' திமுக கூட்டணிக் கட்சிகள் பிரிந்து போகும். திமுகவும் காங்கிரஸும் ஒன்றையொன்று சரமாரியாக தாக்கிக் கொள்ளும். த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு தரும். விஜய்யும் ராகுலும் இணைவார்கள். த.வெக. காங்கிரஸ் கூட்டணி உருவாகும்.
' திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகளும் விஜய்யை ஆதரிக்க முன் வரும்.
திருமாவளவனும் கம்யூனிஸ்டுகளும் விஜய்யை பாராட்டிப் பேசுவார்கள். விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று பிரேமலதா சொந்தம் கொண்டாடுவார்.
' அதிமுகவில் எடப்பாடி க்கு எதிர்ப்பு தோன்றும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் த.வெ.க. பக்கம் செல்வார்கள்.
' விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க ' பெரியார் மண்ணில் திராவிடக் கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் ' என்ற அடிப்படையில் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க முயற்சிக்கும் ' என்றெல்லாம் கண்டபடி எழுதியிருந்தேன். ஆனால் பாருங்கள், அப்படியே நடந்து கொண்டிருக்கின்றன.
அரசியல் கோமாளித்தனம் ஒண்ணரை பக்க நாளேட்டின் பலம் என்று நிரூபணமாகிறது.
விஜய்க்கு ' தமிழகம் காத்த தலைவர் ' என்று வீரமணி விருது வழங்குவார் என எழுதியிருந்தேன். அது மட்டும்தான் பாக்கி. அது எப்போது நடக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
-துக்ளக் சத்யா.
https://www.facebook.com/satyanarayananthuglak.thuglaksathya/posts/pfbid0VTvq9Aa3sLWKoZ8foTvAY4Vdd7HdSpwsWU7rZL3MQrsgdNFJtSofSPmo8wZqrypwl?__cft__[0]=AZY44dKvRz3f8M4GfOjnXoRYGWYFlZgR5bCWdaxOl993RSKZdjACuuVp8DqoXxsTwbAXzE_LEnqLVWxubbJZ9PV1DkwLcj57bYBU7frmU4BHuiThwZjvo4E_9UXSr5VjQWaQK4XawYshYeTahL6eI7E2t4lnodewCrEBIi1yTo1k6xjGtNkcTSoehumlx4TyJdU&__tn__=%2CO*F




No comments:
Post a Comment