம் செய்தவர் எப்படி பேராயர் பதவியில் அமரலாம் என்று ECI திருச்சபை மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளும், கோபங்களும் எழுந்தன
இந்த சூழ்நிலையில் ECI திருச்சபைகளின் மூத்த ஆயர்கள் ஒன்றுகூடி ,பேராயர் எஸ்ரா சற்குணத்திடம் கதிரொளி மாணிக்கத்தை திருச்சபையில் இருந்தும், பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார்கள் மேலும் கதிரொளி மாணிக்கத்தைப் பற்றி திருச்சபைமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்று கூறியிதற்கு பேராயர் எஸ்ரா சற்குணம் காது கேளாதவர் போல் இருந்தார்.
மேலும் ECI திருச்சபையின்அதிகாரபூர்வமான நிருபம் பத்திரிக்கைக்கு கதிரொளி மாணிக்கத்தை தலைமை ஆசிரியர் பொறுப்பை கொடுத்தார் .உடனே
மனசாட்சியுள்ள மூத்த ஆயர்கள் ,4 பக்க துண்டு பிரதி அச்சிட்டு எல்லா தலைவர்களுக்கும் அனுப்பி இனி கதிரொளி மாணிக்கம் எந்த சபையிலும், எந்த நிகழ்ச்சியிலும் அழைக்கக்கூடாது என்று திருச்சபை
கமிட்டியாக தீர்மானம் நிறைவேற்றி, அதை மினிட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்து, தலைமைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அதில் பெண்களுக்கும் ,வாலிபர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர்
இப்படி சாட்சி கெட்ட நிலையில் நம் ECI திருச்சபை எங்கும் பிரவேசிக்கக் கூடாது என்று ஏகமனதாக கையெழுத்திட்டு அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.
இனி, ECI திருச்சபைகளின் நிலை எப்படி இருக்கப்போகிறது?
ஆரோனைப் போல் கனமான ஊழியத்தின் பொறுப்பை கர்த்தர் பேராயர் எஸ்ரா சற்குண அனுமதித்தார் ஆனால் மகளின் மேல் உள்ள கள்ள பாசத்தால் சாட்சியிழந்து நிற்கிறார். இந்த செய்தி கடந்த செப்டம்பர் மாதம் 2020-ல் ஜாமக்காரன் பத்திரிகையில் வெளிவந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கிறிஸ்தவத்தின் புனிதத்தை கெடுத்து வரும் பட்டியலில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ,நிறுவனர் மோகன் சி லாசரஸ், தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் வின்சென்ட் செல்வகுமார், தன்னைத்தானே "சாது" என்று சொல்லிக்கொள்ளு ஏஞ்சல் டிவி நிறுவனர் செல்வராஜ் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவத்தை சீரழித்து வரும் பட்டியலில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் மூன்றாவது கணவரை உடைய கதிரொளி மாணிக்கத்தின் செயல்பாடுகள் கிறிஸ்தவ மக்களை பொதுமக்கள் மத்தியில் தலைகுனிய வைத்தது பெரும் வருத்தத்தை அளிக்கிறது .

 




 

No comments:

Post a Comment

2026 TN Assembly election result region wise

Results by region Region Seats TVK SPA AIADMK+ Northern Tamil Nadu 69 44 8 17 Western Tamil Nadu 68 27 17 24 Southern Tamil Nadu 51 25 23 3 ...