Sunday, January 10, 2021

யூதர் பஸ்கா – பெந்தகோஸ்தே – கூடாரம் இயற்கை வழிபாடு பண்டிகைகள்

இஸ்ரேலின் தொல்லியல் அகழாய்வுகள்படி இஸ்ரேலியர்  இறைவனை அறியாத ஒரு நாடோடி சமூகம், இயற்கை வழிபாடு தாய் தெய்வ வழிபாடு  கொண்டவர்களாக பொமு 6ம் நூற்றாண்டு வரையிலும் வாழ்ந்தனர் என்பது 1000க்கும் அதிகமான பெண் தெய்வ சிலை கிடைத்துள்ளது தெளிவாக காட்டுகிறது.
 அமெரிக்க பைபிள் சார் தொல்லியலாளரான பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் தொல்லியல் தரவுகள்படி இஸ்ரேலில் இருந்தது ஒரு இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டு சமயம் எனக் கூறுவார்.
யூதர் பண்டிகை எல்லாமே இயற்கை வழிபாடு பண்டிகைகள்,  என கீழுள்ள நூலில் ஆசிரியர் கூறுகிறது என்பதை நாம் விரிவாகக் காண்போம்
யூத மத தொன்மக் கதை எபிரேயப் பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய பண்டிகைகள் பற்றிய உண்மைகளை அறிவோம், முதலில் தொல்லியல் வரலாறு பற்றி காண்போம்.
இந்த மூன்று பண்டிகை தினங்களில் இஸ்ரரேலியரின் சகல ஆண்களும், குழந்தைகளும் தொன்மக் கதை சட்டப்படி இஸ்ரேலியருக்கான தெய்வமான யாவே கர்த்தரின் ஒரே ஆல்யம் வந்து யூத லேவியர் ஜாதி பாதிரி ஆசிர்வதித்த பின் கொலைப்பலி தரவேண்டும்.
 பஸ்கா பண்டிகை 
புளிப்பில்லாத அப்பம் பண்டிகை என்னும் இந்தப் பண்டிகை, வருடத்தின் முதல் அறுவடையினை தெய்வத்திற்கு படைத்து புத்மை துவக்கம் குறிக்கும் இயற்கை வழிபாடு பண்டிகை.
லேவியராகமம்: 23:6 “அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும்.   9 மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை லேவியர் ஜாதி பாதிரியிடம் கொண்டு வரவேண்டும். 11 லேவிய  பாதிரி அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். லேவிய  பாதிரி அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக் கிழமை காலையில் செய்ய வேண்டும்
பெந்தெகோஸ்தே பண்டிகை 
வாரங்களின் பண்டிகை. பிரதான லேவிய  பாதிரிர் முதற்பலனான கதிர்க்கட்டை செலுத்தும் அசைவாட்டும் திருநாளில் இருந்து, சரியாக 50 நாட்கள் கழித்து வருவதே வாரங்களின் பண்டிகை.                                           
லேவியராகமம் 23:15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள்.  20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் லேவிய  பாதிரிகளுக்கு உரியவை.   
கூடாரப்பண்டிகை 
ஏழாம் மாதமான திஸ்ரியின், 15ஆம் நாள் தொடங்கி ஏழு நாட்கள் அனுசரிக்கப்பட்டது இந்த பண்டிகையின் பொழுது, இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கூடாரங்களில் வாசம்பண்ண வேண்டும்.

லேவியராகமம் 23:33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும்.   
 
  

எபிரேய பைபிள் தொன்ம மோசே சட்டப்படி இந்தப் பண்டிகைகள் எப்படி லேவியர் ஜாதி பாதிரியின் மூலமாக நிகழும் என எஸ்ரா6: 19-39ல் பெரிய விளக்கம் உள்ளது
விவிலியக் கதைப்படி 1000 வருடமாக எகிப்தில் இருந்து வெளியேறியதற்கான பண்டிகை என்பது கட்டுக் கதை என மேலும் இந்த வசனம் நிருபிக்கும்.
நெகேமியா 8: 17 நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். 
இஸ்ரேல் - எகிப்து தொல்லியல்பச்டி இஸ்ரேலியர் எகிப்தில் வாழ்ந்ததே இல்லை, இன்னும் சொல்லப்போனால் கானான் பகுதியில் பெரும் மக்கள் குடியேற்றமேஎ இல்லை, யூதேயா, இஸ்ரேல் எனும் நாடுகள் இருந்ததே இல்லை.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல்   "The Bible Unearthed:
பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள். 

அமெரிக்க பென்சில்வேனியா லிகாமிங் பல்கலைக் கழக கிழக்காசிய பண்டை தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் 
//What Archaeology Can Tell Us About The Reality Of Ancient Israel As Archaeological Evidence Mounted, However, In The Heyday Of “Biblical Archaeology” Between The 1930s And The 1950s, The Question Of Israelite Origins Grew More Intractable. To Everyone’sfrustration, New Data Brought More Questions Than Answers. In Fact, No One Had Ever Found Anyarchaeological Evidence For The Exodus From Egypt. // -Dever, William G. (2001), What Did The Biblical Writers Know And When Did They Know It? 

No comments:

Post a Comment