ராஜீவ் காந்தி மீது 35 பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவேராமசாமியார் சொன்னதை-"Enjoyment without Responsibility" விவிலிய வாக்காக திராவிட மாடல்
கட்சியில் உள்ள பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, மார்ச் 13, 2026 அன்று அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக புதிய பெண் நிர்வாகி மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 35 இளம் பெண்கள் ராஜீவ் காந்தி மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு சொல்லிய நிலையில் அவருக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது:
ஜெயா டிவி.
“உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர், துணை முதலமைச்சர் எல்லாம் பெரிய பதவியில் இருக்கலாம்… ஆனா அவர்களை விட அதிக அறிவாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவன் நான் தான்” என்று தன்னைத்தானே புகழ்ந்து பேசிக் கொண்டு, கட்சிக்குள் தன்னை ஒரு பெரிய அரசியல் ஸ்டாராக காட்டிக் கொண்டு சுற்றி வருகிறார் இந்த நிர்வாகி. மேடையில் பேசும்போதும், கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் தன்னை மிகப் பெரிய அரசியல் தந்திரவாதி போலவே காட்டிக் கொள்கிறார்.
“அடுத்த தேர்தலில் நான் எம்எல்ஏ ஆகிவிடுவேன், அதற்குப் பிறகு அமைச்சர் ஆகிவிடுவேன்… உங்களுக்கெல்லாம் நல்ல நல்ல பதவிகள் கொடுக்கப் போகிறேன்” என்று ஆசை வார்த்தைகளை வீசுவது இவருடைய முக்கிய அரசியல் திட்டம். இந்த வார்த்தைகள் பொதுக் கூட்டத்திற்காக அல்ல; கட்சியில் உள்ள இளம் பெண் நிர்வாகிகளிடம் தனியாக சொல்லப்படும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
அதற்காகவே கட்சியில் வேலை பார்க்கும் இளம் பெண்களை வாட்ஸ் அப், instagram மற்றும் பேஸ்புக் மூலம் தனியாக தொடர்பு கொள்கிறார். “நீங்கள் தான் கட்சியின் எதிர்காலம்… உங்களை நான் முன்னேற்றப் போகிறேன்… நான் சொன்னால் உங்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்” என்று ஆரம்பித்து உரையாடலை மெதுவாக தனிப்பட்ட பாதைக்கு தள்ளுகிறார்.
எங்கெல்லாம் இந்த ராஜீவ் காந்தியை கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கிறார்களோ அந்த பகுதிகளில் உள்ள இளம் பெண் நிர்வாகிகளின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்து, இரவு நேரங்களில் “பார்ட்டி வேலை பேசணும்… உங்கள் future பற்றி பேசணும்” என்று மெசேஜ் அனுப்புகிறார். ஆரம்பத்தில் கட்சி வேலை, தேர்தல் திட்டம், பிரச்சாரம் போன்ற விஷயங்கள் பற்றி பேசுகிறார்; சில நிமிடங்களில் உரையாடலை தனிப்பட்ட நெருக்கமான விஷயங்களாக மாற்றுகிறார்.
அதற்குள் “ஒரு small puzzle கேட்கட்டுமா?” என்று ஆரம்பிப்பதும் இவருடைய ஸ்டைல். “70 ல இருந்து 1 குறைத்தா என்ன?” என்று கேட்பார். அவர்கள் சிரித்துக் கொண்டு “69” என்று பதில் சொன்னவுடன், “அப்படியா… அதுவே என் favourite number… politics லயும் life லயும் அந்த number தான் lucky” என்று சிரித்து உரையாடலை வேறு பாதைக்கு தள்ளுகிறார்.
அடுத்ததாக, “ஒரு small question… world ல romantic capital எந்த city தெரியுமா?” என்று கேட்பார்.
அவர்கள் “Paris” என்று சொன்னவுடன், “அப்படித்தான்… Paris ல இருந்து வந்த ஒரு special greeting style இருக்கு… அது handshake மாதிரி இல்ல, ரொம்ப close ஆனவர்கள் தான் use பண்ணுவாங்க” என்று சிரிப்பார்.
அவர்கள் “அதென்ன greeting?” என்று கேட்டால், “அது French kiss நாம politics ல close friends ஆகிட்டோம்னா அந்த style புரியும்” என்று இரட்டை அர்த்த கிண்டல் போட்டு உரையாடலை சங்கடப்படுத்துவார்.
அதோடு மட்டும் நிற்காமல் “politics ல முன்னேறணும்னா இரண்டு பேருக்கும் chemistry match ஆகணும்… leader follower மாதிரி இல்ல, equal understanding இருக்கணும்” என்று சொல்லி உரையாடலை இன்னும் நெருக்கமான திசைக்கு இழுத்துச் செல்கிறார். பெண்கள் சிரித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ள முயன்றாலும் “நீங்க ரொம்ப innocent போல நடிக்கிறீங்க… ஆனா politics ல இருக்கிறவர்களுக்கு எல்லாம் புரியும்” என்று மீண்டும் இரட்டை அர்த்த காமெடி போட்டு சங்கடப்படுத்துகிறார்.
அதற்குப் பிறகு “நான் உங்களை special ஆ பார்க்கிறேன்… எல்லாருக்கும் நான் இப்படி time கொடுக்க மாட்டேன்… (எல்லோருக்கும் இப்படி நான் ஃப்ரீயா டைம் கொடுக்க மாட்டேன் என்று குற்றம் சாட்டு கூறிய 35 நபர் இடமும் சொல்லி இருக்கிறார்) நாம தனியா சந்திச்சு பேசலாம்” என்று சொல்லி அவர்களை தனியாக சந்திக்க அழைக்கிறார். பெண்கள் தயக்கம் காட்டினால் “நீங்க என்னை தவறாக புரிஞ்சுக்காதீங்க… நான் உங்களுக்கு help பண்ணுறதுக்காகத்தான்… உங்க career நம்ம கையில் இருக்கு” என்று மன அழுத்தம் கொடுக்கிறார்.
இதுவரை சுமார் 35 பெண்கள் இவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஆனால் காவல்துறை இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரு எளிய புகார் கூட FIR ஆக மாறவில்லை.
கட்சிக்குள்ளே பல பெண்கள் இவரைப் பற்றி புகார் கூறிக் கொண்டிருக்கும் நிலையிலும், அதற்குப் பதிலாக “நல்ல வேலை செய்கிறார்” என்று பாராட்டு சொல்லி கொள்கை பரப்பு செயலாளர் போன்ற புதிய பதவியை கொடுத்து அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறது திமுக.
இதுதான் திராவிட மாடல் அரசியல். என்னென்ன கேவலம் செய்ய முடியுமோ அதை எல்லாம் வெக்கமே இல்லாமல் செய்து காட்டினால் தான் கட்சியில் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஒரு புதிய அரசியல் கலாசாரம் இங்கே உருவாகி நிற்கிறது. நன்றி ஜெயா டிவி சிறப்பு நிருபர்..
இப்போது புரிகிறதா பெண்கள் ஏன் அரசியலுக்கு வர தயங்குகிறார்கள் என்று?.
No comments:
Post a Comment