Tuesday, March 17, 2026

ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் கொடூர தாக்குதல் - 400 பேர் கொலை

400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல் By : குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 17 Mar 2026


காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக, ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவமனை மீது தாக்குதல் - 400 பேர் பலி

திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள, பெரிய போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான மீட்பு பணிகள் முடிவுறும் சூழலில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மருத்துவமனையின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.  மீட்புக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன. உள்ளே இருந்தவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டும்.. மறுப்பும்..

காபூலில் பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதல் ஒரு அத்துமீறல் மற்றும் மனிதநேயமற்ற செயல் என ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், காபூலில் எந்த மருத்துவமனையையும் குறிவைத்து தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷாரஃப் ஜைதி, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறினார். காபூல் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உபகரணங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு தளங்கள் உட்பட "ராணுவ நிறுவல்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பு" மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

போஜ்சாலா 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கோயில் கட்​டிடம் - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு

  ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு  புதுடெல்லி:  மத்​திய பிரதேச மாநிலத்​தின் ...