Wednesday, March 11, 2026

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொலை

விளாத்திக்குளம் மாணவி கொலை! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்! 6 தனிப்படை அமைப்பு! 


 By Vishnupriya R Updated: Thursday, March 12, 2026  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மார்ச் 9 இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த அவர், இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை சுப்புராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குளத்தூர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்ட பின்னரே புகார் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மார்ச் 10  இரவு காட்டுப் பகுதியில் தேடியபோது, அந்த மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் முகத்தில் சிதைக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், புகார் அளிக்கச் சென்றபோது அலட்சியமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி மதன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-class-12-student-found-dead-following-alleged-sexual-assault-and-murder-11204723
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொன்ற வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.

வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனராம். 

இதையடுத்து நேற்றைய தினம் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து கனிமொழி தனது கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்" என தெரிவித்துள்ளார். 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட பதிவில், மாணவி காணாமல் போனதும் குடும்பத்தினர் புகார் அளித்தும் குளத்தூர் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல்துறை அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/6-special-teams-formed-to-nab-accused-in-thoothukudi-plus-2-student-murder-case-780611.html
 


No comments:

Post a Comment

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

  மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது https://www.facebook.com/photo/?fbid=1409974871165984&set=a.385...