Thursday, March 12, 2026

அம்பத்தூர் -கஞ்சா சாக்லேட் 2 கிலோ பறிமுதல் -இரண்டு பெண்கள் கைது

https://www.facebook.com/photo/?fbid=122314367594011492&set=a.122175377216011492

 சென்னை அம்பத்தூர் பகுதியில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இரண்டு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை கவனித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் பையில் ஏராளமான சாக்லேட்கள் இருந்த நிலையில் அதன் கவர்களை பிரித்து பார்க்கும் போது அந்தக் கவருக்குள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரித்ததில் வெளியூரிலிருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு இங்குள்ள கல்லூரிகளிலும் இளைஞர்கள் இடத்திலும் அதை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்திய போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...