Tuesday, January 26, 2021

பாதிரி ரெவ. ஜான் கென்னடி காதலித்து கற்பழித்து ஏமாற்ற துணை போகும் ஆர்சி சர்ச் & போலிஸ்

சென்னை சித்தாலபாக்கத்தில் உள்ள கத்தோலிக்க புனித அந்தோணியார் கூச்சல் கூட சர்ச் பாதிரியாக வந்த ரெவரண்ட்.ஜான் கென்னடி, சர்ச் அருகே வசித்து தனக்கு சாப்பாடு அனுப்பிய வீட்டு பெண்ணை மயக்கி திருமணத்திற்கு உறுதி கூறி செக்ஸ் அனுபவிக்க அப்பெண் கன்னியாகவே கர்ப்பமானாள்.
6 மாத கர்ப்பம் வரை பாதிரி தொடர்ந்து ஏமாற்ற சற்றே கடுமையாக பேச, கரப்பக் குழந்தையைக் கொல்ல நான் மாத்திரை தருகிறேன், செத்து விழும் குழந்தை புதையுங்கள் என்றானாம் ரெவரண்ட்.ஜான் கென்னடி.
அந்தக் குடும்பம் சர்ச் மேலிடம் செல்ல நெமிலிச்சேரி பாதிரி ரெவரண்ட்.இமானுவேலிடம் செல்ல, அவர் குழந்தையை பெற்றுவிடு, பின்னர் நான் ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்க உதவுகிறேன் எனவும், அந்த கற்பழிப்பு பாதிரிக்கு ஆதரவாகவே பேசினாராம்.
செங்கல்பட்டு டயோசிஸ் நீதிநாதனிடம் எழுத்துப் புகார் கொடுத்தனராம். நண்பர் மூலம் திருச்சி பாதிரியார் நேசமணியிடமும் புகார் தந்தனராம், ஆனால் சர்ச் பாதிரியால் கற்பழிக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்கு உதவ யாரும் வரவில்லை.

இரண்டு வாரம் பின்பு சர்ச் அட்வகேட் செந்தமிழன் சிவா என்பவர் புகாரை வாபஸ் வாங்கும்படி  பணம் தருவதாக ஒரு கும்பலோடு வந்து மிரட்டி சென்றுள்ளார்.
மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்து எப்.ஐ.ஆர் போட்டுள்ளனராம். நடவடிக்கை இல்லை. செப்டம்பர் மாதம் 1ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. டி.என்.ஏ.டெஸ்ட் எடுக்கப்பட்டதாம்
போலிஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. பத்மா அபலைப் பெண் மீது வழக்கு போடுவேன் என சர்ச் தூண்டுதலில் மிரட்டுகிறாராம்.
நக்கீரன் பத்திரிக்கை விசாரணையில் - ரெவ.ஜான் கென்னடி தாற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அந்த கற்பழிப்பு பாதிரி கைதில் தப்பிக்க ஜாமின் பெற்றுள்ளானாம்.
சர்ச் கற்பழிப்பு பாதிரி பின்னால் உள்ளது, போலிசு சர்ச் பின்  கற்பழிப்பு பாதிரியைக் காப்பாற்ற உதவுகிறது. 

No comments:

Post a Comment

ஜேப்பியார் எஜுகேஷனல் டிரஸ்ட் செம்மஞ்சேரி 91.04 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பு -மீட்குமா

Jeppiaar Educational Trust v. The Secretary To Government (மெட்ராஸ் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு - Writ Appeal No. 3094 of 2003, தீர்...