Thursday, January 7, 2021

தமிழர் பண்பாட்டை அழிக்க பல நூறு கோடிகள்- கிறிஸ்துவ மதமாற்ற கருவிகள்

 கிறிஸ்துவம் தமிழர் மெய்யியல் சனாதனப் பண்பாட்டை பற்றி பொய் சொன்னால் கோடிக் கணக்கில் பணம் தருகிறது  - சினிமா கதை வசனம் எழுதுபவரும்,  மார்க்சீய எழுத்தாளர் ஜெயமோகன்

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.. 
2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்...
 4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.. 
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்... 
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.. 
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
 8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில். 
9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
 10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,  அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
                                
 குறிஞ்சிமுருகன் முல்லை திருமால் மருதம் இந்திரன் நெய்தல் வருணன் பாலைகொற்றவை தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி தமிழகம் இந்துக்களின் பூமி.
நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம் மாறிய குற்றவுணர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான்.
 
தமிழர் பண்பாட்டை தமிழரின் வேர்களை அழித்தால் மட்டுமே கிறிஸ்தவ மதமாற்றம் நிகழும். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி எனவும் கம்ப இராமாயணம், பெரிய புராணம் இவற்றை கீழ்த்தரமாக மேடையில் பேசியது சர்ச் உளவியல் தாக்குதல் கருவிகளே.  தற்போது தமிழன் இந்து அல்ல என சொல்வது சைவம் வைணவம் முருகவழிபாடு எல்லாம் சேர்ந்தது தான் இந்து மதம்.
 இந்து மட்டுமே தமிழில் பெயர் வைக்கிறான். தமிழரின் இறைவன் கோவில்களுக்கு சென்று தமிழ் பண்பாட்டை காப்போம்
 
தமிழ் மூதாட்டி ஔவையார் - விநாயகரை தான் தமிழ் கடவுள் என் முத்தமிழ் கேட்டார். மனித நேயமற்று பண்பாடு இன்றி  - சர்ச் அடிமை திராவிடம் மற்றும் தலித்தியம் பேசுவோர் என   சரக்கு மிடுக்கு எனக் கீழ்த்தரமாக பேசியவர் தற்போது இப்படி பேசுகிறார் என்றால் ஜெயமோகன் சொன்னபடி பெரும்பணம் சர்ச் தந்துள்ளது என்பது திண்ணம்.




 
 

 

No comments:

Post a Comment