Wednesday, March 11, 2026

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

 மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

மதுராந்தகம்: மது​ராந்​தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில், தனிப்​படை போலீ​ஸார் இரு​வரை கைது செய்​தனர். தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறு​வன், கடந்த 9-ம் தேதி நள்​ளிர​வில் 14, 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாக​னத்​தில் மது​ராந்​தகம் அருகே உள்ள கீழக்​கண்டை பகு​திக்கு அழைத்து சென்​றுள்​ளார்.

தேவத்​தூர் வழி​யாகச் சென்​ற​போது, மது​போதை​யில் இருந்த மர்ம நபர்​கள் இரு​வர் அவர்​களைத் பின் தொடர்ந்​துள்​ளனர். இதனால், அச்​சமடைந்த சிறு​வன், இருசக்கர வாக​னத்தை வேக​மாக ஓட்​டிய​போது, அத்​தி​வாக்​கம் பகு​தி​யில் வாக​னம் நிலை​தடு​மாறி விபத்​துக்​குள்​ளானது.

இதில், பின்​தொடர்ந்து வந்த நபர்​கள் சிறு​வனை கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். அப்​போது, சிறு​வன் தன்​னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு 16 வயது சிறுமியை மட்​டும் வாக​னத்​தில் ஏற்​றிக்​கொண்டு சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதைப் பயன்​படுத்தி மர்ம நபர்​கள் இரு​வர், காயமடைந்த 14 வயது சிறுமியை அத்​தி​வாக்​கம் ஏரிப் பகு​திக்​குச் தூக்​கிச் சென்​று, கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

பின்​னர், அதி​காலை​யில் சிறு​வன் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சிறுமியை அனு​ம​தித்​த​தாக தெரி​கிறது. சிகிச்சை அளித்த மருத்​து​வரிடம் சிறுமி சம்​பவம் குறித்த விவரங்​களைக் கூறி​யுள்​ளார்.

இதையடுத்​து, மருத்​து​வர்​கள் அளித்த தகவலின் பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், மேல்​மரு​வத்​தூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதையடுத்​து, தனிப்​படை அமைத்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுதொடர்​பாக ஆவடி அருகே பதுங்​கி​யிருந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜியை நேற்று கைது செய்​தனர்.

இவர் மீது, கூடு​வாஞ்​சேரி காவல் நிலை​யத்​தில் கொலை முயற்​சி, திருட்​டு, வழிப்​பறி உள்​ளிட்ட 15-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் உள்​ளன. பாலாஜி கடந்த ஜனவரி மாதத்​தில் கூடு​வாஞ்​சேரி மது​பான கடை​யில் மது அருந்த வருபவர்​களிடம், கத்​தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி, 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், இச்​சம்​பவத்​தில் மாரிபுத்​தூர் பகு​தியை சேர்ந்த தாமோதர பெரு​மாள் (25) என்​பவரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு கோயி​லில் நகை திருட்டு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட தாமோதர பெரு​மாள், செங்கை மாவட்ட சிறை​யில் இருந்​த​போது காக்கா பாலாஜி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வரும் சிறை​யில் இருந்து வெளி​யில் வந்த பின்​னர், இந்த பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் ஈடு​பட்​டிருப்​ப​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

திமுக ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகள் வாழத் தகு​தி​யற்ற மாநில​மாக தமிழகம் மாறி​விட்​டது என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்​, பாமக தலை​வர்​ அன்​புமணி கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் நேற்று ஆஜராகி, ‘மதுராந்தகம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருவது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரி முறையீடு செய்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, “இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” என்று அறிவுறுத்தினார்.


Madurantakam Case | கட்சி கொடி கட்டிய காரில் பா*யல் கைதி?

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப்பா*யல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி காக்கா பாலாஜி, சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமாள் ஆகியோர் கைது

திமுக கட்சியின் கொடி கட்டிய காரில் பா*யல் கைதி தாமோதர பெருமாள் அழைத்து வரப்பட்டதாக வெடித்த சர்ச்சை; செய்தியாளர்கள் பார்த்தவுடன் காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டதாக தகவல்

No comments:

Post a Comment

College Convocations- Jospeh Vijay film songs played

Songs from #TVKVijay‌ election campaign played at convocations of colleges in #Coimbatore courting controversy. The songs were "Raava...