Thursday, March 12, 2026

கிராமப்புர & எஸ்சி- எஸ்டி மாணவர் உயர்தர நவோதயா பள்ளி கல்வியை மறுக்கும் திராவிட அரச பயங்கரவாதம்




விசிக எம்பி விழுப்புரத்தில் நவோதயா பள்ளி வேண்டும் எனக் கோரிக்கை 

https://timesofindia.indiatimes.com/city/chennai/mp-wants-navodaya-schools-for-scs-in-villupuram/articleshow/103795844.cms#:~:text=Villupuram%3A%20Villupuram%20MP%20D%20Ravikumar,with%20a%20significant%20SC%20population.


நவோதயா பள்ளிகள் மத்திய அரசின் முழு நிதியில் இயங்குவது பட்டியல் ஜாதியினருக்கு முழுவதும் இலவசம் பிற்பட்ட மக்கள் ஜாதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு மேல் குறைந்த கட்டணம் இங்கு படிப்பவர்கள் ஐஐடிஜி மற்றும் வீட்டில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார்கள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என 39 பள்ளிகள் 30 வருடமாக தமிழகத்திற்கு வராமல் பல்லாயிரம் கோடி நஷ்டம் இப்பொழுதாவது திருத்தங்கள் திராவிடம் தமிழர் எதிரி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது





Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
@BS_Prasad
நீதிபதி:
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவோதயா பள்ளி என்ற அடிப்படையில் சுமார் 38 நவோதயா பள்ளிகளை மத்திய அரசு தர தயாராக இருக்கிறது. அப்படியானால் ஏன் சார் தமிழ்நாடு அரசு இதை எதிர்க்கிறது?

வில்சன் (தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்):
நவோதயா பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்தால் இந்தி திணிப்பு நடக்கும் சார். இந்தி ஒரு பாடமாக வைத்து மாணவர்களை படிக்கச் சொல்வார்கள். பிறகு தமிழ் மொழி மெதுவாக அழிந்து போய்விடும். அந்த பள்ளிகளுக்கே பெயர் இந்தியில் தான் வைப்பார்கள், தமிழில் வைக்க மாட்டார்கள்.

நீதிபதி:
உங்களுடைய பெயரே தமிழ் இல்லை. வில்சன் என்பது இங்கிலாந்து நாட்டின் சர்நேம். அதற்காக நீங்கள் இங்கிலாந்து நாட்டுக்காரர் என்று நான் சொல்லவில்லை.
ஒரு பள்ளியில் 2000 மாணவர்கள் என்றால், 38 பள்ளிகளில் சுமார் 76,000 மாணவர்களுக்கு இலவசமாக தரமான ஆங்கில வழி கல்வி கிடைக்கப் போகிறது.

இதே கல்வியை இப்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள். அந்த கல்வி இலவசமாக கிடைக்கும்போது அதை ஏன் சார் நீங்கள் தடுக்கிறீர்கள்?

நீதிபதி (தொடர்ந்து):
இப்போது கூட உங்கள் மாநிலத்தில் 52 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்.
அவர்களில் 40 சதவீதம் பேர் இன்றும் இந்தி படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்போது தமிழ் அழியவில்லையே?

உங்களுடைய மொழி அரசியலை ஏன் சார் நீதிமன்றத்தில் கொண்டு வருகிறீர்கள்?

வில்சன்:
இது திராவிட மாடல் அரசு சார். இந்தி. மொழி ஆதரவு கிடையாது சார்..

நீதிபதி:
அப்படியானால் இதை கேட்கிறேன்.
மொழி எதுவாக இருந்தாலும்,
* மாணவர்களுக்கு தரமான கல்வி
* ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பொருளாதார சுமை இல்லாத கல்வி
இதுதானே அரசின் கடமை?

76,000 மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய கல்வியை,
மொழி அரசியல் என்ற பெயரில் தடுத்து,
அந்த மாணவர்களின் பெற்றோர்களை ஆண்டுதோறும் இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வைப்பது —
இது சமூக நீதி தானா?

(நீதிமன்றத்தில் மௌனம்)

மொழி அரசியலுக்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசியல்வாதிகளை, மக்கள் இனிமேல் உதறி தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக ஒரு கற்பனை கலந்த உரையாடலை இங்கு வடிவமைத்திருக்கிறேன் இது நீதிமன்றத்தில் நடந்தது கிடையாது... விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்..

No comments:

Post a Comment

Boy Irrefular to madrasa chained

Boy Irrefular to madrasa  chained  Another Old Incident https://www.deccanherald.com/india/slow-learner-boy-chained-madrasa-2365081