Saturday, March 14, 2026

திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள்- NCRB டேட்டா

 
 
 
திமுக எப்போதெல்லாம் முட்டுச்சந்தில் மாட்டிக்கொள்கிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகளை அனுப்பி தங்களை காப்பாற்றிக்கொள்ளும். முதல்வர், திமுக அமைச்சர்கள் போலவே அதிகாரிகளும் பச்சை பொய்யை வாய் கூசாமல் சொல்வதில் வல்லவர்கள் ஆகிவிட்டார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினை உச்சத்திற்கு போனவுடன் அதிகாரிகளை அனுப்பியிருக்கிறது திமுக. அவர்களும் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று டேட்டா கொடுக்கிறார்கள். அதுவும் பொய்யான டேட்டா. திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் பற்றி ஒப்பீடு செய்து, NCRB டேட்டாவுடன் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். அந்த ஆதாரங்கள் கீழே. அதிமுக ஆட்சியை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழநதைகளுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திக்கிறது. போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கேட்டால் இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்களாம். அதிமுக ஆட்சியில் புகார் கொடுக்கவே பயந்தார்களாம். திமுகவின் நோக்கம் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்வது என்பது மட்டும் தான். அதற்காக எந்த பொய்யை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற இடத்துக்கு வந்து விட்டார்கள். புதிய தலைமுறை விவாதத்தில் கலந்து கொண்ட எவிடென்ஸ் கதிர் அவர்கள் கொடுத்த அதே புள்ளிவிபரங்கள் தான் நானும் கொடுத்திருக்கிறேன். இவையனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பற்றி பேசுவதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், 2024-25, 2025-26 டேட்டாவை இன்னும் NCRB-க்கு கொடுக்கவே இல்லை. மத்திய அரசிடம் கொடுத்தால் தங்கள் வண்டவாளம் வெளியே தெரிந்து விடும் என்று ஆவணங்களையே வெளியே விடாமல் மறைத்து நாடகம் ஆடுகிறார்கள். இந்த லட்சணத்தில் மேடைக்கு மேடை "ஒன்றிய அரசே சொல்லிவிட்டது" என்று பொய்களை சொல்லிவருகிறார் முதல்வர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ வழக்குகள், எஸ்சி எஸ்டி பட்டியிலினத்தவர்களுக்கு எதிரான வழக்குகள், கஞ்சா, போதை மருந்து வழக்குகள் எல்லாமே வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே ஒரே நோக்கமாக செயல்படும் முதல்வர் தான் நமக்கு வாய்த்திருக்கிறார். By
@smartmookan
https://x.com/BS_Prasad/status/2032648989238243717/photo/4

No comments:

Post a Comment

Sabarimala - Anti people Nazi CPM changes stand on women entry

Sabarimala affidavit (Kerala Govt 2018 to HC filing):   • Called Sabarimala a 'secular temple' open to all faiths   • Said NO decisi...